Monday, January 9, 2017

பார்ப்பனரின் புலம்பலா, பொய்யழுகையா? தமிழர் தலைவர் ஆசிரியரின் அறிக்கை


தமிழர்களின் நாகரிகத்தை உலகுக்கு உணர்த்தும் கீழடியில் தொல்பொருள் ஆய்வை நிறுத்துவதா?
துக்ளக் இதழில் (11.1.2017) வெளிவந்த பார்ப்பன அமைப்பின் விளம்பரத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்
கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
துக்ளக்கின் விளம்பரம் இதோ:
அறிமுகம்:
Website: www.BrahminsforSociety.com
Great Contributors:
தன் தியாகத்தால் நம் நாட்டுக்கு
பெருமை சேர்த்தவர்கள் /
தன் திறமையால் தானும் உயர்ந்து
பிறரையும் உயர்த்தியவர்கள்;
இது அடுத்த தலைமுறைக்கான Electronic Database
இடஒதுக்கீடு: இன்றைய தமிழ் நாடு அரசு வேலையில் நம் பங்களிப்பு 0% சதவிகிதத்திற்கு அருகில் இருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளில் நீங்கள் அரசு வேலைக்கு முயற்சி செய்யும் நம் குல இளைஞனை கண்டதுண்டா? இல்லை! இல்லை!! இல்லவேயில்லை!!! நம் இளைஞர்கள் சமூக நிலவரம் புரிந்து, மறுக்கப்படும் அரசு வேலையில் இருந்து விலகி இருக்கிறார்கள். இடஒதுக்கீட்டில் இப்போதைய நம் நிலை என்னவாக இருக்க வேண்டும்? ஒரு பார்வை.
குருவிக் கூட்டம்: 5-ல் மூன்று தம்பதிகள் ஒரு குழந்தையுடன் நிறுத்துகிறார்கள். 5-ல் 2 இளைஞர் களுக்கு திருமணம் ஆவதில்லை. 10-ல் ஒரு குடும்பம் தமிழ்நாட்டை விட்டு வெளியேறி தன் அடையாளம் இழக்கிறது. திருமண வயது 30 தாண்டி போய் கொண்டிருக்கிறது. 50 வயதுக்கு கீழ் அரசு ஊழியர், எழுத்தாளர், ஆசிரியர், கல்வியாளர், பத்திரிகையாளர், வக்கீல்கள், நீதிபதிகள், சரித்திர ஆராய்ச்சியாளர்கள், தமிழ் அறிஞர்கள், பல துறைகளில் வல்லுநர்கள் என பொதுவாழ்வில் எவரும் இல்லை. தமிழ்நாட்டில் அனைத்து துறைகளிலும் மிகப் பெரிய பங்களிப்பை கொடுத்த சமூகம், இன்று  Tech  கூலிகளாக சுருங்கி விட்டோமா?
திருமணம்: லட்சம் இளைஞர்களுக்கு திருமணம் ஆகப் போவதில்லை. ஆண், பெண் விகிதாச்சாரம் மிக மிக மோசமான சரிவில் இருக்கிறது. இந்தப் பிரச்சினை அடுத்த 20 ஆண்டுகளில் நம் சமூகத்தை முழு அழிவில் நிறுத்தும். தமிழகத்தில் ஒரு குலத்தோர் மற்றும் கர்நாடக பிராமணர்கள், இதே பிரச்னைக்கு எப்படி தீர்வை நோக்கி செல்கிறார்கள் - E Book.
வெறுப்பின் நிழலில்: "My Code is My Craft"  என்று பெருமையாய் சொல்லும் Software நிறுவனத்தின் Management 
கூட்டத்தில் “இங்கு இருக்கும் பிராமணர்கள் கை தூக்குங்கள்" என்றார்கள். கைகள் தூக்கப்பட்டன. "எங்களுக்கு பிராமணர்கள் தேவை இல்லை. அடுத்த
6 மாதத்தில் நீங்கள் அனைவரும் விலகலாம்" (மீன்களின் கண்ணீர்?) - வெறுப்பை எதிர் கொண்டு அதை அன்பால் வென்றவர்கள் நிஜ கதைகள்.
வைதீகத்தில் இருப்பவர்களின் இன்றைய நிலை என்ன? "அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்" என்பதில் நம் நிலைப்பாடு என்னவாக இருக்க வேண்டும்.
About us  கண்ணாடியின் முன்னே, தமிழ் கல்வி (white space for next generation) நான் ஆரியனா? (ஒரு சாமானியன் பதில்) (பதில் என்ன?), நம் தேவைகள் மற்றும் கனவுகள் ஆகலாம் வாங்க (Business Networ...) etc...
We say "No" to Donations, "No" to membership "No" to politics, "No" to hatred against any one.
Email: contact@BrahminsForSociety.com Fb:Brahmins Tamilnadu.
(We are in the draft version;
Looking for change agents like you to complete (y) Our mission.)
- மேலே கண்ட ஒரு பக்க விளம்பரம் 'துக்ளக்' 11.1.2017 இதழில் வெளி வந்துள்ளது!
contact@BrahminsForSociety.com Fb:Brahmins Tamilnadu â¡ø e-mail - - மின்னஞ்சலிலிருந்து இந்த விளம்பரம்.
ஸ்ரீமான்களான பூதேவர்களே, உங்களின் இந்த அழுகை பொய் அழுகையா? அல்லது நிஜப்புலம்பலா?
இடஒதுக்கீட்டில் உங்களது மக்கள் தொகையான 3 சதவிகிதத்திற்கு மேல், 3 அல்லது 4,5 மடங்கினை இன்னமும் எல்லாத் துறைகளிலும் அனுபவித்துக் கொண்டே இப்படி ஒப்பாரியை வைத்து உங்களவா எல்லோரையும் கூட்டிடும் முயற்சியா?
குழந்தை பெற்றுக் கொள்ளவோ, கல்யாணம் செய்து கொள்ளவோ எந்த திராவிடன் - தமிழன் - பார்ப்பனரல்லாதான் உங்களைத் தடுத்தான்? தடுக்கிறான் இல்லையே!
குருவிக் கூட்டமாகவா உள்ளீர்கள்? நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்;  பருந்துக் கூட்டமாய், வல்லாதிக்க வல்லூறுக் கூட்டமாகவல்லவா இன்றும் எங்களை அடிமைப்படுத்துகிறீர்களே, அதற்கு என்ன பதில்?
ஒரு காலத்தில் பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் படிக்கவே கூடாது என்கிற மனு வேத தர்மத்தை எத்தனை ஆயிரம் ஆண்டு காலமாக சூத்திர, பஞ்சம சமுதாயத்தின்மீது சுமத்தி அவர்களை ஏர் கட்டி ஓட்டினீர்கள்?
'தெய்வாதீனம் ஜகத் சர்வம்
மந்த்திராதீனம் துதெய்வதம்
தன்மந்த்திரம் பிராமணாதீனம்
தஸ்மத், பிரபுஜெயத்'.
'இந்த உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது.
கடவுள் மந்திரத்திற்குக் கட்டுப்பட்டது.
மந்திரம் பிராமணனுக்குக் கட்டுப்பட்டது.
எனவே, பிராமணனை வணங்குவதே முதன்மை.'
- இப்படியெல்லாம் எழுதி வைத்து, மற்றவர்களை நம்ப வைத்து, இன்று வரை அவர்களது புத்தியை நீங்கள் சுவாதீனப்படுத்தி, பெரும்பான்மையான முட்டாள்தனத்தை, வெகு சிறுபான்மையான நீங்கள் ஆளுவது எந்த அளவு சரி - நியாயம்?
மற்றவர் நோய் வாய்ப்பட்டாலும் உங்களுக்கு வருமானம்; மரணமடைந்தாலும் தொடர் வசூலுக்குப் பஞ்சமில்லை - அதுவும் "முதல் போடா பக்தி வியாபாரம்", கன ஜோராக நடப்பதை ஏனோ வசதியாக மறந்தீர் அல்லது மறைத்தீர்? விதைக்காது விளையும் கழனி என்று அறிஞர் அண்ணா உங்களைப்பற்றி அழகாகச் சொல்லியுள்ளாரே!
இப்போது எம்மக்களுக்கு சிறிது மாறுதல் என்ற வுடன் இப்படி ஒரு பொய் அழுகையா? புலம்பலா? வெறுப்பின் நிழல் அல்ல; நெருப்பின் சூடு எங்கள் சமுதாய உழைக்கும் மக்கள் மீது எவ்வளவு காட்டமாக இருந்தது என்பதற்கு இதிகாச கால ஏகலைவனும், சம்பூகனும், பிற்கால நந்தன்களும் சாட்சியங்கள் அல்லவா? வெறுப்பின் நிழலில் இவாள் நிற்கிறார்களா? பொறுப்பின்மையால் புலம்புகின்றனர்! எங்கள் தாய் மார்களை "தேவடியாள்களாக" மானமிழக்கச் செய்து, எங்களை தாசி மக்கள் - வேசி மக்களாக இன்னமும் எழுதியுள்ள நீங்கள் வெறுப்பைப் பற்றி வேதாந்தப் பாடம் எடுப்பது என்னேகொடுமை! என்னே தலைகீழ் நிலைமை!!
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை பற்றியும் உங்கள் விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளீர்களே - எங்களை சூத்திரன் பஞ்சமன் என்று சொல்லி, நாங்கள் நுழைந்தால் சாமி தீட்டுப்பட்டு விடும், செத்து விடும் என்கிறீர்களே, நீங்களா திருந்தி விட்டீர்கள் - மாற்றம் பெற்றுள்ளீர்கள்!
புத்தரை விழுங்கிய உங்களால் பெரியாரை விழுங்கிட முடியாமல் திணறித் திக்கு முக்காடி தெருவில் வந்து புலம்புகிறீர்கள் என்று தானே பொருள் கொள்ளப்படும்?
புத்தரை விரட்டினீர்! காந்தியைக் கொன்றீர்கள்!! பெரியார் தாக்கத்திடமும், தர்க்கத்திடமும் உங்கள் கதை எடுபடவில்லை.
காரணம் பெரியார் வெறும் தத்துவம் மட்டுமல்ல;
நடைமுறை - வாழ்க்கை நெறி! வீண் பழிக்கஞ்சாப் பாதை ஈரோட்டுப் பாதை; வரலாறு உண்மைகளைக் கூறும்போது அது கசப்பாக இருக்கும் - பிறகு உலகத் திற்கே வெளிச்சம் தரும்!
தொடருங்கள் உங்கள் மாய்மாலத்தை; நாங்கள் தொடர்ந்து கொடுக்கிறோம் - சொடுக்கிறோம்.

கி.வீரமணி
பெரியாரின் தொண்டர்களின் தொண்டன்

சென்னை
8-1-2017


.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...