Friday, July 3, 2015

பெண் சாமியார் சாத்வி பிராச்சியின் கொலைவெறி பேச்சு

பெண் சாமியார் சாத்வி பிராச்சியின் கொலைவெறி பேச்சு

ஹஜ் யாத்ரீகர்கள் மீது தாக்குதல் நடத்தப் போவதாக மிரட்டல்!

முசாபர்நகர், ஜூன் 3- அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட தால் ஹஜ் யாத்திரை செல்லும் யாத்ரீகர்கள் தாக்குதலுக்குள்ளாக நேரிடும் என்று சர்ச்சைக் குரிய பெண் சாமியாரணி சாத்வி பிராச்சி மிரட்டல் விடுத்துள்ளார். மத்தியில் பிரதமர் மோடி தலைமை யிலான ஆட்சி அமைந்த பின்னர் பல்வேறு சர்ச் சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருபவர் சாத்வி பிராச்சி. அந்த வகையில் தற்போது ஹஜ் யாத்ரீகர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து பேசி யிருக்கிறார்.
உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகரில் நிகழ்ச்சி ஒன்றில் சாத்வி பிராச்சி பேசியதாவது: அமர்நாத் செல்லும் பக்தர்கள் மீது பயங்கரவாதத் தாக்கு தல்கள் நடத்தப்பட்டால் ஹஜ் யாத்திரை செல்லும் யாத்ரீகர்களும் அதே போன்ற நிலைமையை எதிர்கொள்ள நேரிடும். இனி ஒவ்வொரு பயங்கர வாத தாக்குதலுக்கும் அதேபாணியில்தான் பதிலடி கொடுப்போம். ஹஜ் யாத்திரை செல்வோ ருக்கு மானியம் கொடுக் கப்படுகிறது.. ஆனால் அமர்நாத் செல்லும் பக்தர்களுக்கு வரி விதிக்கப் படுவது என்பது அவ மானகரமானது. இவ்வாறு சாத்வி பிராச்சி கூறியுள் ளார். அவரது இந்த பேச்சுக்கு காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி தலை வர்கள் கண்டனம் தெரி வித்துள்ளனர். அதே நேரத்தில் பாரதிய ஜன தாவோ அவர் எங்கள் கட்சியிலேயே இல்லை என்று பதிலளித்துள்ளது.

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...