Monday, March 30, 2015

மதுரை வைத்திய நாதய்யரும் கோயில் நுழைவும் உண்மை வரலாறு என்ன?

- கி.தளபதிராஜ்


தினத்தந்தி நாளிதழ் மதுரை வைத் தியநாத அய்யரைப்பற்றிய கட்டுரை யொன்றை 8.7.14 அன்று வெளியிட்டி ருக்கிறது. மதுரை மீனாட்சிஅம்மன் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்களை யும் நாடார்களையும் அழைத்துக்கொண்டு 75 ஆண்டுகளுக்கு முன்பே முதன்முறை யாக 8.7.1939இலேயே ஆலயப்பிரவேசம் செய்தவர் வைத்தியநாத அய்யர் என்று அக்கட்டுரை அவருக்குப் புகழாரம் சூட்டு கிறது.

யார் இந்த வைத்தியநாத அய்யர்?   

  1923ல் மதுரை மார்க்கெட் சதுக்கத்தில் ஒரு காங்கிரஸ் மாநாடு நடைபெறுகிறது. அந்த மாநாட்டில் சிறப்புரையாற்றுகிறார் தந்தை பெரியார். அந்த நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தவர் உள்ளூர் ஆசாமி வைத்தியநாத அய்யர்.     "மாலை 6 மணிக்கு காங்கிரஸ் கமிட் டியின் ஆதரவில் வக்கீல் சீமான் வைத் தியநாதஅய்யர் அக்கிராசனத்தின் கீழ் மார்க்கெட் சதுக்கத்தில் ஒரு மாநாடு கூடிற்று.அக்கூட்டத்தில் சீமான் ஈ.வி.ராமசாமி நாயக்கர் அவர்கள் ஆலயச் சுதந்திரம் எனும் விஷயத்தைப்பற்றி பேசிய முக்கிய சாராம்சம்" எனக் குறிப் பிட்டு "நாடார்குல மித்திரன்" பத்திரிக்கை 11.8.1923இல் தந்தை பெரியார் அவர்க ளுடைய உரையை வெளியிட்டிருந்தது.

"நாடார் சகோதரர்களை உண்மையான காரணமின்றி ஆலயத்திற்குள் பிரவேசிக்கத்தடுப்பதானது முட்டாள்தனமான காரியம். மதுரைக் கோவிலானது கிழக்கேயிருந்து மேற்கே செல்லவும், மேற்கேயிருந்து கிழக்கே வரவும் ஒரு பாதையாக உபயோகிக்கப்பட்டு வருகிறது. அம்மாதிரி செல்வதில் இதர மதத்தினர் செல்லவும் நாம் சம்மதப்படுகிறோம் இதர மதத்தினருடன் இவ்வளவுதூரம் சமத்துவம் கொண்டாடும் நாம் நமது நாடார் சகோதரருடன் சமத்துவம் கொண்டாட வெறுப்படைவது எவ் வளவு தூரம் பைத்தியக்காரத்தனமும், அயோக்கியத்தனமும் முட்டாள்தனமும் பொருந்திய தென்பதை யோசித்துப் பாருங்கள்.   நாடார் சகோதரர்களின் பாதம் பட்ட தும் சுவாமி மறைந்துவிடுமென்றால் சக்தியற்ற அக்கல்லை கட்டித் தொழு வதால் என்ன பிரயோஜனம் அடை வீர்கள்? அவர்கள் கொடுக்கும் காணிக் கையை, கட்டளையை வாங்கிக் கொள்கிறோம். 

அவர்கள் பணம் அக் கடவுளுக்கு ஆகும். அவர்கள் மட்டும் ஆகாதென்றால் என்ன நியாயம்? உங்களுக்கு சுயராஜ்ஜியதாகம் உண்டு என்றால், நாடு நல்ல நிலைமையடைய பிரியம் உண்டு என்றால், எல்லோரும் சமத்துவமடைய சம்பந்தம் உண்டு என்றால்,  இன்றே நாடார் சகோதரர் களை ஆலயத்திற்கு அழைத்துச்செல்லத் தயாராயிருக்கவேண்டும். எந்தத் தடைவரினும் நாம் எதிராடத் தயா ராயிருக்கவேண்டும். இல்லாது போனால் நாடார் சகோதரர்கள் ஆலயத்தில் நுழையாதிருக்கும் வரை நாமும் செல்வ தில்லை என்று கட்டுப்பாடாய் இருக்க வேண்டும்" என்று ஆலயப்பிரவேசத்தின் அவசியத்தை வலியுறுத்தி தந்தை பெரியார் அவர்கள் நீண்ட உரையாற்றி யிருந்தார்.   

  கூட்டத்திற்குத் தலைமை யேற்ற வைத்தியநாத அய்யரோ தனது தலைமையுரையில் நாடார் என்கிற வார்த்தையைக்கூட, மறந்தும் உச்சரிக் காதது நாடார் சமூகத்தினரிடையே பெரிய ஏமாற்றத்தை அளித்தது.

"முடி வுரையில் அக்கிராசனர் சாதுரியமாய் வக்கீல் சம்பிரதாயப்படி நாடார் என்னும் சொல்லையே சொல்லாது இந்திய சகோதரர்கள் என்று பொதுவில் பேசி கூட்டத்தைக் கலைத்தார்" என்று நாடார்குல மித்திரன் எழுதியது.    1922 லேயே தாழ்த்தப்பட்டவருக்கான கோவில் நுழைவு உரிமைப் போராட் டத்தை கடுமையாக எதிர்த்தவர்தான் மேற்படி வைத்தியநாத அய்யர் என்பது "திரு.வி.க வின் வாழ்க்கை குறிப்புகள்" நூலிலேயே இடம்பெற்றிருக்கிறது.

திடீர் ஆலயப்பிரவேசம் ஏன்?  

 எம்.சி.ராஜா கொண்டுவந்த ஆலயப் பிரவேச மசோதாவை அமல்படுத்த தயங்கிய ராஜகோபாலாச்சாரியாரை கடுமையாக எதிர்த்து குடியரசு, விடுதலை இதழ்களில் தொடர்ந்து எழுதினார் பெரியார்.

1939இல் எந்தவித முன்னறிவிப்பு மின்றி யாருக்கும் தெரியாமல் கடைசி நேர இரவு  பூஜைக்குப்பிறகு  சில தாழ்த்தப்பட்டவர்களோடு மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் நுழைந் ததன் மூலம் அகில இந்தியப் பத்திரிக் கைகளில் தன்னை விளம்பரப்படுத்தி கொண்டு ராஜாஜி, காந்தி போன்றவர் களின் பாராட்டை பெற்றவர் வைத்திய நாத அய்யர்.அய்யர்வாளின் திடீர்  ஆலயப்பிரவேசத்திற்கு அவசியம் என்ன?     தமிழகமெங்கும் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தினால் தலை தூக்கமுடியாமல் கிடந்தது காங்கிரஸ் கட்சி. அதோடு கோவில் நுழைவு மசோதாவை அமல்படுத்தாத ராஜாஜி அமைச்சரவை பார்ப்பனரல்லாதாரின் கடுங்கோபத்திற்கு ஆளாகியிருந்தது. அப்படி ஒரு மோசமான சூழலில் நடை பெற இருந்த மதுரை, இராமநாதபுரம் ஜில்லா போர்டு தேர்தல்களில் காங்கிரஸ் மண்ணைக்கவ்வாமல் இருக்க ஏற் படுத்தப்பட்ட ரகசியத்திட்டம்தான் வைத்தியநாத அய்யரின் திடீர் ஆலயப்பிரவேசம் என்று "பெரியார் சுயமரியாதை சமதர்மம்" நூல் வரலாற்று ஆதாரங்களோடு விளக்குகிறது.    மதுரை வைத்தியநாத அய்யர்தான் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்களை அழைத்து கொண்டு முதன்முறையாக ஆலயப் பிர வேசம் செய்ததாக அக்கட்டுரை குறிப் பிட்டிருப்பதிலாவது உண்மையிருக்கிறதா?

1921 லேயே மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பார்ப்பனரல்லாதாரை அழைத்துகொண்டு ஜே.என். இராம நாதன், டி.வி.சுப்ரமணியம், ஜே.எஸ். கண்ணப்பன் ஆகியோர் போராட்டம் நடத்த முயன்றனர். பெரும் கல்லடிக்கு ஆளாகியதோடு அவர்கள் மீது 300க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டிருக் கின்றன.

திருச்சி தாயுமானவர் மலைக்கு ஜே.என்.இராமநாதன் தாழ்த்தப்பட்ட வர்களை அழைத்துகொண்டு நுழைந்த போது ரவுடிகளால் தாக்கப்பட்டு மலையில் உருட்டிவிடப்பட்ட செய்தியை கேசரி இதழ் பதிவுசெய்திருக்கிறது. திருவண்ணாமலை கோவிலுக்குள் நுழைந்த ஜே.எஸ்.கண்ணப்பரை கோவிலுக்குள்ளேயே வைத்துப் பூட்டிய தகவல் குடியரசில் வெளிவந்திருக்கிறது. 1927ல் மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோவிலில் 1000க்கும் மேற்பட்ட பார்ப்பனரல்லாதாருடன் கி.ஆ.பெ.விசுவ நாதன் கோவில் நுழைவுப்போராட்டம் நடத்தியதை அறிவோம்.

மேலும் 1928இல் திருவானைக்கோவிலிலும், திருச்சி மலைக்கோவிலிலும் கோவில் நுழைவுப் போராட்டங்கள் நடைபெற்றிருக்கிறது. இவற்றையெல்லாம் திரு எஸ்.வி.ஆர் அவர்கள் தனது நூலில் வரிசைப்படுத்தி யுள்ளார்.     கோவில் நுழைவுப்போராட்டத்தின் நீண்ட நெடிய வரலாறு இப்படியிருக்க "குள்ளநரி" என்று பெரியாரால் அழைக்கப்பட்ட வைத்தியநாத அய்யரை தூக்கிப் பிடிக்கும் ஒரு கட்டுரையை தினத்தந்தி வெளியிட்டு மகுடம் சூட்டியிருப்பது வேதனையளிக்கிறது.

Friday, March 6, 2015

தமிழ்நாட்டில் ரயில்வே துறை நடத்திய தேர்வில் தமிழில் தேர்வெழுதியவர்களுக்கு நடந்த மாபெரும் மோசடி!


தெற்கு ரயில்வேயில், காலியாக உள்ள, 5,450 'குரூப் டி' பணியாளர் பதவிகளுக்கு தேர்வு செய்ய, 2013 செப்., 21ஆம் தேதி, ரயில்வே தேர்வு வாரியம் விளம்பரம் வெளியிட்டது. இத்தேர்வு, 2014 நவ., 2ஆம் தேதி முதல், அய்ந்து கட்டங்களாக நடந்தது.

இதற்கிடையே, மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், 'வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் போது, இணைக்கும் சான்றிதழ் நகல்களுக்கு, அரசு அதிகாரிகளின் ஒப்பம் பெறும் (அட்டஸ்டேஷன்) விதி நீக்கப் படுகிறது. இனிமேல், சான்றிதழ் நகல் களுக்கு, அரசு அதிகாரிகளின் ஒப்பம் பெற வேண்டிய அவசியமில்லை' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த பதவிகளுக்கு, விண்ணப் பிப்போர், அத்தாட்சி பெற்ற சான்றிதழ் இணைத்திட வேண்டும் என தென்னக ரயில்வே, ஆங்கில நாளிதழில் விளம் பரம் செய்தது. ஆனால், தமிழ் நாளி தழில் வெளியிட்ட விளம்பரத்தில், இந்த அத்தாட்சி முறை தேவை யில்லை என செய்தி வெளியிட்டது. இதனை நம்பி, எந்த அத்தாட்சி பெற்ற சான்றிதழும் இணைக்காத ஏறத்தாழ இரண்டரை லட்சம் தமிழக மாணவர் களின் விண்ணப்பம் நிராகரிக்கப் பட்டுள்ளது.

ஆனால், ஆன் லைன் மூலமாக விண்ணப்பித்தவர் களுக்கு, இந்த அத்தாட்சி பெற்ற சான்றிதழ் இணைக் காத நிலையில், அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பீகார் போன்ற வட மாநிலங்களி லிருந்து ஆயிரக்கணக் கானோர் தமிழ் நாட்டில் உள்ள இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து, அவர்களும் தென்னக ரயில்வே நிர்வாகத்தால் அனுமதிக்கப் பட்டுள்ளனர். மொத்தம் பதினோரு லட்சம்பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான தமிழக இளைஞர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

குரூப் டி பதவிகளில் டிராக்மேன், போர்ட்மேன், சபாய்வாலா, கலாசி போன்ற பணிகள் பல ஆண்டுகளாக அந்தந்த மாநிலத்திலிருந்துதான் தேர்வு செய்யப்படுவர். இந்த பணிக்கு அடிப்படை சம்பளம் ரூ.1800. இது வேலை வாய்ப்பு பிரச்சினை என் பதையும் தாண்டி, ஹிந்தி பேசும் வட மாநிலத்தவர், தமிழகத்தில் கடை நிலை பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப் படுவதால், சமூக, மொழி பிரச் சினையையும் உருவாக்குவது நிச்சயம்.

இதுகுறித்து, ரயில்வே வாரியத்தை, விண்ணப்பதாரர்கள் பலர் அணுகிய போது, 'குரூப் டி' தேர்வு அறிவிக்கும் போது, மத்திய அரசு, இந்த அறி விப்பை வெளியிடவில்லை. எனவே, அரசு அதிகாரிகள் ஒப்பம் பெறாமல், விண்ணப்பிக்கப்பட்ட சான்றிதழ்கள் நகலை ஏற்க முடியாது. எனவே, அவ் வாறு அனுப்பப் பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன' என, கூறி யுள்ளது.
இணையதளத்தில் விண்ணப்பித் தோருக்கு ஒரு முறை, நேரடியாக விண்ணப்பித்தோருக்கு இன்னொரு முறையா?

இந்த அநீதியால் லட்சக்கணக் கான தமிழக இளைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.

இந்த பணிகளுக்கு விண்ணப்பித்த லட்சக்கணக்கான தமிழக இளைஞர்களை தொடக்க நிலையிலேயே நிராகரித்து விட்டு வட மாநிலத்தவர்களை கொண்டு பணியிடங்களை நிரப்பத் திட்டமிட்டி ருக்கும் தென்னக ரயில்வே நிர்வாகத்தின் செயல் கண்டிக்கத்தக்கதாகும். 

திட்ட மிட்ட சதியே

இது ஏதோ, நிர்வாகக் குளறுபடிகளால் நடந்த ஒன்றல்ல என்பதை அதன் தொடர் நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. நவம்பர் 2, 9, 16, 23, 30 ஆகிய அய்ந்து நாட்கள் தேர்வுகள் நடைபெற்றுள்ளன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகை யான கேள்வித்தாள்களைக் கொண்டு இத்தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. 10 லட்சம் பேருக்கு ஒரே நேரத்தில் தேர்வு நடத்த முடியாத நிலையா இங்கு இருக் கிறது. ஒரே வகையான கேள்வித் தாள்கள் இன்றி இருப்பதே, ஒன்று எளிது, ஒன்று கடினம் என்ற பேத நிலையைத் தோற்று விக்காதா? இது ஒருபுறம்.

ஆனால், தமிழர்களுக்கு நடந்திருக் கும் அநீதி நமது கற்பனைக்கும் எட்டாத தாகும். தமிழில் எழுதியோர் ஒருவரும் நுழைந்துவிடவே கூடாது என்று திட்ட மிட்டு இச்சதி நடத்தப்பட்டிருந்தா லொழிய இது சாத்தியமில்லை. மேற்கண்ட தேர்வுகள் இங்கிலீஷ், ஹிந்தி, உருது, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய ஏழு மொழி களில் கேள்வித்தாள்கள் வழங்கப்பெற்று நடைபெற்றுள்ளன.

அய்ந்து நாட் களுக்கும் அய்ந்து வகையான கேள்வித் தாள்கள். ஆனால், இந்த அய்ந்து கேள் வித் தாள்களிலும் தமிழ் மொழிபெயர்ப்பு எண்ணற்ற தவறுகளுடனும், பொருட் பிழைகளுடனும், மோசமான மொழி பெயர்ப்புடனும், விடையளிக்கவே முடி யாதவண்ணம் குழப்பம் தருவதாகவும், கேள்வியே தவறானதாகவும், விடைகள் புரியாததாகவும் அமைக்கப்பட்டிருக் கின்றன.

கேள்வித்தாள் குழப்பங்கள்

ஒவ்வொரு கேள்வித் தாளிலும் குறைந்த பட்சம் 10 முதல் 30 கேள்விகள் பிழையாக உள்ளன. ஒன்றிரண்டு கேள்விகளுக்கு பதில் தரமுடியவில்லை யென்றாலே ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுவார்கள். ஒரே கேள்வித் தாளில் 100 கேள்விகளில் 30 கேள்விகள் பிழை யுடனிருக்கின்றன என்றால் தமிழில் எழுதிய யாராவது இப்பணிகளில் நுழைவதை நினைத்துப் பார்க்க முடியுமா?

இந்திய அரசியல் சட்டத்தில்  என்று ஆங்கிலத்தில் குறிக்கப்பட்டிருப்பதை கால அட்டவணை என்று மொழி பெயர்த்து இதுவரை கேள்விப்பட்டிருக்கி றோமா?  என்பதை சரத்து என்போம்; ஆனால் இந்திய அரசியல் சட்டத்தின் கட்டுரை என்று யாராவது மொழி பெயர்ப் பார்களா? லோக்சபையின்  (சபாநாயகர்/ அவைத் தலைவர்) என்பதை பேச்சாளர் என்றூ மொழி பெயர்த்தால் புரிந்து கொள்ள முடியுமா? இந்திய அரசியல் சட்டத்துக்கே இந்த கதியா?

அறிவியல் வார்த்தைகளின் நிலையை எண்ணிப் பார்க்கவே முடியவில்லை. குறை எண் என்பதை எதிர்ம எண் என்றும், பூரிதக் கரைசலை புனிதக் கரைசல் என்றும், மூலக்கூறுகளின் இயக்க ஆற்றல் என்பதை அணுக்கதிர் எண் களின் இயக்க ஆற்றல் என்றும், தோரி யத்தை மதாரியம் என்றும், பெருங்குடலை பெருங்கடல் என்றும், தேயிலை உற்பத்தியைத் தேனீர் உற்பத்தி என்றும், மிகை நிரப்பிக் கோணங்கள் என்பதை துணைக் கோணங்கள் என்றும், நிறப் பிரிகையை ஒளிப்பரப்பீடு என்றும், எல்லையை வரம்பீடு என்றும், ஜாதகக் கதைகளை ஜாடகா என்றும், மாநிலத்தை தேசம் என்றும், காற்றில் பரவும் விதைகள் என்பதை காற்றுக் கலைவால் உருவாகும் விதைகள் என்றும், இறங்குவரிசையை ஏறுவரிசை என்றும், சீனப் பயணி யுவான் சுவாங்கை ஹிஜன் ட்சங் என்றும், குடலுறிஞ்சிகளை விரலிகள் என்றும், விசையை (Force) ஆற்றல் (Energy)  என்றும்,Milk of Magnisia  (மக்னீசியம் ஹைராக்சைடு) - வை பாலில் மக்னீசியம் எதற்கு பயன்படுகிறது என்றும், சதுர அளவு என்பதை வெறும் அளவு என்றும், தத்துவத்தை சூத்திரம் என்றும், நீரின் திசை, எதிர் திசை என்பனவற்ற மேல் நிலை, கீழ்நிலை என்றும் குறிப்பிட்டால் யாருக் காவது புரியுமா? எழுத முடியுமா?

மேலும், பல ஆங்கிலச் சொற்கள் அப் படியே தமிழ் எழுத்துகளில் தரப்பட்டுள் ளன. ரேஞ்ச், ரூப் ஆஃப் தி வேர்ல்டு, ஃபங்கி என்பதையெல்லாம் எப்படிப் புரிந்து கொள்வது? கணிதத்தில் கேட்கப் பட்டுள்ள கேள்விகள் எதையும் தமிழில் மட்டும் படித்தால் யாராலும் புரிந்து கொள்ள முடியாத வண்ணம் கேட்கப் பட்டுள்ளது. நாம் மேலே எடுத்துக் காட்டி யிருப்பவை ஒரு சிறு முனையே (Tips of the lceberg)  ஆகும்.

ஒவ்வொரு கேள்வித் தாளிலும் இத்தனைப் பிழைகளா? அய்ந்து வகைக் கேள்வித் தாள்களை யும் எடுத்துப் படித்துப் பார்த்தால் பெருங் குழப்பத்தைத் தவிர எதுவும் மிஞ்சாது. (அவை அனைத்தும் தனியே வெளியிடப்படும்.)

தமிழர்கள் என்றால் இளக்காரமா?

மொழிபெயர்ப்பில் சந்தேகம் இருந் தால், விடைகள் ஒன்றுக்கு மேற்பட் டவை சரியாக இருந்தால், ஆங்கி லத்தை எடுத்து சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்பது வழக்கத்தில் சொல் லப்படும் நடைமுறையாகும். ஆனால், ஒன்றா, இரண்டா? கொடுக்கப்பட்டிருக் கும் 90 நிமிடங்களுக்குள் விடையளிக்க வேண்டிய 100 கேள்விகளில் 30 கேள் வியை எப்படி சரிபார்ப்பது? அதற் கெப்படி நேரம், வாய்ப்பு? ஒவ்வொரு கேள்வியிலும் குழப்பம் இருந்தால் எப்படி ஒருவர் பார்ப்பார்? ஆங்கிலத் தைப் படித்துப் புரிந்து கொள்ள முடியும் என்றால், அவர் ஏன் தமிழில் தேர் வெழுத வரப் போகிறார்?

இந்தப் பிழைகளுக்கெல்லாம் காரணம் என்ன என்பதை நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது. அனைத்துக் கேள்விகளும் இணையத்தில் இயங்கும் மொழி பெயர்ப்பு செயலிகளில் கொடுத்து மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவை எவையும் ஒப்புக் கொள்ளப்பட்ட, நிரூபிக்கப்பட்ட மொழிபெயர்ப்புச் செய லிகள் அல்ல. லட்சக்கணக்கானோர் எழுதும் தேர்வு களுக்கு இப்படியோர் முறையில் மொழி பெயர்த்ததுடன், அதனைச் சரிபார்க்காமலே வெளியிட்டு தேர்வு நடத்தக் கூடிய பொறுப்பற்ற தன்மையை எப்படிப் பொறுக்க முடியும்?

கிஞ்சிற்றேனும் அக்கறை இருந்தால், இப்படி நடக்குமா? இதை அக்கறை யின்மை என்றும் எளிதாக நம்மால் ஓரங்கட்டிவிடமுடியாது. தென்னக ரயில்வேயில் தமிழ்நாட்டுப் பணியிடங் களுக்கு தமிழர்களை பணியில் சேர விடக்கூடாது என்ற மாபெரும் சதியைத் தவிர வேறு என்ன காரணம் இருந்து விடமுடியும்? கன்னடர்களும், தெலுங் கர்களும் அதிகம் கவனம் செலுத்தாத இந்த தேர்வுகளில் வடநாட்டுக்காரர் களும், மலையாளிகளும் அதிக அளவில் பணியில் நுழைவது எப்படி?

இந்தியிலும், மலையாளத்திலும் இருக் கும் கேள்விகள் இப்படி குழப்பம் தராதவையாகத் தானே இருக்கின்றன. இதனை எப்படி ஏற்க முடியும்? லட்சக் கணக்கான தமிழக இளைஞர்களின் வாழ்க்கையை ஒழித்துக் கட்டப்படு வதை எப்படி ஏற்க முடியும்?



இரயில்வே துறை நடத்திய குரூப் டி பணியாளர் தேர்வு திட்டமிட்ட மோசடி!

தமிழர்கள் நுழைய கதவடைப்பா?  

இரயில்வே துறை நடத்திய குரூப் டி

பணியாளர் தேர்வு திட்டமிட்ட மோசடி!


இரயில்வே தேர்வு ஆணையம் (Rly Recruitment Cell)  என்ற அமைப்பின் மூலம் தெற்கு இரயில்வேயில் காலியாக உள்ள குரூப்   டி பதவிகளுக்காக நடத்தப்பட்ட தேர்வில் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்படக் கூடாது என்பதற்கான சூழ்ச்சி வலை பின்னப்பட்டுள்ளது  குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

5450 பணியாளர் பதவிக்குத் தேர்வு செய்திட 21.9.2013 அன்று ரயில்வே தேர்வு வாரியம் விளம்பரம் செய்திருந்தது. தேர்வு 2014 நவம்பர் 2ஆம் தேதி அய்ந்து கட்டங்களாக நடந்துள்ளது.

மத்திய அரசின் விளம்பரத்தில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் போது, இணைக்கப்படும் சான்றிதழ்களுக்கு அரசு பதிவிதழ் அலுவலரிடமிருந்து (Gazetted Officer)  மேலொப்பம் பெற வேண்டும் என்ற விதி நீக்கப்படுகிறது என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதில் என்ன மோசடி என்றால் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட விளம்பரத்திலே கெசட்டட் அதிகாரிகளிடமிருந்து மேலோப்பம் பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்விளம்பரங்களிலோ அது தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

தமிழில் வெளிவந்த விளம்பரத்தின் அடிப்படையில் சான்றிதழ்களுக்குக் கெசட்டட் அதிகாரிகளின் சான்றொப்பம் தேவையில்லை என்ற அடிப்படையில் விண்ணப்பித்த ஏறத்தாழ இரண்டரை லட்சம் தமிழக மாணவர்களின் விண்ணப்பங்கள் ஒட்டு மொத்தமாக நிராகரிக்கப்பட்டு விட்டன.

அதே நேரத்தில் சான்றொப்பமின்றி ஆன்லைனில் விண்ணப்பித்தவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மகா கொடுமையை வஞ்சகத்தை என்னென்று சொல்லுவது!
 
தென்னக ரயில்வே துறைக்குப் பணியமர்த்தம் என்றாலும் வட மாநிலத்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

தமிழில் தயாரிக்கப்பட்ட கேள்வித்தாளில் ஏகப்பட்ட குழப்பங்கள் - தவறான மொழி பெயர்ப்புகள் - அதனால் சரியாக விடை எழுத முடியாத நெருக்கடிகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தேர்வில் வெற்றி பெற்று விடக் கூடாது என்றே திட்டமிட்டும், அதே நேரத்தில் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மலையாளிகள் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்ற வேண்டும் என்ற இமாலய சதியோடு சூழ்ச்சியோடு திரைமறைவில் காரியங்கள் நடைபெற்றுள்ளன. (விரிவாக பக்கம் 2இல் வெளியிடப்பட்டுள்ளதை காண்க)

நடைபெற்ற தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உடற் தகுதி தேர்வு வரும் 8ஆம் தேதி நடக்க உள்ளதாம். நடைபெற்ற இந்தத் தேர்வு செல்லாது என்று அறிவிக்கப்பட வேண்டும், முறையாக தெளிவாக விளம்பரம் செய்யப்பட்டு ஒழுங்கான முறையில் தேர்வுத்தாள் தயாரிக்கப்பட்டு மீண்டும் தேர்வை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனை நாடாளுமன்றத்தில் கேள்வியாக எழுப்பி நிவாரணம் தேடிட வழி வகை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
6.3.2015
சென்னை

தனி மனிதர் உண்ணும் உரிமையில் அரசு தலையிட முடியுமா?

மாட்டுக்கறி உண்ணவும் தடையா?
தனி மனிதர் உண்ணும் உரிமையில் அரசு தலையிட முடியுமா?
ஒத்த கருத்துள்ளோர் கூடி இந்துத்துவா கோட்பாட்டை முறியடிப்போம்!

தமிழர் தலைவர் ஆசிரியர் முக்கிய அறிக்கை


இரயில்வே நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்)  தமிழ்நாட்டுக்குப் பட்டை நாமம்!


மாட்டுக்கறி உண்பதைத் தடை செய்துள்ள மகாராட்டிர அரசின் நடவடிக்கையை ஒத்தக் கருத்துள்ளோர் ஒன்றிணைந்து முறியடிப்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: மகாராஷ்டிர மாநிலத்தில் பா.ஜ.க. - சிவசேனா கூட்டு அரசு இயங்குகிறது.

பா.ஜ.க. முதல் அமைச்சராக பாட்னாவிஸ் என்ற (ஆர்.எஸ்.எஸ். -  பா.ஜ.க.) பார்ப்பனர் தலைமையில் அங்கே நடைபெறும் அரசு, இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான - மதச் சார்பின்மைக் கொள்கைக்கு எதிரான நடவடிக்கையாக மாட்டிறைச்சியைத் தடை செய்து சட்டம் இயற்றியுள்ளது அதற்குக்  குடிஅரசுத் தலைவரும் ஒப்புதல் கொடுத்துள்ளார். இதே மகாராட்டிரத்தில் முந்தைய தபோல்கர், அடுத்து கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீரிய பகுத்தறிவாளர் கோவிந்த் பன்சாரே மத வெறிச் சக்திகளால் படுகொலை செய்யப்பட்டனர்.
இதுவரை உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப் படவே இல்லை.

கோமாதா - இந்துத்துவா கொள்கைக் கோட்பாடே!

ஹிந்துத்துவா கொள்கை அடிப்படையில் கோமாதா குல மாதா, கோ. பூஜை,  பசு மாட்டு வணக்கம் இந்த அடிப்படையில்தான் அங்கே மாட்டுக் கறி விற்பனை தடை செய்யப்பட்டு, மாட்டுத் தொட்டிகள் மூடப்பட்டு, பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு - வருவாய் - இழப்புகளுக்கு ஆளாகியுள்ளனர்!

கோதானம், கோ பூஜை என்ற பசு மாட்டு வணக்கம் என்பவை ஆரிய - சனாதன இந்து தர்மமே! இதை ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தங்களது ஆதர்ச புருஷ ராக - வழிகாட்டியாகக் கொள்ளும் விவேகானந்தர்கூட ஏற்கவில்லை என்பது அவரது கடுமையான தாக்குதல் - நீங்கள் மாட்டுக்குப் பிறந்த பிள்ளைகளா? என்றும், தாயின் ஈமச் சடங்கை, பிள்ளைதானே செய்ய வேண்டும்? நீங்கள் கோமாதா என்று கொண்டாடும் பசு மாட்டுக்குச் செய்கிறீர்களா? என்று கேட்டுள்ளாரே! (பெட்டிச் செய்தி காண்க) பதில் உண்டா?

உணவுப் பழக்கம் தனி மனிதர் உரிமை

உணவுப் பழக்கம் என்பது அவரவர் அடிப்படை உரிமை - பன் மதங்களும், பல கலாச்சாரம் உள்ள இந்தியத் துணைக் கண்டமெனும் நம் நாட்டில் ஒரு மதக்காரர் ஆடும், கோழியும் சாப்பிடுகிறார்கள்; தத்தம் கடவுளுக்கும் வைத்துப் படைக்கிறார்கள். இன்னொரு மதக்காரர் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்; பன்றி இறைச்சி சாப்பிடுவ தில்லை. சிலர் காய்கறி உணவு மட்டுமே எடுத்துக் கொள்ளும் பழக்க வழக்கமுடையவர்களாக உள்ளனர். இதனைத் தடுக்க மக்கள் ஜனநாயகத்தில் இயங்கும் அரசுக்கு எவ்வகையில் உரிமை உண்டு?
வைணவர்களில் சிலர் வெங்காயத்தைக்கூட உண்ண மாட்டார்களே!

காய்கறிகளில்கூட வைணவ மதத்தவர் வெங்காயம், வெள்ளைப் பூண்டு முதலியவற்றைத் தவிர்த்து விடுவர். அதை வெட்டினால் மகாவிஷ்ணுவின் சங்கு சக்கரம் போல் காட்சியளிக்கிறதாம்! எனவே சாப்பிடக் கூடாது என்கின்றனர். அத்தகையவர்கள்  சத பத பிரமாணத்தில், மாட்டிறைச்சியை பசு மாட்டின் பல பாகங்களை யாகம் வளர்த்து மந்திரம் சொல்லி அவிர் பாகம் என்று கூறி ருசித்துச் சாப்பிட்டவர்கள் ஆரியப் பார்ப்பனர்கள்தான் என்பது குறிப்பிடப்பட்டுள்ளதே!

வால்மீகி இராமாயணத்தில், காட்டிற்குச் சென்ற இராமன் இறைச்சியைத் தின்று பல வகை மது வகைகளை குடித்ததாக எழுதப்பட்டுள்ளதை, எவரே மறுப்பர்?

சுரர் என்ற பெயரே ஆரியர்களுக்கு சுரபானம், சோமபானம் குடித்ததினால் வந்த பெயர்தானே!

புத்தருக்குப்பின் வந்த மாற்றம் - பின்னணி என்ன?

புத்தரின் கொள்கையோ கொலைகளை எதிர்த்தது - உயிர்க் கொலையை எதிர்த்த பிறகு அவரது செல்வாக்கு உயருவதைத் தடுக்கவே, ஆரியப் பார்ப்பனர் பின்னாளில் இந்த புலால் - இறைச்சி மறுப்பும், காய்கறி உணவுப் பழக்கத்தையும் ஏற்றனர் என்பது வரலாறு.

(ஆதாரம்: திரு டி.எம். நாயர் எழுதிய ஜிhe Dynamic Brahmin   என்ற நூல்) அம்பேத்கர் எழுதிய நூலில் Who are the untouchables, why they are untouchbles என்ற நூலில், ஆரியர்கள் ஆதி காலத்திலிருந்து மாட்டிறைச்சி உண்டவர்கள் என்பதை சமஸ்கிருத நூலான சத பத பிராமணம் போன்ற நூலில் உள்ளதை எடுத்துக்காட்டி புத்தருக்குப் பின்பே அவர்கள் தமது இழந்த செல்வாக்கை மீட்டுருவாக்கிடவே இந்த இறைச்சி எதிர்ப்பு கோமாதா - பசுவதைத் தடுப்பு என்ற துருப்புச் சீட்டை இறக்கினர்!

எவரே மறுக்க முடியும்? எருமை மாடு என்ன பாவம் செய்தது? பசுவுக்கு மட்டும் பாதுகாப்பு - காரணம்  எருமை கறுப்பு, பசு வெள்ளை - இதிலும் வருணாசிரமக் கண்ணோட் டமா? பால் எல்லாம் வெள்ளைதானே! இன்னும் கேட்டால் எருமை அதிகமாக அல்லவா பால் தருகிறது?
உலகம் முழுவதும் பெரும்பாலோர் உண்ணும் சத்துணவு மாட்டிறைச்சியே! மாட்டிறைச்சியை உலகம் முழுவதும் உள்ள பெரும் பான்மை மக்கள் தங்களது முக்கிய உணவாகக் கொள்ளுகின்றனர்.

இங்கு -நம் நாட்டில் அது ஏழைகளுக்கு எளிய விலைக் குக் கிடைக்கும் - உணவாக இருக்கிறது, சத்துணவாகவும் உள்ளது.

இதைத் தடுக்கலாமா? மதவெறியைக் காட்டலாமா?

இந்த அடிப்படை உரிமையை பறிப்பதை ஒரு போதும் அனுமதிக்க கூடாது.

1972இல் தந்தை பெரியார் இதை வெகு காலத்திற்கு முன்பே சொன்னார். திராவிடர் கழகமும் ஆந்திர நாத்திகர் கோராவும் சேர்ந்து ஆங்காங்கு மாட்டுக்கறி - பன்றிக் கறி விருந்தும் நடத்திப் பிரச்சாரம் செய்தோமே! (மீண்டும் தேவையானால் செய்யத் தயார்)

உச்சநீதிமன்ற தீர்ப்புகளேகூட இந்த உணவுப் பழக் கத்தில் தலையிடுவதற்கு விரோதமாகத்தான் வந்துள்ளன.

எனவே, மும்பையில் இந்தச் சட்டத்தினை எதிர்த்து நீதிமன்றத்திலும் போராட வேண்டும்.

அதே நேரத்தில் வீதி மன்றத்திலும், பாதிக்கப்படும் மக்களை ஒன்று திரட்டி, அற வழியில் போராட முன் வர வேண்டும் மகாராஷ்டிரத்தில்.

ஒத்த கருத்துள்ளவர்கள் போராட முன் வருக!

இது அங்கே வந்த தீ என்று நாமும் அலட்சியமாக இல்லாமல், இங்கும் பரவ எவ்வளவு நேரம் ஆகும் என்ற உணர்வுடன், அதை எதிர்த்துக் குரல் கொடுக்க முன் வர வேண்டும் - ஒத்த கருத்துள்ள அத்தனை  அமைப்புகளும் (நாம் முன்பே இப்படி போராடியுள்ளோம்).

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

5.3.2015, சென்னை

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:


Wednesday, March 4, 2015

மீள்வது எப்போது?



கலி.பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்


வட நாட்டில் தலைவர்கள் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு  அன்புடன் பழகுகிறார்கள் - ஒருவருக்கொருவர் வாழ்த்து களைப் பரிமாறிக் கொள்கிறார்கள்; ஆனால், தமிழ்நாட்டில் அந்த நிலை காணப்படவில்லையே;
குறிப்பாக கடந்த 30 ஆண்டுகளில் திராவிடர் கட்சிகளைச் சேர்ந்தவர்களிடத்தில் அந்தத் தன்மை காணப்படவில்லையே என்ற ஆதங்கத்தை ஓர் அறிக்கை வாயிலாக வெளிப்படுத்தியவர் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள்.

தாய்க்கழகத்தின் தலைவர் என்ற முறையில் அப்படிச் சுட்டிக்காட்டும் கடமையும், பொறுப்பும் அவருக்கு உண்டு.

பிரிந்து கிடக்கும் திராவிடர் அரசியல் கட்சிகள் ஒன்று சேரவேண்டும் என்பதற்கான முயற்சிகளைக்கூட மேற்கொண்டவர் அவர் என்பது வரலாறு.

அ.இ.அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர். அவர்களை அதற்காகச் சந்தித்து தேவையான முயற்சிகளை அவர் மேற்கொண்ட நிலையில், பழம் நழுவிப் பாலில் விழும் ஒரு தருணத்தில் குறுக்கே பாய்ந்து கெடுத்தவர்கள் உண்டு.

திராவிட அரசியல் கட்சிகள் மற்ற மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்வதைவிட திராவிட இயக்கக் கட்சிகளிடையே கூட கூட்டணி வைத்துக் கொள்ளலாமே என்ற திராவிட இயக்கப் ஃபார்முலாவைக் கூட அவர் தெரிவித்ததுண்டு.

அத்தகைய தலைவர் திராவிடர் இயக்க அரசியல் கட்சிகளுக்குள் பகைமைப் பாராட்டிக் கொள்ளாமல், வடநாட்டுத் தலைவர்கள்போல இணக்கமாக நடந்துகொள்ள வேண்டும் என்று கூறியதை ஓர் ஆரோக்கியமான பார்வை யில் பார்க்க மனமின்றி,

அதனைத் திசை திருப்பி, திராவிடர் இயக்கத்தையே கொச்சைப்படுத்த இதுதான் சந்தர்ப்பம் என்று சேற்றை வாரி இறைக்க முயற்சிப்பது ஆரோக்கியமான தல்ல - அது ஒரு தாழ்நிலை மனோபாவம் அல்லது திட்ட மிட்ட விஷமம் என்று சுட்டிக்காட்டுவது நமது கசப்பான கடமையாகும்.

திராவிட அரசியல் கட்சிகளில் நிலவும் ஒரு போக்கைச் சுட்டிக்காட்டுவதால் மற்ற தேசியக் கட்சிகளில் அந்த நிலை இல்லை; அவர்கள் எல்லாம் உயர்ந்த பண்பாட்டுத் தளத்தில் சஞ்சரிக்கிறார்கள் என்று பொருளாகாது.

கட்சிக் கமிட்டிக் கூட்டத்தைக்கூட அமைதியாக, ஆரோக்கியமாக நடத்த முடியாத நிலை எல்லாம் உண்டு.
 
தேசியக் கட்சிகளால் தந்தை பெரியார் சந்தித்த அவமானங்கள் ஒன்றா? இரண்டா?

தந்தை பெரியார் சென்ற ஊர்வலத்தில் செருப்புத் தோரணங்களைத் தொங்க விட்டவர்கள் யார்? செருப்பை வீசியவர்கள் யார்? முட்டைக்குள் மலத்தை நிரப்பி பெரியார்மீதும், திராவிடர் இயக்க முன்னணியினர்மீதும் வீசியவர்கள் யார்?

அணுகுண்டு அய்யாவுகளையும், விபூதி வீரமுத்து சாமிகளையும் தயார் செய்து, புழுத்த நாய் குறுக்கே போக முடியாது என்கிற அளவுக்கு திராவிட இயக்கத்தை நாசகார முறையில் கொச்சைப்படுத்திய புராணங்கள் ஏராளம் உண்டே!

திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடு என்ற போர்வையில் ம.பொ.சி. கம்பெனிகள் எப்படியெல்லாம் பேசித் தீர்த்தன - இவர்களின் மிச்ச சொச்சங்கள்தான் இப்பொழுது புறப்பட்டுள்ளன!

தூத்துக்குடிக்கு வருகை தந்த தந்தை பெரியார் அவர் களை அவமதிக்கவேண்டும் என்று ராமசாமி கழுதை செத்துவிட்டது என்றும், ராமசாமி மனைவி நாகம்மாள் அவிசாரி என்றும் சுவர்களில் எழுதி வைத்தவர்கள் யார்?
 
எவ்வளவோ சொல்லலாம்.

வெகுகாலத்திற்கு முன்புகூட செல்லவேண்டாம். பழனியில் பார்ப்பனர்கள் மாநாடு கூட்டி, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் உருவம் செய்து பாடை கட்டித் தூக்கிச் செல்லவில்லையா? அவரின் துணைவியாரைக் குறிப்பிட்டு எல்லாம் கொச்சைப்படுத்திக் கோஷம் போடவில்லையா? (இதற்கும் திராவிடர் இயக்கம்தான் காரணம் என்று சொல்லாமல் இருந்தால் சரி)

தந்தை பெரியார் மறைவையொட்டி தலையங்கம் தீட்டாத ஆங்கில ஏட்டுக்கு என்ன மதிப்பீடு? புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், அன்னை மணியம்மையார் போன்ற திராவிட இயக்கத் தலைவர்கள் மறைவை ஆபிச் சுவரி காலத்தில் அதே பார்ப்பன ஏடு போடவில்லையா?

அப்படி அசிங்கமாக அநாகரிகமாக அவர்கள் நடந்து கொண்டபோது, இப்பொழுது சம்மன் இல்லாமல் ஆஜராகும் வக்கீல்கள் அப்பொழுது எங்குப் போயிருந்தார்களாம்?

எந்த நோக்கத்துக்காக திராவிடர் கழகத் தலைவர் அறிக்கை வெளியிட்டார் என்ற சாரத்தைப் புரிந்து கொள்ளாமல், அப்படி சொல்லுகிறவர் தாய்க்கழகத்தின் தலைவர் என்ற முக்கியத்துவத்தையும் புறந்தள்ளி, திராவிட இயக்கத்தைத் தாக்குவதற்கு, கொச்சைப்படுத்துவதற்கு அதைப் பயன்படுத்த முயலுவது, திராவிடர் இயக்கத்தின்மீது அவர்களுக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சியை, வெறுப்பு உணர்ச்சியை வெளிப்படுத்தக்கூடிய பரிதாபமே!
குறைகூற முயல்பவர்கள் நல்லெண்ணத்தோடு, திராவிடர் கழகத் தலைவர் கூறியுள்ள கருத்து வரவேற்கத்தக்கது; அனைவரும் பின்பற்றவேண்டியது என்று சொல்லியிருந்தால், சொல்லுகின்றவர்கள்மீது ஒரு தனி மரியாதைகூட ஏற்பட வாய்ப்புண்டு. அது அல்லவே அவர்களின் நோக்கம்! திராவிடர் கழகத் தலைவரே இப்படி எழுதியிருக்கிறார் பாருங்கள் - பாருங்கள் என்ற பராக்குக் கூறுவதற்கு அல்லவா பயன்படுத்தத் துடிக்கிறார்கள்.

எந்த அளவுக்கு திரு.பழ.நெடுமாறன் அவர்கள் சென்றுள்ளார் என்றால், (தினமணி, 2.3.2015) 40 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சியை ஜெர்மானிய ஹிட்லரோடு ஒப்பிடும் அளவுக்கு இந்தச் சந்தர்ப்பச் சந்துக்குள் நுழைய முயல்வது கண்டிக்கத்தக்கதே - மிகப்பெரிய திரிபுவாதச் சறுக்கல் இது!

ஒரு காலத்தில் திராவிட அரசியல் கட்சிகளோடு சங்கமித்துப் பயணம் செய்து கொண்டிருந்தவர்தானே - மறுக்க முடியுமா?
 
திராவிடக் கட்சிகளின் 40 ஆண்டுகாலத்திற்கு மேலான ஆட்சியில், தமிழகத்தில் ஒவ்வொரு துறையிலும் ஏற்பட்டிருக்கிற சீரழிவை சரி செய்வதற்கு என்ன செய்வது, எப்படி செய்வது, யாரால் இயலும் என்ற கவலை நாட்டுப்பற்றாளர்களுக்கு ஏற்பட்டுவிட்டது என்று மிகவும் கவலைப்பட்டு எழுதியுள்ளார்.

திராவிடர் இயக்க ஆட்சியில் எந்த நல்லதும் நடந்து விடவில்லையா? சாதனைகள் ஏதும் நிகழ்த்தப்பட வில்லையா?
 
திராவிடர் இயக்கத்தைவிட சாதனை செய்தவர்கள் யார்?


சென்னை மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர், சுயமரியாதைத் திருமணத்திற்குச் சட்டவடிவம், தமிழ்நாட்டில் இரு மொழிக்குத்தான் இடம்; மூன்றாம் மொழி இந்திக்கு இடமில்லை.

தமிழ்நாட்டில் 69 சதவிகித இட ஒதுக்கீடு (By an Act) பெண்களுக்குச் சொத்துரிமைச் சட்டம் பெண்கள் மறுமலர்ச்சிக்கான அடுக்கடுக்கான திட்டங்கள் (அன்னை நாகம்மையார், டாக்டர் முத்துலட்சுமி, டாக்டர் தருமாம்பாள், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்,

அன்னை மணியம்மையார், டாக்டர் சத்தியவாணிமுத்து முதலிய வீரப் பெண்மணிகளின் பெயர்களில் எத்தனை எத்தனைப் பெண்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள்), பெரியார் நினைவு சமத்துவபுரம், தமிழ் செம்மொழிக்கான அங்கீகாரம், அனைத்து ஜாதியினருக்குமான அர்ச்சகர் உரிமைச் சட்டம் - இவையெல்லாம் கண்களுக்குத் தெரியவில்லையா? திராவிடர் இயக்கக் கொள் கைகளின் விளைச்சல் இவற்றில் எதிரொலிக்கவில்லையா?

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் சுயமரியாதைத் திரு மணத்தைச் செல்லும்படியாக்கவேண்டும் என்று தனி நபர்களாக (சட்டமன்ற உறுப்பினர்கள் மாதவன், போளூர் அண்ணாமலை) தீர்மானங்களைக் கொண்டு போன நிலையில், காங்கிரஸ் ஆட்சியினர் ஏன் ஏற்றுக்கொள்ள வில்லை? சுயமரியாதைத் திருமணத்தை வரையறுக்க முடியுமா? (Define) என்று அமைச்சர் ஆர்.வெங்கட்ராமன் சட்டமன்றத்தில் சொன்னாரே, மறந்துவிட்டதா?

சுயமரியாதைத் திருமணம் என்று வருகிறபோது பெரியார் சொன்னபடி எளிமையாக நடக்கவில்லையே என்று அதிலும் குறையைக் காணும் கண்ணோட்டம்.

திருமணம் மட்டுமல்ல, எளிமையாக, சிக்கனமாக எல்லாவற்றிலும் நடந்துகொள்வது நல்லதுதான். அதை வலியுறுத்துவோம் - நல்லெண்ணம் இருந்தால் இப்படித்தான் சிந்திப்பார்கள்.

பார், பார், சிக்கனமாக சுயமரியாதைத் திருமணங்களை நடத்தச் சொன்னார் பெரியார் - தி.மு.க. - அ.தி.மு.க.வினர் களோ ஆடம்பரமாக நடத்துகின்றனர் என்று அதிலும் குறை காணும் இடத்தைப் பெரிதுபடுத்தும் கண்ணோட்டம்தான் குதித்து எழுகிறது.

திராவிட இயக்கப் பொதுக்கூட்ட மேடைகளிலும், மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞர் அவர்களின் வீட்டிற்கே வந்தும்கூட தோழர்கள் எளிய முறையில் சுயமரியாதைத் திருமணங்கள் செய்துகொள்வதெல்லாம் இவர்களின் கண்களுக்குப் படவே படாதா?

இந்தியத் துணைக் கண்டத்திலேயே பார்ப்பனீயப் பண்பாட்டு ஆதிக்கத்தை ஆணிவேரோடு கெல்லி எரியும் மிகப்பெரிய சாதனையை - வரலாற்றையே திருப்பிப் போட்ட புரட்சியைச் செய்து காட்டியவர்கள் யார்? திராவிடர் இயக்கத் தலைவர் தந்தை பெரியார்தான் செய்தார்; திராவிடர் இயக்க ஆட்சிதான் சுயமரியாதைத் திருமணத்திற்குச் சட்ட வடிவம் கொடுத்தது என்பதை ஒப்புக்கொள்ள மனம் வரவில்லையே, ஏன்?

எப்படி வரும்? முள்ளிவாய்க்கால் நினைவு வளாகத்தில் இடம்பெறத் தகுதியில்லாதவர் பெரியார் என்ற சிந்தனை உள்ளவர்களிடத்தில் வேறு எதைத்தான் எதிர்பார்க்க முடியும்?

தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் பெரியார் எந்தவிதத் தொண்டும் செய்யவில்லை என்ற முடிந்த முடிவுக்கு வந்தவர்கள் வேறு எப்படித்தான் எழுதுவார்கள்?

நல்லதுதான்! இதன்மூலம் வரலாற்றுக்கு இவர்கள் தங்களை அடையாளம் காட்டிக் கொண்டு விட்டார்கள் - ஒரு வகையில் அதுவும் வரவேற்கப்படவேண்டியதுதான்.

தமிழர் தலைவரின் பண்பாடு மிளிரும் அறிக்கையின் கருத்தை காமாலைக் கண்ணோடு பார்த்து, திராவிடர் இயக்கத்தையும், அதன் தலைவர்களையும் கொச்சைப் படுத்தும் வகையில் திசை திருப்பும் பார்ப்பன ஏடுகளோடு சங்கமமாகி அந்தப் பார்ப்பன ஏடு மெச்சத் தகுந்த வகையில் கைலாகு கொடுத்துக் கட்டுரை எழுதுவது குறித்து காலந்தாழ்ந்தாவது வருத்தம் அடைவார்கள் என்று கருதுகிறோம்.

திராவிட இயக்கக் கொள்கைகளைப் புறந்தள்ளி செய்யப்படும் எந்த ஒரு செயலும் பார்ப்பனீய நச்சுக் களைக்கு எரு போட்டு, நீர் ஊற்றி வளர்க்கத்தான் பயன்படும் என்பதை எழுதி வைத்துக் கொள்ளட்டும்!

மீள்வது எப்படி? என்று கேட்கிறார்கள். திராவிடர் சமுதாயத்தையே சீர்குலைத்த - ஜாதி சாக்கடைக்குள் குப்புறத் தள்ளிய கொடிய பார்ப்பனீய ஆக்டோபசின் பிடியிலிருந்து மீள்வதற்குத் தந்தை பெரியாரும், திராவிடர் இயக்கமும் செம்மாந்த கருத்துகளையும், வழிமுறைகளையும் கடந்த ஒரு நூற்றாண்டாக கூறியும்,

வழிகாட்டியும் வந்துள்ளனர். அவற்றைப் பின்பற்றினால் மீள்வது சுலபமே! இன்றேல், மொழி உணர்வு, இன உணர்வு, மனிதநேயம் - மாள்வது உறுதி!

ஆஸ்திக சமாஜத்தில் எம்.ஜி.ஆர். பேசியது என்ன?

(ஆஸ்திக சமாஜத்தில் எம்.ஜி.ஆர். 10.4.1976 அன்று கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் ஆற்றிய உரை குறித்து சிலர் எகிறிக் குதிக்கிறார்கள். மாற்றுக் கருத்துக் கொண்டவர்களை விவாதத்துக்கு அழைத்து அவர்கள் கருத்தைக் கேட்டு பதில் கூறும் ஆற்றல் பகுத்தறிவாளர்களுக்கே உண்டு என்பதை எத்தனையோ நிகழ்ச்சி நடத்தி நிரூபித்துக் காட்டப்பட்டுள்ளது.

ஆஸ்திக சமாஜத்தில் வந்து பேசுகிறவர்கள் எல்லாம், பட்டை அடித்துக் கொண்டு, காவிஉடை தரித்துக் கொண்டுதான் இருக்க வேண்டும் என்றால், அதற்கு எம்.ஜி.ஆர். போன்றவர்களை அழைத்திருக்கவே வேண்டாமே!

அவரவர்கள் கருத்தைக் கூறினாலே, மதத்தைப் புண்படுத்தும் பேச்சு என்று கூறுவார் களேயானால், மதம் சுயசிந்தனையை தடுக்கிறது என்ற பகுத்தறிவாளர்களின் கருத்துக்கு அவர்கள் கட்டியங் கூறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் பொருள்!

ஆஸ்திக சமாஜத்தில் எம்.ஜி.ஆர். பேசியதுதான் என்ன? அவர் பேசிய பேச்சுக்களில் ஒரு சில பகுதி களையும், ஆஸ்திக சமாஜத்தில் நடந்த நிகழ்ச்சியையும் கீழே தந்துள்ளோம்.)

ஆஸ்திக சமாஜத்தில் நாத்திகத்துக்காக வாதாடு கிறவர்களைச் சார்ந்தவன் என்று பெயர் தரப்பட்டி ருக்கிற எம்.ஜி. ராமச்சந்திரனை அழைத்துள்ளீர்கள். ஆத்திக சமாஜத்தில் எம்.ஜி. ராமச்சந்திரனா?.. இந்தக் கேள்வி சிலருக்கு திகைப்பாக இருக்கக்கூடும். ஆத்தி கம் பற்றியும் நாத்திகம் பற்றியும் இதே மேடையில் நிறையப் படித்தவர்கள், நன்கு ஆராய்ந்தவர்கள் நிறையப் பேசியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

ஏனென்றால் அதைக் கேட்கும் வாய்ப்பை நான் பெற்றதில்லை. இவர்களும் அந்த வாய்ப்பை எனக்குத் தந்ததில்லை. இனிமேல் தருவார்கள் என்று கருதுகிறேன் என்று மட்டுமல்ல பொது மக்களுக்கும் தருவார்கள் என்று கருதுகிறேன். ஏனென்றால் பொது மக்களுக்குத் தெரியாத எந்தக் கருத்தும், எத்தகைய தத்துவமும் வரவேற்பு பெற முடியாது.

பரலோகத்தில் நம்பிக்கை உண்டா?

பரலோகத்தை நம்பாதவர்களையும், ஈஸ்வரனை வணங்காதவர்களையும், நாதப் பிரமாணத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களையும் நாத்திகர்கள் என்று குறிப்பிட்டார்கள். பரலோகத்தை நம்பப் போகிறோமா, நாதப் பிரமாணத்தை ஏற்கப் போகிறோமா - அதுவல்ல பிரச்சினை. கருமம், நாதோபாசம், ஞானம் இவற்றை ஆத்திகக் கோட்பாடுகளாகக் கூறினார்களே அதை ஏற்றுக் கொண்டவர்கள் அவற்றைக் கடைப்பிடிக் கிறார்களா?

கருமம் எது?

நான் இங்கே மனம் திறந்து சில கேள்விகளை வெளிப்படையாகக் கேட்க விரும்புகிறேன். கருமம் என்று குறிப்பிட்டிருக்கிறார்களே, எதை? இன்றைய தினம் இந்த 76ஆம் ஆண்டிலும் அவரவர் கருமத்தை யார் ஒழுங்காகச் செய்கிறார்கள்? சிந்தித்துப் பார்க்க வேண்டும். நான் ஆத்திகன் என்று சொல்லிக் கொள்ப வர்களில் எத்தனை பேர் அதற்குரிய கருமத்தை ஒழுங்காக நிறைவேற்றுகிறார்கள்?

வேஷம் போடுவதா?

நான் வேதனையோடு சொல்கிறேன்; ஆத்திகர் என்று தங்களைக் கூறிக் கொள்பவர்களில் நூற்றுக்கு 95 பேர் கடவுளை நம்புவதாக வேஷம் போடுகிறார்கள். எம்.ஜி.ஆர். இவ்வாறு பேசி முடித்ததும், அந்த சமாஜத்தின் தலைவரான ரத்தினம் அய்யர் என்பவர் பேச வந்தார்.
அவர் பேசுகையில், எம்.ஜி.ஆர். எத்தனையோ தருமங்களை செய்துள்ளார். அவர் நாத்திகராக இருந் தால் தருமம் செய்ய வேண்டும் என்ற சிந்தனையே வராது. நிச்சயமாகச் சொல்கிறேன், சத்தியமாகச் சொல்கிறேன்.

நாத்திகர்கள் கடவுள் இல்லை. இல்லை என்று சொல்லத்தான் ஆத்திகம் வளர்ந்து கொண்டிருக்கிறது என்று கூறிவிட்டு, தந்தை பெரியாரின் கடவுள் மறுப்புத் தத்துவங்களை மிகவும் தாக்கிப் பேசினார்.

எம்.ஜி.ஆர். குறுக்கீடு

அப்போது எம்.ஜி.ஆர். எழுந்து ஒலி பெருக்கியை பிடித்துக் கொண்டு இடைமறித்துப் பேசுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கூறி ரத்தினம் அய்யர் நான் கொடுப்பதாகப் பாராட்டியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் நாத்திகர்கள் தரமாட்டார்கள் என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். நான் என்னை நினைத்து இதைச் சொல்லவில்லை. பொதுவாகவே இதைச் சொல்கிறேன்.

நாத்திகம் பரவப் பரவத்தான் ஆத்திகமும் பரவுகிறது என்று கூறிய அவர், பிறகு பெரியாரின் நாத்திகக் கருத்துகளை ஏன் தாக்க வேண்டும்? (சமாஜத் தலைவர் உண்மைதான்... உண்மைதான்...)

எம்.ஜி.ஆர். பேசுகிறார்: ஆஸ்திகம் என்ற சொல்லில் உள்ள ஆஸ்தி என்பதற்கு உள்ளது என்று ஒருபொருள் கூறப்படுகிறது. உள்ளது என்று கூறுவதற்கு ஒரு ஆள் இருந்தால் இல்லை என்று மறுப்பவர்களும் இருக்கவே செய்வார்கள். (சமாஜத் தலைவர்: உண்மைதான், உண்மைதான்).

எம்.ஜி.ஆர். பேசுகிறார்: ஜாதி உண்டு என்று சொல்பவர்கள் இருக்கும் வரை, ஜாதி இல்லை என்று சொல்பவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். பணக் காரர்கள் வேண்டும் என்று சொல்பவர்கள் இருந்தால் வேண்டாம் என்று சொல்பவர்களும் இருப்பார்கள்.

இவ்வாறு எம்.ஜி.ஆர். கூறினார்.
(நன்றி: தென்னகம்)
(விடுதலை 19.4.1976)
இதற்குப் பதிலென்ன லட்சுமி நாராயணரே?

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...