Tuesday, July 31, 2012

சுற்றுலாத் துறை சார்பில் அம்மன் கோயில் சுற்றுலாவாம்


தமிழ்நாடு அரசின் சுற்றுலா சார்பில் (ஆடி மாதத்தில்) 108 அம்மன் கோயில் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம். கடந்த ஆண்டு முதல் அமைச்சர் ஜெயலலிதா அம்மையாரின் சிறப்பு ஆணைப்படி இத்தகைய சுற்றுலா மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம்.
முதலில் ஒன்று தெளிவுபடுத்தப்பட வேண்டும். ஓர் அரசுத் துறை குறிப்பிட்ட மதத்தை முன்னிறுத்தி மதம் தொடர்பான சுற்றுலாவை மேற்கொள்வது சட்டப்படி சரியானதுதானா? மதச் சார்பின்மை  என்பதுதானே ஓர் அரசின் சட்டப்படியான நிலை! அப்படியிருக்கும்பொழுது சட்ட விரோத மாக ஒரு முதலமைச்சரே இத்தகைய ஆணையைப் பிறப்பிக்கலாமா?
இரண்டாவதாக கொள்கை என்று பார்த் தாலும்கூட அண்ணா பெயரைத் தாங்கியுள்ள ஒரு கட்சி - அதன் ஆட்சி இத்தகு செயல் பாடுகளில் இறங்கலாமா? அறிஞர் அண்ணா அவர்களும் முதல் அமைச்சராக இருந்துள் ளார். இதுபோன்ற தவறான வழியைக் காட்டியுள்ளாரா?
மூன்றாவதாக, இந்திய அரச மைப்பு சட்டப்படி மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையை உண் டாக்க வேண்டியது (51A(H) ஒவ் வொரு குடிமகனின் கடமை என்கிற போது அதற்கு மாறாக மூடநம் பிக்கைக்கு ஆக்கம் தேடிட அரசு முனையலாமா?
நான்காவதாக இந்த ஆடி சுற்றுலாவால் என்ன பயன்? அம்மன் கோயில்களைச் சுற்றி வருவதால் காவிரி நீர்ப் பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினைகள் தீர்ந்து விடுமா? தனிப்பட்டவர்களுக்குத் தான் என்ன பலன்?
வீண் செலவு, கால விரயம், புத்தி நாசம் என்பதல்லாமல் வேறு என்னவாம்?
மழை வேண்டி பூஜை கருநாடக மாநிலத்தில்
கருநாடக மாநிலத்தில் பி.எஸ். எடியூரப்பா, சதானந்தகவுடா, இவர் களைத் தொடர்ந்து ஜெகதீஸ் ஷெட்டர் முதல் அமைச்சராக ஆகி இருக்கிறார்.
கருநாடக மாநிலத்தில் கடும் வறட்சி நிலவுகிறதாம். மழை தேவைப் படுகிறதாம். வருண பகவானுக்குப் பூஜை நடத்திட ரூ.17 கோடியை மாநில அரசு ஒதுக்கியுள்ளதாம்.
எடியூரப்பா முதல் அமைச்சராக  வந்தவுடன் இப்படித்தான் ஒரு வேலையைச் செய்தார். இந்து அறநிலையத் துறையின் கீழ் உள்ள அனைத்துக் கோயில்களிலும் தனது பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட வேண்டும் என்பதுதான் முதல் சுற்றறிக்கை; இதனை எதிர்த்து பகுத்தறிவாளர்கள் குரல் எழுப்பிய நிலையில் திட்டம் கைவிடப் பட்டது. இருப்பினும் தனிப்பட்ட வகையில் கோயில் கோயிலாகச் சுற்றித் திரிந்தவர்தான் அவர். ஒரு கல்லில் கூட மோதிக் கொண்டார் என்றாலும் விளக்கெண்ணெய்க்குக் கேடாக ஆனதே தவிர பிள்ளை பிழைத்தபாடில்லை.
பிரதமராக இருந்த தேவேகவுடா சுற்றாத கோயிலா? நாமக்கல் சோதி டரை மாதம் தவறாமல் சந்திப்பாரே! - பிள்ளை பிழைத்ததா? இந்த 21ஆம் நூற்றாண்டில் மழை பொழிவதற்குப் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று நம்புவதும், அதற்காக மக்கள் வரிப் பணத்தை ரூ.17 கோடியை நாசமாக்குவதும் கிரிமினல் குற்றமல்லவா!
எம்.ஜி.ஆர். அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது புழல் ஏரியில் பிரபல பிடில்வித்வான் குன்னக்குடி வைத்தியநாதன் அய் யரை விட்டு அமிர்தவர்ஷினி ராகம் வாசிக்கச் செய்யப்பட்டதே! ஒரே ஒரு சொட்டு மழை பெய்ததுண்டா?
மழை பொழிவது எப்படி என்று எல்.கே.ஜி. படிக்கும் மாணவனைக் கேட்டால் பளிச் சென்று பதில் சொல்வானே! மெத்தப் படித்த வர்கள் பக்தியால் புத்தியை இழந்து இப்படி மக்கள் வரிப் பணத்தை நாசமாக் குவது தடுக்கப்பட்டாக வேண் டாமா? எந்த இடத்துக்கு வந்தாலும் தந்தை பெரியார்தான் முதலில் நிற்கிறார். பக்தி வந்தால் புத்தி போகும் - புத்தி வந்தால் பக்தி போகும்.


JULY 16-31



அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் பயன் அய்.ஏ.எஸ். தேர்வில் வெற்றிபெற்றோர் கருத்து


சென்னை, ஜூலை 30 - கழக ஆட்சியின்போது தலைவர் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக சென்னை கோட்டூர் புரத்தில் அமைந்துள்ள, ஆசியாவிலேயே மிகப் பெரியதும், நவீன வசதிகள் அனைத்தும் கொண்ட துமான அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்திற்கு மூடுவிழா நடத் திட ஜெயலலிதா அரசு முனைப்பாக உள்ள நிலையில், இந்த இடத்திலி ருந்துதான் தமிழ்நாட்டின் வருங் கால ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உருவெடுத்து வருகிறார்கள் என்ற செய்தியை தி இந்து நாளேடு  29.7.2012 அன்று வெளியிட் டுள்ளது.
அந்தச் செய்தியில் மேலும் கூறப் பட்டுள்ளதாவது:-
கடந்த இரண்டு ஆண்டுகளாக உயர் கல்வி பெற்று சுய தொழிலில் ஈடுபட்டுள்ளோர், மாணவர்கள், குடும்பத் தலைவிகள் என்று பலர் அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு நாள் தவறாமல் வந்து செல்கின்றனர். அவர்களில் பலர் எப்படியாவது அய்.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற ஒரே கனவுடன் காலை எட்டு மணிக்கெல்லாம் வந்து இரவு 9 மணி வரை படிக்கின்றனர்.
கடந்த சனிக்கிழமையன்று, ஆரம் பக்கட்டத் தேர்வு முடிவுகள் அறிவிக் கப்பட்டபோது, அதில் தேர்வடைந்த பலர் ஒன்றைத்தான் கூறி னார்கள்  இந்த நூலகத்துக்கு நன்றி. இல்லா விட்டால் இதை நாங்கள் செய்திருக்க முடியாது.
தயார் செய்து கொண்டிருந்த 30 பேரில் 13 பேர் தேர்வில் வெற்றி பெற்று விட்டோம் என்று பொள் ளாச்சியைச் சேர்ந்தவரும் தற்போது தாம்பரம் பகுதியில் வசிப்பவருமான 27 வயதான எம்.பி.ஏ., பட்டதாரி எஸ். வெங்கடேஷ் கூறுகிறார். வீட்டி லிருந்து மதிய உணவும், என்னுடைய புத்தகங்களையும் எடுத்துக் கொண்டு ஒவ்வொரு நாளும் காலை 8 மணிக் கெல்லாம் இங்கு வந்து விடுவேன். தூரம் அதிகமாக இருந்தாலும், இது தான் மிகச் சிறந்த இடம். சொல்லப் போனால் எங்களுக்கான ஒரே இடம் என்று மேலும் அவர் கூறினார்.
சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற விழையும் இவர்கள், இந்த நூலகத் திலுள்ள சுமூகமான படிப்புச் சூழல் தான் மிகப்பெரிய சாதகமான அம்சம் என்கின்றனர். சிவில் சர்வீஸ் தேர்வு தயாரிப்புக்கு சுய வரை முறையும், கட்டுப்பாடான படிப்பும் தேவைப் படுகிறது. இந்த நூலகம் அதற்கான இடத்தை யும் அளிக்கிறது என்று ஆரம்பக்கட்டத் தேர்வை முடித் துள்ள 23 வயது வங்கி ஊழியர் ஷியாம் கூறுகிறார். அங்கு சென்றால் படிக்கத் தோன்றுகிறது. எந்த விதமான கவன திசை திருப்பலும் கிடையாது. பின்னர் சந்தேகங்களைப் பற்றி விவாதிக்க அருமையான நண்பர்கள் கிடைக்கின் றனர் என்றும் அவர் கூறுகிறார்.
சென்னையிலுள்ள மற்ற இடங் களில் இந்த நூலகத்தில் உள்ளது போல் வசதிகள் கிடையாது. கன்னி மாரா நூலகத்தில் சொந்தப் புத்தகங் களைப் படிக்கும் பிரிவு கிடையாது. அயல் நாட்டுத் தூதரகங்களிலுள்ள நூலகங்களில் நேரக் கட்டுப்பாடுகள் உள்ளன என்று இவர்கள் கூறுகின்றனர்.
அண்ணா நூலகத்திலுள்ள சொந் தப் புத்தகங்கள் படிக்கும் பிரிவில் நுழைய எப்போதுமே நீண்ட வரிசை காத்திருக்கிறது. சிறிது நேரத்திற்குப் பிறகு, இந்த வளாகத்திலேயே நூலகத் துக்கு வெளியில் அமர்ந்து படிப்போம் என்கிறார், ஆர்.பிரீதா. நூலகத்துக்குள் பேசுவதற்கு அனுமதி இல்லாத தால் வெளியே உள்ள கல்லில்  அமர்ந்து   கருத்துக்களை விவாதிப்போம் என் றும், மூன்று வயது குழந்தைக்குத் தாயான பிரீதா கூறுகிறார்.
அந்தக் குழுவிலுள்ள ஏழெட்டுப் பேருக்கு இந்த நூலகம் மட்டும்தான் ஆதரவு. நாங்கள் எந்தப் பயிற்சி மையத்துக்கும் போகவில்லை.
அரசுப் பணியில் சேருவதற்காக தயாரித்துக் கொள்வதற்கு அரசு அளித்துள்ள வசதியையே  நம்பியுள் ளோம் என்பதே ஒரு உந்து சக்தி என்கிறார் சி.பி.கனகராஜ். இவர்கள்  அனைவரும் ஒருமித்த குரலில் வேண் டுவது; இந்த இடம் ஆயிரக்கணக் கானவர்களுக்கு உணர்வூட்டி, கலாச் சாரத்தையும், படிக்கும் பழக்கத்தை யும் மேம்படுத்தும் நூலகமாக இருக்க வேண்டும். நூலகமாகவே இது இருந்தால் பெரும் நன்மை பயக்கும் என்று சி.பி. கனகராஜ் அந்த வேண்டு தலைக் கூறினார்.
இவ்வாறு அந்தச் செய்தியில் தெரி விக்கப்பட்டுள்ளது.
அண்ணா நூற்றாண்டு நூலகம் கற்பூரம் போன்றது. அதன் வாசனை அதைப் பயன் படுத்தியவர்களுக்கும், விவரமறிந்தவர்களுக் கும் தெரிகிறது. நீதிமன்றம்தான் அவர்கள் வேண்டு தலை நிறைவேற்ற வேண்டும்!
29.7.2012 நாளிட்ட இந்து
(நன்றி: முரசொலி, 30.7.2012)


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தந்தை பெரியார்மீதான விமர்சனம்?


தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் திரு சா. இராமதாசு அவர்களின் பேட்டி ஒன்று ஒளிபரப்பப்பட்டது.
தாங்கள் தந்தை பெரியார் அவர்களைப் பின்பற்றுவதாகக் கூறுகிறீர்கள். நீங்கள் இருக்கும் மேடையிலேயே பெரியாரையே விமர்சிக்கிறார்களே என்ற கேள்விக்கு பா.ம.க. நிறுவனரிடமிருந்து தெளிவான பதில் இல்லை. இன்னும் சொல்லப் போனால் கேள்வியேகூட வேறு மாதிரியாக இருந் திருக்க வேண்டும். பெரியாரைக் கொச்சைப் படுத்திப் பேசுகிறார்களே என்ற வகையில் வினா எழுப்பப்பட்டு இருக்க வேண்டும். விமர்சனம் என்பது வேறு - கொச்சைப்படுத்துவது என்பது வேறு.
அப்படியே பார்த்தாலும் தந்தை பெரியார் அவர்களை விமர்சிக்க இப்பொழுது என்ன அவசியம் வந்தது? அதன் மூலம் யாருக்கு லாபம்? விமர்சிக்க வேண்டிய பிரச்சினைகள் எத்தனை எத்தனையோ இருக்க, தந்தை பெரியார் அவர்களை சரியான புரிதல் இன்றி விமர்சிப்பது யாரைத் திருப்திப்படுத்த?
தந்தை பெரியாரைச் சொல்லியே வெளியில் வந்தார். இப்பொழுது தந்தை பெரியார் அவர்களை தமிழினத்துக்கு விரோதமானவர் என்று பா.ம.க., மேடைகளிலே பேசுவதன் மூலம் பெரும் வீழ்ச்சியை அந்தக் கட்சி சந்திக்கப் போகிறது என் பதை இன்றைக்கே எழுதி வைத்துக் கொள்ளலாம்.
தமிழ்த் தேசியம் என்ற பதாகையை வீர தீரமாகத் தூக்கி வந்தவர்கள் பெரியார்மீது கை வைக்கப் போய் சட்டி சுட்டதடா கைவிட்டதடா என்ற நிலைக்கு ஆளாகி இருப்பதை மருத்துவர் தெரிந்து கொள்வது நல்லது. இன்றைக்குத் தமிழ்நாட்டில் பி.ஜே.பி.யைத் தவிர, தந்தை பெரியார் பெயரைச் சொல்லாமல் யாரும் அரசியல் நடத்த முடியாத நிலைதான்.
சமூக நீதிக் கொள்கையை முன்னெடுப்பதாகச் சொல்லிக் கொண்டே இன்னொரு வகையில் தந்தை பெரியார் அவர்களைக் கொச்சைப்படுத்த லாம் என்றால் அதனைத் தமிழ்நாடு ஒரு போதும் அனுமதிக்காது. சமூகநீதி என்பது இந்த நாட்டில் வெறும் இடஒதுக்கீடு மட்டுமல்ல - அது விரிந்த பொருள்களை உள்ளடக்கமாகக் கொண்டது.
தந்தை பெரியார் அவர்களின் எந்த கொள்கை தவறானது - தமிழர்களுக்கு விரோதமானது என்று இவர்களால் எடுத்து வைக்க முடியுமா?
பார்ப்பனர்களும், அவர்களின் ஊடகங்களும் எவற்றை முன்னிறுத்தித் தந்தை பெரியார் அவர்கள்மீது சேற்றை வாரி இறைக்கிறார்களோ, அவற்றையே இரவல் வாங்கி இவர்களும் அந்த வேலையைச் செய்வதன் மூலம் தமிழர்கள் மத்தியில் தங்களைத் தாங்களே அம்பலப்படுத்திக் கொள்கிறார்கள் என்று பொருள்.
இன்னொன்றையும் இதில் கவனிக்கத் தவறக் கூடாது. திராவிட இயக்கத்தையும் அதன் ஒப்பற்ற கொள்கையையும் இவர்கள் எதிர்ப்பதன் மூலம் பார்ப்பனர் எதிர்ப்பைக் கைக்கொள்ள இவர்கள் தயாராக இல்லை; மாறாக அவர்களின் கைகளுக் குள் புதைந்துகொள்ள முடிவு செய்து விட்டார்கள் என்றே கருத வேண்டும்.
இது உண்மைதான் என்பதைத் தெரிந்து கொள்ள பெரிய ஆய்வுகள் தேவையில்லை. அவர்கள் நடத்தும் பொதுக் கூட்டங்களில் பார்ப் பனர்கள் பற்றியோ அவர்களின் ஆதிக்கத்தைப் பற்றியோ, சமூகநீதிக்கு எதிரான பார்ப்பனர்களின் நிலைப்பாடு குறித்தோ ஒரு வார்த்தை பேசுவது கிடையாது.
பெரும்பாலும் தற்பெருமையும், அரசியல் கட்சிகளைச் சாடுதலும்தான் அதிகம் இருக்கும்.
தந்தை பெரியாரைக் கொச்சைப்படுத்துவதும், திராவிட இயக்கத்தை கேவலமாக விமர்சிப்பதும் தான் அவர்களின் இன்றைய முதன்மைத் திட்டமாக இருந்து வருகிறது.
எந்தக் கட்சியுடன் கூட்டுச் சேராமலும், தந்தை பெரியார் அவர்களையும், திராவிட இயக்கத்தை விமர்சித்தும் வாக்கு கேட்டு வரட்டும்! தமிழர்கள் வட்டியும் முதலுமாகப் பாடம் கற்பிக்கத் தயாராகவே இருப்பார்கள்.
இடையில் கறுப்புச் சட்டை போட்டதெல்லாம் இவற்றின் மூலம் வெளிறி விட்டது. தமிழ்மண், தந்தை பெரியார் அவர்களின் பிரச்சாரத்தால் உழைப்பால்  பல நிலைகளிலும் தாக்கம் பெற்று தலை நிமிர்ந்து நிற்கிறது. இதில் எந்தச் செங்கல்லை இவர்கள் உருவப் போகி றார்கள்? சந்திப்போம்!


குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...