Monday, October 26, 2009

விசித்திர மூடத்தனம் இன்றும் தேவையா?-கி.வீரமணி

நோபல் பரிசு போல, நம் நாட்டில் சிறந்த ஒரு ஏற்பாடு செய்யவேண்டுமானால், தலைசிறந்த மூட நம்பிக்கையாளர்களைத் தேர்வு செய்து அவர்களுக்குத் தனிப் பரிசளிக்கலாம்!

நேரிடையாக அவர்களுக்கு அழைப்புக் கொடுத்து நடத்துவதற்குப் பதிலாக, ரொம்ப விசித்திரமான மூட நம்பிக்கையாளர்பற்றி ஏடுகளில் குறைந்தபட்சம் விடுதலை போன்ற பகுத்தறிவு நாளேடுகளிலாவது அதுபற்றி முழுத்தகவல்களைத் தந்து, பகுத்தறிவை வளர்க்கும் நூல்களைப் பரிசாக அளிக்கலாம்; இல்லையேல் இருட்டில் இருக்கும் இவர்களை வெளிச்சத்திற்கு வர அடையாளச் சின்னமாய் டார்ச்லைட்டினையோ, மற்ற சில வெளிச்சம் தரும் பொருள்களையோ பரிசளிக்கலாம்.

இதோ இன்று ஆங்கில நாளேடு ஒன்றில் வெளியான சுவையான மூட நம்பிக்கையின் உச்சமான செய்தி:

பாட்டியாலாவில் (பஞ்சாப்) உள்ள கான்பூரில் ஒரு கோயில் இருக்கிறது. அதில் விசித்திரமான வகையில் வழிபாடு நடக்கிறது, நாய்களுக்கு.

சீ நாயே! என்று யாரும் அங்கே திட்ட முடியாது; பயபக்தியுடன் கும்பிட்டு வழிபடல் வேண்டும். அந்நாய்கள் உண்ட பிறகே அங்கே உள்ள கிராமப்புற மக்களுக்கு ஊரில் சாப்பிட உரிமையாம். உணவு பொது சமையல் கூடத்திலிருந்து பரிமாறப்பட்டு, சாப்பிட அனுமதியாம்!

அதுவும் எப்படி தெரியுமா?

நீண்டகால பாரம்பரிய பழக்கவழக்கத்தையொட்டி கோயில், நாய்களுக்கு மூன்று வேளை உணவு! முக்கால பூஜை நடத்திய பிறகே _ அதாவது பைரவமூர்த்தி (நாய்)க்கு உணவு படைத்துச் சாப்பிட வைத்த பின்பே ஊர் மக்களுக்குச் சாப்பிடும் உரிமையும், அனுமதியும் உண்டாம்!

ஆனந்தகிரி என்ற தலைமை அர்ச்சகர் மூன்று காலமும் கோயிலுக்குள் வருவார்; நுழைந்தவுடன் நாய்போல் குரைப்பாராம்! உடனே குரல் கேட்டு, நாய் பகவான்கள் மூவர் வந்தவுடன் மிகுந்த மரியாதை, பயபக்தியுடன் அவர்களுக்கு உணவு பரிமாறப்படுமாம்.

அதுவும்கூட சமைத்துள்ளவைகளில் எவை மிகச் சிறந்தவையோ அவைகளை அவர்களுக்கு அமுது படைக்கப்படுமாம்! ஊர்க்காரர்கள், மக்கள் அதன் பிறகே சாப்பிடவேண்டுமாம்! இது அரச கட்டளை!

இந்த நாய்க் கடவுள்கள் பூஜை எப்படி வந்தது என்பதும் மிகுந்த சுவையான கதையாகவல்லவா இருக்கிறது!

அக்கால மாதம் மும்மாரி பொழிகிறதா? என்று கேட்கும் நமது தெருக்கூத்து ராஜாவைவிட, மிகவும் கேவலமாக இருக்கிறது!

முன்பொரு காலத்தில் பாட்டியாலாவின் மகாராஜா அப்போது அரச குடும்பத்தைச் சேர்ந்த_ கேப்டன் அமீரீண்ட சிங் அவர்களின் முன்னோர்களில் ஒருவரான ஆலா (கிறீணீணீ) சிங் என்ற ராஜா, தாசிகளிடையே ஒரு வகையான விசித்திரமான போட்டியை தர்பாரில் நடத்தினாராம்!

ஒரு விலைமாது அப்போட்டியில் 50 கிலோ கஞ்சாவை உட்கொண்ட பின்பும் ஸ்டெடி(ஷிமீணீபீஹ்)யாக ஆடாமல், அசையாமல் அப்படியே சிலை போல் நின்றாராம்; இதனைப் பார்த்த ராஜா, வியந்து பரிசு அளித்தாராம்!

1695_1765 என்ற காலகட்டத்தில் வாழ்ந்த அந்த மகாராஜா இந்த விலைமகளான பெண்ணுக்கு 150 ஏக்கர் பிகா எஸ்டேட்டினை பரிசாக வழங்கினாராம்.

இந்த விசித்திர குணாதிசயம், ரசனைமிக்க அந்த ராஜா, மற்றொரு அரசு ஆணையையும் போராட்டாராம்!

நாய்கள் சக்தி வாய்ந்த கடவுள்கள் ஆகும். எனவே, கான்பூர் கோயிலில் உள்ள சாமிக்கு பூஜை செய்து முதல் கவளம் உணவை இந்த இரண்டு, மூன்று நாய்களுக்குப் படைக்கவேண்டும் அந்தக் கோயில் அர்ச்சகர்.

அதற்குமுன் காலையிலும், மாலையிலும் அமுது படைக்கும் முன்பு கோயில் அர்ச்சகர் நாய் மாதிரி குரைப்பாராம்! சத்தமாக குரைத்தவுடன், நாய்கள் ஓடோடி வந்து, உடனே அந்த கவள உணவையும், மற்றதையும் சேர்த்து சாப்பிடுமாம்!

அதன் பின்னரே, அந்தக் கோயில் மணி ஓசை வந்த பிறகே, ஊர்ப் பொதுமக்கள் உணவு உண்பார்களாம். இன்றுவரை இந்த மூடப்பழக்கம் (பஞ்சாப்) பாட்டியாலாவில் நீடிக்கிறதாம்! அர்ச்சகர் குரைக்க, நாய்கள் ஓடோடி வந்து உணவு உண்ட பின்பு, ஊர் மக்கள் சாப்பிட வேண்டும் என்கிற வழக்கம் தொடருகிறதாம், இன்றைக்கும்!

வயதான முதியவர்களிடம் இதுபற்றி எந்த எதிர்ப்பும் இல்லையாம்! ஆனால், படித்த இளவட்டங்கள் இதனைப் பரிகசித்து எதிர்க்குரல் கொடுத்து கலகம் செய்யத் தொடங்கிவிட்டனராம்!

ஆனந்தகிரி என்ற அர்ச்சகர் அய்யர் குரைத்து, நாய்களை அழைப்பது 16 ஆம் நூற்றாண்டிலிருந்து 21 ஆம் நூற்றாண்டுவரை நீடிக்கிறதாம்!

என்னே மடமை!

பக்தி வந்தால் புத்தி போகும் என்று எவ்வளவு அழகாகச் சொன்னார் தந்தை பெரியார் அவர்கள்!

பரவாயில்லை, நம் நாட்டில், எச்சில் இலையில் உள்ள மிச்ச உணவுக்கு நாய்களுடன் போட்டியிட்டு மனிதன் சாப்பிடும் கொடுமையான காட்சி அங்கில்லை என்றுகூட புது வியாக்கியானம் கூறி புகழும் மனிதர்களும் இருப்பார்கள்!

மேலை நாடுகளின் அமெரிக்கா, இங்கிலாந்தில் நாயாகப் பிறப்பது _ மனிதனைவிட _ அரிய வாய்ப்பு ஆகும்; காரணம் அவ்வளவு கவனிப்பு பாசப் பொழிவு எல்லாம் நாய்களுக்குக் கிடைக்கும்.

தாய், தந்தையை விட்டுவிட்டு வாழும் அவர்கள் நாய்களையே மிகவும் விரும்பி நேசிக்கிறார்கள்; அங்கே ஒரு நாயைத் திட்டினாலும் அதன் எஜமானர் நீதிமன்றம், வழக்கு என்றுகூடப் போய்விடுகிறார்கள்! அவர்களை வைதால்கூட மறந்து மன்னித்து விடுவார்கள்!

நாய்க்கு உயில் எழுதி வைப்பவர்கள் பலர் அங்கே உண்டு!

நன்றிக்கு நாயைச் சொன்னாலும் இப்படியா? கொடுமை! கொடுமை!! காரணம் நாய் பைரவர்; கடவுளின் வாகனம் என்று குத்தப்பட்ட மூட நம்பிக்கையே!

பக்தி முற்றிய பலர், அதிக அடக்கத்துடன் நாயடியேன் என்று தங்களை அழைத்துக் கொண்டது இம்மாதிரி அந்தஸ்து அடுத்த உலகிலாவது கிடைக்கும் என்பதாலா?

மூட நம்பிக்கையின் தொட்டில் இல்லையா, இது?

Saturday, October 10, 2009

இந்தித் திணிப்பை எதிர்த்து ராஜ்யசபையில் அறிஞர் அண்ணா முழக்கம்


பிற இதழ்களிலிருந்து
ஒற்றுமையாக இருக்கவேண்டுமா? ஒரே மாதிரியாக இருக்க வேண்டுமா? இந்தித் திணிப்பை எதிர்த்து ராஜ்யசபையில் அறிஞர் அண்ணா முழக்கம்
(இந்தி மொழி மட்டுமே இந்தியாவின் ஒரே ஆட்சி மொழியாக இருக்கும் என்ற அரசமைப்புச் சட்டப் பிரிவினை எதிர்த்து தமிழகத்தில் 1965 இல் மாபெரும் போராட்டம் நடைபெற்றது. இந்தி மொழி பேசாத மாநில மக்கள் விரும்பும் வரை, ஆங்கிலமும் ஆட்சி மொழியாகத் தொடரும் என்று பிரதமர் நேரு அவர்கள் அளித்த வாக்குறுதி இப் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைத்தது. இவ்வாறு ஓய்ந்து போயிருக்கும் ஒரு உணர்வு பூர்வமான பிரச்சினையை மறுபடியும் மத்திய மனித வள-மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் எழுப்பத் துணிந்திருக்கிறார். நாடு மு

ழுவதிலும் ஒரே மாதிரியான பாடத்-திட்டம் வேண்டும், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தேவையில்லை என்பது போன்ற அரைவேக்காட்டுத்தனமாக கருத்துகளை அள்ளித் தெளித்த அவர் இப்போது மொழிப் பிரச்சினையைத் தேவையற்ற நிலையில் எழுப்புகிறார். மத்திய அரசின் ஆட்சி பொறுப்பில் தலைமை ஏற்றிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும், தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கும் தி.மு.க.வுக்கும் இடையே சுமுகமான நல்லுறவும், ஒத்துழைப்பும் நிலவி வரும் இன்றைய சூழ்நிலையில் அதனைக் குலைக்கும் வகையில் பேசி வரும் கபில் சிபலை காங்கிரஸ் தலைமை கட்டுப்படுத்தும் என்று நம்புகிறோம்.


இந்த சூழ்நிலையில் அன்று மாநிலங்களவையில் அறிஞர் அண்ணா இப் பிரச்சினை பற்றி பேசியதை இங்கு வெளியிடுவது பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகிறோம்.)
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 343 ஆவது பிரிவின்படி 1965 ஜனவரி 26 முதல் இந்திய நாட்டின் ஆட்சிமொழியாக இந்தி ஆகவேண்டும்.

இந்தித் திணிப்பிற்கு எதிரான தங்களுடைய பலத்த எதிர்ப்பைத் தெரிவிக்க 1965 ஜனவரி 26 அன்று ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்த தமிழ்நாட்டு மக்கள் தங்களைத் தயார்படுத்திக் கொண்டிருந்தனர். இப்போராட்டத்தின் விளைவாக மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை உருவாகும் என்று அப்போதைய சென்னை மாநில முதலமைச்சராக இருந்த பக்தவத்சலம் கருதினார். 1965 ஜனவரி 25 அன்று இரவு அண்ணாவும் அவரது கட்சியைச் சேர்ந்த 3000 தொண்டர்களும் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் 1965 பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதியன்றுதான் விடுதலை செய்யப்-பட்டனர். இந்த இடைப்பட்ட ஒரு வார காலத்தில் பொதுமக்கள் கடுங்-கோபத்தில் வெகுண்டெழுந்தபோது, மாநிலத்தின் பல பகுதிகளில் மாநில வரலாற்றில் இதுவரை காணாத அளவில் வன்முறை வெடித்தது. திரு சி.சுப்பிரமணியம் மற்றும் திரு ஓ.வி.-அழகேசன் என்ற இரு காங்கிரஸ்-காரர்கள், மொழிப் பிரச்சினை காரண-மாக தங்களின் மத்திய அமைச்சர் பதவியைத் துறந்தார்கள். அண்ணாவும் தி.மு.கழகத்தின் இதர தலைவர்களும் கைது செய்யப்பட்ட பிறகு, இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் தலைமையை மாணவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

சிறையில் இருந்து விடுதலை பெற்ற பின், அண்ணா அவர்கள் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்-கும் தீர்மானம் மீது மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு பேசினார். தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தினைத் தொடர்ந்து நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களுக்கு தங்களின் தி.மு.-கழகத்திற்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்று ஆணித்தரமாக வலியுறுத்து-வதற்கு அந்த வாய்ப்பை அண்ணா பயன்படுத்திக் கொண்டார்.
இந்தி எப்போதுமே ஆட்சி மொழி-யாக வரக் கூடாது என்று பிடிவாதமாக அண்ணா கூறவில்லை. நம்மிடையே குறிப்பிட்ட அளவுக்கு உணர்ச்சிப் பெருக்கு நிலவுவதால், இப்பிரச்-சினைக்குத் தீர்வு காண்பதற்கு, சரியான ஆட்கள் நாம் இல்லை என்று ஒரு பெரிய பொறுப்புமிக்க அரசியல் தலைவர் நிலையில் அண்ணா பேசினார்.
1965 ஆம் ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டமும், மாநிலங்களவையில் அண்ணா பேசியது போன்று அரசியல் தலைவர்கள் விடுத்த நம்பிக்கை மிகுந்த வேண்டுகோள்களும் இணைந்து, நாட்டில் இந்தியைத் திணிக்கவேண்டும் என்ற வேகம் குறைந்தது.

டிடிடி அண்ணா அவர்களின் பேச்சு
நான் கூற விரும்புவது இதுதான். காலப் போக்கில் இந்தி மொழியை நாட்டின் சட்டப்படியான இணைப்பு மொழியாக ஆக்குவதைப் பற்றி நீங்கள் சிந்திக்கும் முன், உண்மையிலான இணைப்பு மொழியாக இந்தியை ஆக்கும் வழியில் நீங்கள் செயல்-படவேண்டும். எனதருமை நண்பர் வாஜ்பேயி தமிழ் மொழியைக் கற்றுக் கொண்டு அதில் இருக்கும் தமிழ் இலக்கியத் தேனை ஆழ்ந்து பருகினா-ரானால், நிச்சயம் அவர் தமிழ் மொழி-யைத்தான் இந்தியாவின் இணைப்பு மொழியாகத் தேர்ந்தெடுப்பார் என்று கூறிக்கொள்கிறேன்.


அனைத்து தேசிய மொழிகளும் ஆட்சி மொழிகளாக ஆகவேண்டும்
அதனால், நமது பதினான்கு தேசிய மொழிகளும் ஆட்சி மொழியாக ஆக இயன்ற நேரம் வரும் வரை, இணைப்பு மொழியாக ஆங்கிலம் இருக்கும் தற்போதைய நிலையே தொடருவதற்கு நாம் எந்த விதத்திலும் குந்தகம் விளைவித்து விடக்கூடாது. இந்தியாவை ஒற்றுமையாக ஒரே நாடாக வைத்திருப்பதற்காக பலமொழி என்ற விலையை நாம் கொடுத்துத்தான் ஆகவேண்டும். இந்தி மொழியைத் திணிப்பதன் மூலம் உங்களால் இந்தியாவைப் பிளவு படச் செய்துவிட முடியும். நாட்டின் அனைத்துப் பகுதி மக்களும் மனநிறைவுடன் வாழும் ஒரு இந்தியாவை நீங்கள் காண விரும்-பினால், நாட்டின் ஒரு பகுதி மற்றொரு பகுதி மீது ஆதிக்கம் செலுத்துகிறது என்று மக்கள் கருதாத ஒரு இந்தி-யாவை நீங்கள் காண விரும்பினால், கோடிக் கணக்கான மக்களின் மனதில் நியாயமான அச்சங்கள் தோன்றக் கூடாது என்று நீங்கள் விரும்பினால், நாம் ஒவ்வொருவரும் பெருமைப்-பட்டுக் கொள்ள இயன்ற இந்தியாவைக் காண நீங்கள் விரும்பினால், அனைத்து தேசிய மொழிகளையும் ஆட்சி மொழிகளாக்கும் பிரச்சினையை நீங்கள் கட்டாயமாக பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும். சுவிட்சர்லாந்து 4 மொழிகளை ஆட்சி மொழிகளாகக் கொண்டிருக்கும்போது நம்மால் ஏன் 14 மொழிகளை வைத்துக் கொள்ள முடியாது?

இதை நான் கூறும்போது, இது நடைமுறை சாத்தியமற்றது என்று எனது நண்பர் திரு. அக்பர் அலி கான் கூறினார். அது சிக்கலானதுதான்; எளி-தானது அல்ல என்பது உண்மைதான். ஆனால் அதில் உள்ள இடையூறுகள் கடக்க இயலாதவை அல்ல. நான்கு மொழிகளை ஆட்சி மொழியாக சுவிட்சர்லாந்து நாட்டினால் வைத்துக் கொள்ள முடியுமானால், நம்மாலும் பதினான்கு மொழிகளை ஆட்சி மொழி-களாக வைத்துக் கொள்ள முடியும். இந்த விஷயத்தில் எதிர்கொண்ட இடையூறுகளை சுவிட்சர்லாந்து கடந்து இருக்கிறது. அத்தகைய வழி முறை-களைக் கண்டு பின்பற்ற இயலாத அளவுக்கு அறிவுப் பஞ்சம் கொண்ட-வர்களா நாம்? எந்த இடையூறையும், சிக்கலையும் வென்று கடந்து செல்ல இயன்ற ஆற்றல் மிகு மக்களை நான் இங்கு காண்கிறேன். அந்த இடையூறுகளைக் கடக்க எங்கள் கட்சியின் உதவி தேவை எனில், அளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்கள் உதவி உங்களுக்குத் தேவைப்-படாது என்று கருதுகிறேன். ஆனால், தேவை என்று நீங்கள் பாவனை காட்டினாலும் போதும், உதவ நாங்கள் தயார். பன்மொழிக் கருத்து என்பது வெறும் மயக்க உணர்வு அல்ல; தி.மு.க. நிறைவேற்றியுள்ள தீர்மானம் அது. அதைப் பற்றி நான் அஞ்சவில்லை. வெறுக்கத்தக்கதுஅது என்று கருதாதீர்கள். முன்னர் சென்னையின் ஆளுநராக இருந்த சிறீ பிரகாசா அவர்கள் கடந்த வாரம் பன்மொழிக் கருத்துக்கு ஆதரவாகப் பேசியதுடன் பொருத்தமான ஒரு வாதத்தையும் முன்வைத்தார். மொழிவாரியான மாநிலங்-களை உருவாக்குவது என்ற முடிவுக்கு வந்த பிறகு, அதன் விளைவாக ஏற்படும் பல ஆட்சி மொழி எனும் கருத்தை ஏற்பதில் இருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ள முடியாது என்று அவர் கூறினார். நாங்கள் ஆங்கில மொழி மோகம் கொண்டிருக்கவில்லை


அனைத்து மொழிகளும் அந்த நிலைக்கு உயரும் வரை நாம் பலமொழிகளை ஆட்சி மொழிகளாகக் கொண்டிருப்போம். தமிழ் மொழி ஏற்கெ-னவே அந்த நிலையை எட்டிவிட்டது என்று நான் இங்கு அறிவிக்கிறேன். வங்காள மொழியும் அந்த நிலைக்கு வளர்ந்து விட்டது என்று எனது நண்பர் பூபேஷ் குப்தா கூறக்கூடும். நமது தேசிய மொழிகள் அனைத்-தும் அந்த நிலையை எப்போது எட்டுகின்-றனவோ, அது 1970 ஆக இருக்கட்டும் அல்லது 1980 ஆக இருக்-கட்டும், அப்-போது நாம் ஆங்கிலத்தைக் கைவிடு-வோம். அதனால், ஆங்கிலம் ஆட்சி மொழியாக நீடிக்க வேண்டும் என்று தி.மு.க. வாதிடுவது , ஆங்கில மொழி மீது நாங்கள் கொண்டிருக்கும் மோகத்-தின் காரணமாக அல்ல. எங்கள் மொழி-யைப் பொறுத்தவரை நாங்கள் கர்வம் மிகுந்த மக்களாவோம். தமிழ் மொழிக்கு இணையாக எந்த மொழி-யா-லும் நிற்கமுடியாது என்று நினைப்ப-வர்கள் நாங்கள். அப்போது மேற்கு வங்க உறுப்பினர் டி.எல். சென் குறுக் கிட்டு, வங்காள மொழி தவிர என்று கூறினார்.


(தொடரும்)
(திரு. எஸ். ராமச்சந்திரன் அவர்கள் தொகுத்த அண்ணாவின் ராஜ்யசபை பேச்சுகள் என்ற ஆங்கில நூலிலிருந்து தமிழில்: த.க.பாலகிருட்டிணன். )

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...