Saturday, August 3, 2013

2013லும் தேவதாசி முறைக்கு வக்காலத்தா?


சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியின் நாட்டியத் துறை ஜூலை 27 அன்று காலை ஒரு நிகழ்ச்சியை நடத்தியது. முன்ன தாக இந்த நிகழ்வுக்கு அடையார் டைம்ஸ் பத்திரிகையில் ஒரு விளம் பரம் வந்திருந்தது.  கல்லூரி முதல் வரை சந்தித்து பெண் போராளிகள் இந்நிகழ்வு குறித்த அச்சத்தை தெரிவித்தனர். தொலைபேசியில் அழைத்து தெரிவித்த உடனேயே அழைப்பிதழை மாற்றிவிட்டதாகக் கூறினர். ஆனாலும் அவர்கள் நாங் கள் கூறியதை காதில் வாங்கவில்லை. பெயரில் எதுவும் இல்லை. நாங்கள் பெயரை மாற்றச் சொல்லவில்லை.

இந்நிகழ்வில் சொல்லப்படும் கருத் துக்கள் குறித்துத்தான் கேட்கிறோம் என்றோம். இது கலை சார்ந்த நிகழ்வாக இருக்கும். சொர்ணமால்யாதான் பேசுகிறார் என்றார். முதல்வர் இன்று காலை அந்த நிகழ்வுக்குச் சென்றோம். சொர்ணமால்யா தேவதாசிகள் குறித்தான ஆய்வை செய்து அதில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். தனது பவர் பாயிண்ட் ஸ்லைடுக்கு அவர் வைத்திருந்த தலைப்பு ‘‘Devadasis - Wives of God’’ தலைப்பு ஒன்றே போதும்..அவருடைய உரை எப்படி இருந்தது என்று கூறவேண் டியதே இல்லை.ஆனாலும் சிலவற்றை முக்கியமாகச் சொல்லியாக வேண்டும். தேவதாசி முறையை உச்சிமுகர்ந்து கொண்டாடினார். அது கடவுளுக் கான அர்ப்பணிப்பு என்றார். தேவதாசிகள் அதை மனமுவந்து செய்தார்கள் என்றார். நாட்டியத்தில் ஈடுபாடுள்ள பல ஜாதி பெண்களும் தாங்களாகவே முன்வந்து தேவதாசி களானார்கள் என்றார். எல்லா ஜாதி யிலிருந்தும் பெண்கள் வந்ததாகக் கூறினார். நட்டுவாங்கம் வாசித்த பல ஜாதியைச் சேர்ந்தவர்களை ஒன் றாக்கி இசை வேளாளர் என்கிற புதிய ஜாதியை உருவாக்கியது திரா விடர் கழகம் என்றார். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தேவதாசி முறையை ஒழிக்க எண்ணியதற்கு அவர் அரசியல்வாதியாய் இருந்தது தான் காரணம் என்றார். அப்படி யெனில் அவருக்கு வேறு நோக்கங்கள் இருந்தன என்கிறார்.

தனது இரண்டு மணி நேர உரை யில் எங்குமே தேவதாசி முறை எப்படி பெண்களை அடிமைப்படுத்தியது என்றோ அவர்கள் பாலியல்ரீதியாக சுரண்டப்பட்டார்கள் என்றோ குறிப்பிடவில்லை. ஆனால் மாறாக தேவதாசிகளுக்கு ஒருவேலி கோவில் நிலம் வழங்கப்பட்டது. உண்டைக் கட்டி சோறு கோவிலில் வழங்கப் பட்டது. நெல் வழங்கப்பட்டது. பெண்களுக்கு சொத்துரிமை இல்லாத காலத்தில் இவையெல்லாம் கிடைப் பது எவ்வளவு பெரிய விஷயம் என்று அபத்தமாகப் பேசினார். கோவிலில் உள்ள ஒவ்வொரு சடங்கிலும் அவர்கள் பங்குபெறுவது எப்படியான பாக்கியம் என்று சிலாகித்தார். தேவதாசி முறை ஒழிப்புக்கு தனது எதிர்ப்பை வலியுறுத்திப் பேசினார். மொத்தத்தில் தேவதாசி முறையை நியாயப்படுத்தி, சிலாகித்து, அதை கடவுளுக்கு செய்யும் பணிவிடை என்றார். அந்தப் பெண்களை கட்டாயப்படுத்தி இப் படியான ஒரு வாழ்க்கைக்குள் கட் டாயப்படுத்தி தள்ளியது குறித் தெல்லாம் ஒரு வார்த்தை இல்லை. பரதம் தோன்றியது சதிர் என்னும் ஆட்டத்திலிருந்து. அதை முறையாக ஆடிய, இசையில் சிறந்துவிளங்கிய, தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் போன்றவற்றில் சிறந்துவிளங்கிய தேவதாசிகள் பொட்டு கட்டி விடப்பட்டு கோவில்களில் தங்கள் ஆடல் பாடல் கலைகளை வெளிப் படுத்துவது என்பது மிகவும் சிறப் பானது. தேவதாசி முறை ஒழிக்கப் பட்டது அந்தக் கலைகளையும் ஒழித்துவிட்டது. என்று சொர்ண மால்யாவின் கவலை முழுவதும் கலை குறித்தே இருந்தது. அந்தப் பெண் களின் மனநிலை குறித்து எந்தப் பதி வும் இல்லை. அவர்கள் அப்படியான வாழ்க்கையில் விரும்பி ஈடுபட்டார் கள் என்பது போன்று பேசினார். காலங்காலமாக மூவலூர் ராமாமிர் தம் அம்மாள், முத்துலட்சுமி ரெட்டி போன்றோர் தேவதாசி முறையை ஒழிக்கப்பட்ட பாடுகளையெல்லாம் அரசியல் தூண்டுதலின் பேரில் நடந்தவை என்று புறந்தள்ளுகிறார். மூவலூர் ராமாமிர்தம் அம்மாளின் மதி பெற்ற மைனர் அல்லது தாசிகளின் மோச வலை நூல் குறித் தும் அவதூறான கருத்தை முன் வைத்தார். ராமாமிர்தம் அம்மாளுக்கு விஷம் வைத்து கொல்ல முயன்றனர் என்பது சொர்ணமால்யாவுக்குத் தெரியுமா?

சட்டமன்றத்தில் சத்தியமூர்த்திக்கும், முத்துலட்சுமி ரெட்டிக்கும் நடந்த தேவதாசி முறை ஒழிப்பு குறித்த உரையாடல் நாம் அறிந்தது. அந்த உரையாடலுக்காக சத்தியமூர்த்தியைப் பாராட்டிப் பேசுகிறார் சொர்ண மால்யா. பெரியார் சும்மாவா கேட்டார் அப்போதே?

சில பெரியோர்கள் நாட்டின் நற்பெயரையும், நமது மற்ற பெண் களின் கற்பையும் காப்பதை உத் தேசித்து, இம்மாதிரி ஒரு கூட்டம் பெண்கள் விபசாரத்திற்கென்றே தனியாயிருக்க வேண்டும் என்று சொல்லுகின்றார்களாம். இந்தக் கொள்கையைப் பற்றி நாம் விவகாரம் பின்னால் செய்து கொள்ள நினைக்கின்றோம். ஆனால், அப்படி ஒரு கூட்டம் பெண்கள் வேண்டும் என்கிற கட்சியை நியாயமென்று கொள்வதாகவே வைத்துக் கொண் டாலும், அதற்காக ஒரு வகுப்பாரே தலைமுறை, தலைமுறையாக தங்கள் பெண்களை உதவிவர வேண்டும் என்பதற்கு என்ன ஆதாரம் இருக் கின்றது? என்று கேட்பதுடன், அந்த தேசாபிமானமும், நாட்டின் கற்பு அபிமானமும் கொண்டதான இந்தப் பரோபகாரம் எல்லா வகுப்புக்கும் பங்கு முறைப்படி வரட்டும் என்ப தாக தாராள நோக்கத்துடன் பார்த்து, அதை மற்றவகுப்புக்கும் பிரித்து விடுவதில் என்ன ஆட்சேபணை, அல்லது நாட்டு கற்பில் கவலையுள்ள ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ் வொரு பெண்ணை இந்த தேசாபி மானத்திற்கும், கற்பு அபிமானத் திற்கும் விட ஒரு சட்டம் செய்வதற்கு என்ன ஆட்சேபணை என்று கேட் கின்றோம். இப்படிப்பட்ட தர்ம நியாயங்கள் சொல்லி ஏமாற்றித் தானே, ஆதியில் ஒரு வகுப்பார் தலையில் இவ்விழிவு காரியங்கள் போய் விழுந்து விட்டன. - (பெரியார், குடிஅரசு - _ துணைத் தலையங்கம் - 30.10.1927)

பொட்டுக் கட்டும் ஜாதியில் பிறந்து வளர்ந்து அதன் கொடுமைகளை நன்கு உணர்ந்த மூவலூர் ராமா மிர்தம் அம்மையாரும், முத்துலட்சுமி ரெட்டியும் அந்த வாழ்க்கை தேவையில்லை என்று வெளியேறி அதை ஒழிக்க பாடுபட்டார்கள். அவர்களுடைய கண்களால் பார்கக மால், கலை, பரதம், கடவுள், பக்தி, அர்ப்பணிப்பு என்று கூப்பாடு போடும் சொர்ணமால்யாக்களின் மேட்டுக்குடி கண்களால் இவ் விஷ யத்தை அணுகவேண்டுமா? 1927இல் கேள்வி கேட்க பெரியார் இருந்தார். இன்று? என்ன செய்யப் போகிறோம்?

--_ கவின் மலர்

1 comment:

Massy spl France. said...

இந்த காலத்திலும் இப்படி ஒரு அதிர்ச்சி அவமானத்திற்குறிய காட்டுமிராண்டிகளின் பழக்க வழக்கமான தேவதாசி முறையில் ஆய்வுகள் மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்று கல்லூரியின் கலை விழாவின்போது பாழாய் போன கடவுள்களின் பெயரைச் சொல்லி அப்பாவி இளம் பெண்களை இலவசமாக புணர்ந்த இந்து மத அடிமைத்தனத்திற்கு வக்காலத்து வாதமிடும் சொர்ணமால்யக்களின் நடத்தை கடும் கண்டனத்துக்குறியது.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...