Saturday, July 4, 2015

முஸ்லீம்கள் இல்லாத மாநிலமாக மாற்றுவோம் - பஞ்சாயத்தில் முடிவாம்

அடாலியில் மீண்டும் வன்முறை

முஸ்லீம்கள் இல்லாத மாநிலமாக மாற்றுவோம் - பஞ்சாயத்தில் முடிவாம்

பரிதாபாத் ஜூலை 4_ மசூதி கட்டிய விவகாரம் தொடர்பாக எழுந்த வன்முறை சிறிது ஓய்ந்திருந்த நிலையில் சிறிது அமைதி திரும்பிய அடாலி கிரா மத்தில் மீண்டும் வன் முறை வெடித்தது. ஊரில் கடைசி முஸ்லீம் வெளியேறும் வரை நாங்கள் அமைதியாக இருக்கமாட் டோம் என்று ஊர் பஞ்சாயத்தில் முடிவு செய்யப்பட்டதாம்.     மே மாதம் 25 ஆம் தேதியன்று அரியானா மாவட்டம் அடாலி கிராமத்தில் மசூதி கட்டப்பட்ட போது இந்துக் கோவிலுக்கு அருகில் மசூதி கட்டும் கட்டுமானச் சிதறல் கள் விழுந்தது தொடர்பான சாதாரண பிரச்சினை வன்முறையாக வெடித் தது. இந்த வன்முறையி னால் அடாலி கிராமத்தில் உள்ள 3000 முஸ்லீம்கள் கடுமையாக தாக்கப் பட்டனர். இதில் 700 முஸ்லீம் வீடுகள் தீவைத்துக் கொழுத்தப் பட்டது. 60 பேர் தாக்கப்பட்டனர்.
முஸ்லீம் பெண்கள் மானபங்கப் படுத்தப்பட்டனர்.  அன்று நடந்த வன்முறையின் போது அரியானா மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து வன்முறையாளர்களை காவி அமைப்புகள் வாகனங்களில் ஏற்றிக் கொண்டுவந்து தாக்குதல் நடத்திய தாக விசாரணையில் தெரியவந்தது.   வன்முறைச் சம்பவத்தை அடுத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ் லீம்கள் பரிதாபாத் நகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் சரண டைந்தனர். ஆண்களும் பெண்களும் காவல் நிலைய வளாகத்தில் தங்கி யிருந்த போது இரவு நேரத்தில் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட் டது. இவ்விவகாரம் தொடர்பாக சிறுபான்மை அமைப்புகள் கண்டனம் தெரிவித்ததோடு விசாரனை அறிக் கையும் தாக்கல் செய்ய அரியானா மாநில அரசுக்கு உத்தர விட்டிருந் தது. முஸ்லீம்கள் மாட்டுமாமிசம் விற்றதாகவும், இந்துக் கோவில் மீது எலும்புகளை வீசியதாகவும் பொய் யான அறிக்கையை மாநில பாஜக அரசு அளித்தது. இக்கலவரம் நடந்த பிறகு சுமார் ஆயிரம் குடும்பங்கள் உபி, மகாராஷ்டிரா, பிகார் போன்ற மாநிலங்களில் உள்ள தங்களது உறவி னர்களின் வீட்டிற்கு சென்று விட் டனர்.   புதன்கிழமையன்று மாலை நோம்புத் தொழு கையில் ஈடுபட்ட சிலர் அருகில் உள்ள இந்துக் கோவிலில் பூசை செய்து கொண்டு இருந்த பெண்கள் மீது கற்களைவீசிய தாக வதந்தி பரவியது. இதனை அடுத்து மீண்டும் வன்முறை வெடித் தது. வன்முறை நடந்த பிறகு ஊரின் பாதுகாப் பிற்கு இருந்த சில காவ லர்கள் இந்த வன் முறையை அடக்க முற் படாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந் தனர். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீண்டும் முஸ்லீம் களின் வீடுகளை நோக்கி கூட்டம் கூட்டமாக சென்று கற்கள் மற்றும் கட்டைகள் கொண்டு தாக்குதல் நடத்தினர். ஏற்கனவே கலவரத்தின் காரணமாக வெளியூர் சென்ற முஸ் லீம்களின் பூட்டிய வீடுகளை  உடைத்து உள்ளே சென்று அங்குள்ள பொருட் களைச் சேதப்படுத்தினர். இதில் சில வீடுகளில் இருந்த விவ சாய உபகரணங்கள் மற்றும் தானி யங்கள் அனைத்தும் நாசப்படுத்தப் பட்டது.  சம்பவம் நடந்து கொண்டு இருந்த போது மாவட்ட காவல்துறை ஆணையர் சுபாஷ்யாதவ் தலைமை யில் சிறப்பு காவல்துறைப் பிரிவைச் சேர்ந்த ஆயிரம் காவல் துறையினர் அந்த ஊரை சுற்றிவளைத்தனர். இச் சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்பட வில்லை.    கலவரம் நடந்த ஊர்ப் பொது மக்களிடையே அமைதிகாக்கவேண் டியும், வதந்திகளை நம்ப வேண் டாம் என்றும் கேட்டுக் கொண்டார். மேலும் அவர் கூறியதாவது உங் கள் ஊரின் அமைதியை விரும்பாத சிலர் இது போன்ற வதந்திகளைப் பரப் புகின்றனர். நீங்கள் வதந்தி பரப்புப வர்களை நம்பாதீர்கள். மேலும் உங் களுக்கு  தாக்குதலில் இறங்கவேண் டாம், என் றும் கேட்டுக் கொண்டார்.    கூட்டம் நடந்து கொண்டு இருக்கும் போதே சில இளைஞர் கள் முஸ்லீம்களை அவ தூறாக பேசினர், அவர்களை ஊர்ப்பெரிய வர்கள் அமைதிப்படுத்தினர். இந்த நிலையில் அடாலி கிராமத்திற்கு அருகில் உள்ள ஊரில் பொதுப் பஞ்சாயத்து கூடியது. இந்தப் பஞ்சா யத்தில் இந்த ஊரில் இருந்து கடைசி முஸ்லீம் வெளியேறும் வரை நாங்கள் அமைதி யாக இருக்கமாட்டோம், என்று பஞ் சாயத்து தங்களது முடிவை அறிவித்தது.
குடும்பத்தாரைச் சந்திக்க காவல்துறையினர் மறுப்பு
அடாலி கிராமத்தில் மீண்டும் கலவரம் வெடித்த செய்தி வெளி யானதும் டில்லி மற்றும் பிற மாநிலங் களில் உள்ள இக்கிராம முஸ்லீம்கள் தங்களது உறவினர் களைச் சந்திக்க வந்தனர். அடாலி கிராம எல்லை யில் அவர்களைப் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். காவல்துறை தரப்பில் கூறியதாவது: மாவட்ட காவல்துறை ஆணையர் ஊரில் உள்ள பெரியவர்களிடம் பேசிக் கொண்டு இருக்கிறார். இந்த நிலை யில் நீங்கள் ஊருக்குள் சென்றால் பிரச்சனை பெரிதாகிவிடும். ஆகவே உங்களை ஊருக்குள் செல்ல அனு மதிக்க மாட்டோம் என்று கூறினர்.  இதை ஏற்காத முஸ்லீம்கள் அந்த இடத்திலேயே அமர்ந்து தர்னா செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
பிரச்சனை இன்னும் தீரவில்லை ஊர்ப்பஞ்சாயத்தின் முடிவை அடுத்து அருகில் உள்ள ஊர் இளை ஞர்கள் அடாலி கிராமத்தை நோக்கி வரத்துவங்கினர். நிலமை மோசமா வதை அடுத்து 3000-த்திற்கும் மேற் பட்ட மத்திய சிறப்பு காவல் படை அடாலி கிராமத்தில் குவிக்கப்பட் டுள்ளது,  வன்முறை தொடர்வதைக் கண்டு மேலும் 300 முஸ்லீம் குடும் பங்கள் அந்தக் கிராமத்தை விட்டு வெளியேறி வருகின்றனர்.   கடந்த ஆண்டு  ஹுட்டா தலை மையில் ஆன பாஜக அரசு விரை வில் இந்த மாநிலத்தை ஹரிக்கே தேஷ் (விஷ்ணுவின்) மாநிலமாக அதாவது இந்துக்கள் மட்டும் வாழும் மாநிலமாக மாற்றுவோம் என்று மறைமுகமாக கூறி ஆட்சிக்கு வந்தார். அரியானா மாநிலத்தில் பரிதாபாத் மாவட்டத்தில்  மாத்திரம் முஸ் லீம்கள் வாழ்கிறார்கள் என்பது குறிப் பிடத்தக்கது.   முஸ்லீம்கள் மீது திட்ட மிட்ட முறையில் வன்முறைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:



No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...