Friday, July 3, 2015

பா.ஜ.க.வும், பிரதமர் மோடியும் நாட்டு மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்

பா.ஜ.க.வும், பிரதமர் மோடியும் நாட்டு மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்

குஜராத் கலவரம் - 1999ல் இந்திய விமானம் கடத்தப்பட்ட விவகாரம்
பா.ஜ.க.வும், பிரதமர் மோடியும் நாட்டு மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்

காங்கிரஸ் வலியுறுத்தல்
புதுடில்லி, ஜூலை 4_ 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் மதக்கலவரம் நடைபெற்றது இதற்கு  அன்று முதல்வராக இருந்த மோடி பொறுப் பேற்க வேண்டும் என்று அப்போதைய பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் கூறியதாக  ரா உளவுத்துறை முன்னாள் அமைப்பின் தலைவர் ஏ.எஸ்.துலாத் செய்தி தொலைக்காட்சி யில் நடந்த நேர்காணலில் கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக மோடி விளக்கம் தரவேண்டும் என்று காங்கிரஸ் உள் ளிட்ட எதிர்கட்சிகள்  குர லெழுப்பியுள்ளன.
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அஜய்குமார் முன்னாள் பிரதமர் வாஜ்பேயின் வார்த்தைகளை மதிப்பவர் என்றால், பிரதமர் மோடி குஜராத் கலவரத்துக்காக மன்னிப்பு கேட்க வேண் டும் என்று கூறினார்.
காங்கிரஸ்  கட்சியின் மற்றொரு செய்தி தொடர் பாளர் டாம் வடக்கன் 1999ஆம் ஆண்டு இந்திய விமானம் கடத்தப்பட்ட தற்கு தீவிரவாதிகளுக்கு உதவி செய்ததற்காகவும், இந்தியாவுக்கு எதிரான சக்திகளுக்கு சாதகமாக நடந்து கொண்டதற்காக வும் பா.ஜ.க.வும் பிரதமர் மோடியும் நாட்டு மக்களி டம் நிபந்தனையற்ற மன் னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார்.
ரா உளவுத்துறை அமைப்பின் முன்னாள் தலைவர் தன்னுடைய பதவிக்கால நினைவுகள் என்ற தலைப்பில் நூல் ஒன்றை எழுதியுள்ளார். அந்த நூல் தொடர்பாக இந்தி தொலைக்காட்சி ஒன்று அவரிடம் நேர் காணல்  நடத்தியது. அதில் பல திடுக்கிடும் உண்மை களை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-
குஜராத் கலவரம்
2002-ஆம் ஆண்டு 27 பிப்ரவரி அன்று, அயோத்தி யிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த சபர்மதி தொடர்வண்டி சில சமூக விரோதிகளால் தீவைத்து எரிக்கப்பட்டது  இதில் அய்ம்பதிற்கும் மேற்பட் டோர் மரணமடைந்தனர். பிரச்சினைக்குரிய இந்தச் சம்பவம் பெரும் கலவ ரத்தை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் மாநில அரசு தடுப்பு நடவடிக்கை எது வும் எடுக்காமல் எரிந்த தொடர்வண்டிப் பெட் டியை கழற்றி தொடர் வண்டி மீண்டும் பயணம் செய்ய அனுமதித்தது. இந்தி செய்தி பத்திரிகை ஒன்று மோடி அரசின் இந்தச் சம்பவம் கலவ ரத்தை குஜராத் முழுவதும் பரப்பும் சூழ்ச்சியாக அமைந் தது என்று எழுதியி ருந்தது. அதுபோலவே அந்த வண்டி சென்ற ஒவ்வொரு ஊரிலும் கலவரம் வெடித்தது. அந்த தொடர்வண்டிக்கு எந்த ஒரு பாதுகாப்பும் அளிக் காமல் மோடி அரசின் கீழ் இயங்கும் காவல்துறை வேடிக்கை பார்த்தது. அந்த தொடர்வண்டி வடோதரா சென்றடைந்ததும் அங்கு கூடியிருந்த இந்து அமைப்பைச் சேர்ந்தவர் கள் ரயிலில் வந்தவர்கள் அனைவரையும் தாக்க ஆரம்பித்தனர். இதில் 4-பேர் மரணமடைந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் இந்துக்கள் ஆவர். இந்த நிலையில் மதக்கலவரம் குஜராத் முழுவதும் பரவியது. அகமதாபாத், சூரத் என பல இடங்களில் இஸ்லாமி யர்கள் தொடர்ந்து கொலை செய்யப்பட்டனர்.
குழந்தைகளை தீயில் எரித்தனர்
இது குறித்து ஆஜ் தக் தொலைக்காட்சியும், தெஹல்காவும் இணைந்து நடத்திய புலன் விசார ணையில் ஒரு கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து உள்ளே இருந்த குழந்தையை தீயில் தூக்கி போட்டு எரித்ததையும், இவைகளுடன் முஸ்லீம் பெண்களை அநியாயமாக கூட்டு வன்புணர்வு செய்த கலவரக் காரர்களுக்கும், அகமதா பாத்தில் உள்ள நரோடா எனும் இடத்தில சுமார் எழுபது பேர்களை கொன்ற பா.ஜ.க தலைவ ருக்கு மோடி ஆதரவு தெரிவித்ததையும் அவரது அமைச்சர் பாதுகாப்பு அளித்ததையும் பகிரங் கமாக வெளிப்படுத்தியது.
மேலும் கலவரக்காரர் கள் முஸ்லிம்களை எவ் வாறு திட்டமிட்டு இன அழிப்பு செய்தார்கள் என்று குஜராத் பெண் அமைச்சர் ஒருவரும் பஜ் ரங்தள் தலைவர் ஒரு வரும் பேசிய காணொளி வாக்குமூலம்  நாடு முழு வதும் பரபரப்புக்குள்ளா கியது.  இந்தக்கலவரத்தில் 3000 முஸ்லீம்கள் கொல் லப்பட்டனர். இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், ஜாவேத் ஜாவ்ரியும் அடங்குவர். மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து இந்தக் கலவரம் தொடர்பான அனைவரும் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் கூட காவல் துறை முன்னிலையில் 3 இஸ்லாமியப் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து உயிருடன் எரித்துக் கொலைசெய்த பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த நான்கு பேர்,  சாட்சிகள் யாரும் இல்லை என்ற காரணத் தால் விடுதலை செய்யப் பட்டனர்.
கலவரத்திற்கு மோடி  காரணம் - வாஜ்பாய் வருத்தம்
இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களுடன் ஆட்சி யாளர்களும் சேர்ந்து நடத்திய இந்தக் கொடூரச் சம்பவம் அனைத்தும் மோடி அரசுக்குத் தெரிந்தே நடைபெற்றது என்றும் மோடி தனது அதிகாரத் தில் உள்ள காவல் துறையை இயங்க விடாமல் செய்தார் என்றும் குற்றச் சாட்டுயுள்ளது.  இந்தக் கலவரம் குறித்து இதுவரை மோடி எந்த ஒரு பதிலும் கூறாமல் மவுனம் சாதித்து வருகிறார். இந்தக் கலவரம் தொடர்பாக கருத்து தெரிவித்த அப்போதைய பிரதமர் அடல்பிகாரி வாஜ் பாய், குஜராத் கலவரத் திற்கு மோடி அரசே கார ணம் என்று கூறி வருத்தப் பட்டார் என்று அந்த நூலில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக கேட்ட கேள்விக்கு பதில் அளித்த போது  கலவரம் தொடர்ந்து நடைபெறும் என்று தெரிந்தும் குஜராத மாநில அரசு தடுப்பு நடவடிக்கையை எடுக்கவில்லை, மேலும் ஆட்சி அதிகாரத்தில் உள்ள பல அரசியல்வாதி கள் நேரடியாக இந்தக் கலவரத்தில் தொடர்புடை யவர்களாக இருந்தனர். இதைக் கட்டுப்படுத்த இயலாமல் போனது எங் களது மிகப்பெரிய தவறு என்று வாஜ்பாய் வருத்தம் தெரிவித்தார். அப்போது குற்ற உணர்வையும், வருத்தத்தையும் அவரது முகத்தில் காண முடிந்தது என பதிலளித்தார்.
கந்தகார் விமான கடத்தல் 1999ஆ-ம் ஆண்டில் கந்த கார் விமான கடத்தல் தொடர்பாக கருத்து தெரிவித்தபோது அப்போ தைய வாஜ்பாய் அரசு  இந்திய விமானத்தில் கடத்தப்பட்ட பயணிகளை விடுவிக்க மூன்று தீவிர வாதிகளை விடுதலை செய்ய முடிவு செய்தது. மேலும் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் விமானத்தை மீட்க நட வடிக்கை எடுக்க நல்ல வாய்ப்பிருந்த நிலையில் மத்திய அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக் காமல் அமைதியாக இருந்து விட்டது. அமிர் தசரஸ் விமான நிலை யத்தில் பயணிகளை மீட்க இந்திய கமாண்டோ பிரிவினர் தயாராக இருந் தனர். ஆனால் மத்திய அரசின் மவுனம் காரண மாக சந்தேகமடைந்த தீவிரவாதிகள் விமானத்தை பாகிஸ்தானில் உள்ள லாகூர் அதன்பிறகு துபாய் கொண்டு சென்று இறுதி யில் கந்தகாரில் தரை யிறக்கினார்கள்.  மத்திய அரசின் இந்த  நடவ டிக்கை மிகவும் மோசமா னது  என்று அப்போதைய ஜம்மு காஷ்மீர் முதல் அமைச்சர் பரூக் அப் துல்லா பதவி விலகப்  போவதாக கூறினார்.  எட்டு நாள்களுக்குப் பிறகு கந்தகாரில் இருந்த விமானம் மற்றும் 180-க்கும் மேற்பட்ட பயணிகள் விடு விக்கப்பட்டனர்.
பயணி களை விடுவிக்க 3 தீவிர வாதிகளை மத்திய அரசு விடுதலை செய்தது, என்று அந்த நூலில் குறிப்பிட் டுள்ளார் இது தொடர் பான கேள்விக்கு பதில ளித்த போது கூறியதாவது: விமானம் டிசம்பர் 24-ஆம் தேதி கடத்தப்பட்டபோது, அரசு மிகப்பெரிய தவறு செய்து விட்டது,  விமா னம் அமிர்தசரஸில் நிறுத் தப்பட்டபோது அங்கி ருந்து விமானத்தை வெளியே கொண்டுசெல்வதை தடுக்க உடனடியாக முடிவு எடுக்கப்படவில்லை. விமா னம் கடத்தப்பட்டதை தொடர்ந்து உடனடியாக முடிவு எடுக்க அரசுத் தரப்பில் யாரும் முயற்சி செய்யவில்லை.  விமா னத்தை மீட்க தயாராக இருந்த பஞ்சாப் மாநில காவல்துறையின ருக்கு எந்த ஓர் ஆணை யும் வழங்கப்படவில்லை. மத்திய அரசின் இந்தச் செயல்களால் இந்தியாவை விட்டு விமானம் பறந்து சென்றுவிட்டது. மத்திய அரசு உடனடியாக செயல் பட்டிருந்தால் நமது நாட் டிலேயே இந்தப் பிரச் சினையை முடிவிற்கு கொண்டு வந்து பயணி களை மீட்டிருக்கலாம் என்று கூறினார். தீவிரவாதியின் மகனுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம்   பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதீன்  தலைவர் சையது சலா ஹுதீன், அப்போது அய்..பி. உளவு அமைப்பின் தலை வராக இருந்த கே.எம்.சிங் ரகசியமாகச் சந்தித்தார்.
அந்தச் சந்திப்பின்போது தனது மகன் ஷயத் அப் துல்வாகித்திற்கு மருத் துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருமாறு கூறி னார். அதைத் தொடர்ந்து, முதல்வராக இருந்த ஃபரூக் அப்துல்லாவை கே.எம்.சிங் சந்தித்தார்.   ஷயத் அப்துல் வாகித் மருத்துவக் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது.  இந்த விவகாரம் அனைத் தும் அப்போதைய வாஜ் பாய் அரசுக்குத் தெரிந்தே நடந்தது என்று அந்த நூலில் எழுதியுள்ளார்.
மேலும் தற்போது ஜம்முகாஷ்மீரில் பாஜக கட்சியுடன் கூட்டணி ஆட்சிக்கு தலைமைப் பொறுப்பேற்றுள்ள முதல்வர் முஃப்திமுகமது வின் மகள்  மெஹ்பூபா வுக்கு ஹிஸ்புல் முஜாஹி தீன் அமைப்புடன் தொடர் புகள் இருந்தன என்று எ.எஸ்.துலாத் தெரிவித்தார்.
ரா அமைப்பின் தலை வர் இந்த தொலைகாட்சி நேர்காணல் மற்றும் நூல் மூலம் முந்தைய பாஜக அரசு தீவிரவாதிகளுடன் இணக்கமாக இருந்தது மற்றும் கலவரத்திற்கு முக்கிய காரணமாக இருந்த  விவகா ரங்கள் நிரூபணமாகி யுள்ளன.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...