Saturday, February 4, 2017

பிரதமரும் - நாடாளுமன்றமும்! மோடிக்கு சில ஆலோசனைகள்!!

- ஷர்மிஷ்தா முகர்ஜி-
(நாடாளுமன்றக் கூட்டங்களில் அடிக் கடி கலந்து கெள்ளாமல் போவதும், திரும்பத் திரும்ப அவை உறுப்பினர்கள் கேட்கும்போதும் நாடாளுமன்றத்தில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை பற்றி ஒரு வார்த்தை பேசுவதற்கு அவர் மறுத்து வருவதும், ஆனால் அதே நேரத்தில் நாடா ளுமன்றத்திற்கு வெளியே அதைப் பற்றி அவர் பேசுவதும்,  நாடாளுமன்றத்தின் மீது பிரதமர் மோடி வைத்துள்ள மரியாதை இன்மையையே காட்டுவதாக இருக்கிறது.)
அதற்கு முன்பு ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகவே இல்லாமல் இருந்த ஒருவர் பிரதமர் வேட்பாளராக - இந்தியாவில்  முதன் முறையாக 2014 மே 20 ஆம் தேதி  பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் நரேந்திர மோடி சரித்திரம் படைத்துவிட்டார். பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மோடி நாடாளுமன்றத்திற்குள் நுழையும் முன்பு, நாடாளுமன்ற வாசற்படியின் மீது தனது தலை  பட  நாடாளுமன்றத்தைத் தரையில் வீழ்ந்து வணங்கினார்.  அதன் பின், மிகுந்த உணர்ச்சி வசப்பட்டு அவர் ஆற்றிய உரையில், நாடாளுமன்றத்தை ஜனநாய கத்தின் கோயில் என்று  வர்ணித்தார். இவ்வாறு செய்த ஒருவர் ஓர் இரண்டரை ஆண்டு காலத்திற்குப் பிறகு, இந்தக் கோயிலை என்னென்ன வழிகளில் இழிவு படுத்த  முடியுமோ அவ்வளவையும் செய்து, நாடாளுமன்றம் என்ற அமைப்பையே அதிகாரம் அற்றதாகச் செய்து விட்டார்.
ஒரு ஜனநாயக நாட்டு மக்களின் ஒன்றுபட்ட விருப்பம், உறுதி, பேரறிவு ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஓர் உயர்ந்த சட்ட மன்ற அமைப்புதான் நாடாளுமன்றம். மக்களவைக்கு நேரடியாகவும், மாநிலங்களவைக்கு மறைமுகமாகவும் தாங்கள் தேர்ந்தெடுக்கும்  பிரதிநிதி கள் மூலம்  நாட்டின் எதிர்காலத்தை மக்கள் தீர்மானித்து வடிவமைக்கின்றனர். ஒரு சட்ட மன்றத்தின் மிகமிக முக்கியமான பணிகளில் சட்டங்களை இயற்றுவதும், திருத்துவதும் ஒன்றாகும். நாடாளுமன்ற அவைகள் கூடி நடைபெறாமல் இருக்கும் காலங்களில், உடனடி யான தேவைகளுக்காக, குடியரசுத் தலைவர் அவசர சட்டங்களைப் பிரகடனப்படுத்த முடியும். ஒரு நெருக்க டியான சூழ்நிலையை சந்திப்பதற்காக மட்டுமே, நிர்வாகத் துறைக்கு  நெருக்கடி கால அதிகாரம் என்ற தன்மையில்,  சட்ட மன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரமே அவசர சட்டம் பிறப்பிக்கும் அதிகாரம் என்று உச்சநீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. எவ்வாறாயினும், தனது விருப்பத்தை அவசர சட்டங்களின் மூலம் நிறைவேற்றிக் கொள்வதற்கு முயற்சி செய்வதன் மூலம், நாடாளுமன்றத்தின் அதிகாரத்துக்கு இடைவிடாது, தொடர்ந்து அச்சுறுத்தலை மோடி அரசு விடுத்துக் கொண்டே இருக்கிறது. இந்த இரண்டரை ஆண்டு கால ஆட்சியில் 23 முறை அவசர சட்டங்கள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் எண்ணிக்கையை விட முக்கியத்துவம் வாய்ந்தது என்னவென்றால், பல அவசர சட்டங்களின் தன்மையைப் பற்றியதுதான்.
நிலம்கையகப்படுத்துதல்,புலம்பெயர்ந்தமக்களை மறுகுடியேற்றம் செய்வித்தல், வெளிப்படையான நட வடிக்கை மற்றும் நியாயமான இழப்பீடு அளிப்பதற்கான (திருத்த மசோதா), நிலம் கையகப்படுத்தும் சட்டம் என்று பொதுவாகக் கூறப்படும் சட்டமசோதவை இதற்கு சரியான எடுத்துக் காட்டாகக் கூறலாம். இந்த மசோதா மூன்று முறை அவசர சட்டமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
70 சதவிகித இந்தியக் குடிமக்களை பாதிக்கும் இந்த சட்டம், பா.ஜ.க. உள்ளிட்ட  அனைத்துக் கட்சிகளுடனும் அகண்ட கலந்தாலோசனைக்குப் பிறகு,  முதன் முதலில்  இரண்டாவது அய்க்கிய முன்னேற்றக் கூட்டணி அரசால் 2013 இல் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் 2014 ஆம் ஆண்டில் மோடி அரசு அதி காரத்துக்கு வந்த உடனே, விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் எதிரானது என்ற அளவில் இந்த சட்டத்தை நீர்த்துப் போகச் செய்தது.
தனது கார்ப்பரேட் நண்பர்களுக்கு உதவி செய்யும் ஆர்வத்தில், மோடியும் அவரது அரசும் இந்த சட்டத்தின் உணர்வையே கொன்றுவிட்டு, நாடாளுமன்றத்தின் அதிகாரத்துக்கு முற்றிலுமாக மதிப்பு அளிக்காத முறையில், மக்களவையில் தங்களுக்கு உள்ள அறுதிப்பெரும்பான்மையைக் கொண்டு இந்த சட்டத்தை எப்படியாவது நிறைவேற்றிவிட வேண்டும் என்று தலை கீழாக நின்று பார்த்தனர். என்றாலும், எதிர்கட்சிகள் ஒற்றுமையாக இருந்த காரணத்தால், இந்த திருத்த மசோதா கைவிடப்பட்டது.
இந்தியாவின் 125 கோடி மக்களும் பாதிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை அமைச்சரவைக் கூட் டம் ஒன்றில் முடிவு செய்யப்பட்டு, முடிவெடுத்த இரண்டுமாதங்களுக்குப்பிறகுதான்அந்தமுடிவிற் கான அவசர சட்டம் ஒன்று பிரகடனம் செய்யப் பட்டது. இது போன்றதொரு பெரிய முக்கியமான முடிவை எடுக்கும் முன், மக்கள் பிரதிநிதிகள் ஏன்கலந்தாலோசிக்கப்படவில்லை?1978ஆம் ஆண்டில் மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த போதுமேற்கொள்ளப்பட்டபணமதிப்பிழப்புநடவடிக் கையும் கூட அவசர சட்டத்தின் மூலம்தான் நடை முறைப்படுத்தப்பட்டது என்று வாதாடலாம். ஆனால், அப்போது புழக்கத்தில் 2 சதவிகிதம் அளவில் மட்டுமே இருந்த 1000, 5,000, 10,000 ரூபாய் நோட்டுகள்தான் மதிப்பிழக்கச் செய்யப்பட்டன. ஆனால் இப்போது அதிர்ச்சி அளிக்கும் அளவில் புழக்கத்தில் உள்ள 86 சதவிகித ரூபாய் நோட்டுகள் மதிப்பிழக்கச் செய்யப் பட்டுள்ளன.
2016 இல் பாமர மக்களிடம் 500, 1000 ரூபாய் நோட்டுகள் இருந்ததுபோல, 1978 இல் மக்களிடம் 1000 மற்றும் அதற்கு அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் இருக்கவில்லை. நாடாளுமன்றத்தைப் பற்றிய மோடியின் மரியாதை அற்ற தன்மையை, அடிக்கடி அவர் நாடாளுமன்றக் கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் இருப்பதும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையைப் பற்றி அவர் நாடாளுமன்றத்திற்கு வெளியே பேசிக் கொண்டிருக்கையில், அதுபற்றி நாடாளுமன்றத்திற்குள் ஒரு வார்த்தையும்  பேசாமல் இருப்பதும் சுட்டிக்காட்டுகின்றன.  இவ்வாறு செய்வது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் கண்ணியத்திற்கு முற்றிலும் எதிரானதாகும். நாடாளுமன்ற அவைக் கூட்டங்கள் நடந்து கொண்டிருக்கும்போதே, நாடாளு மன்றத்திற்கு வெளியே முக்கிய பிரச்சினைகள் பற்றிய விமர்சனங்களை செய்து வருவதும், ஆனால் அது பற்றி நாடாளுமன்றத்தில் பேச அவர் மறுப்பதும் மிகப் பெரிய அவலமாகும்.
நாடாளுமன்ற நடவடிக்கைகள் தடைபடுவது அனைத்து குடிமக்களுக்கும் கவலை அளிக்கும் ஒரு செய்தியாகவே ஆகிவிட்டது.  நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய பொறுப்பும் கடமையும் ஆட்சி அதிகாரத்தில் உள்ள அரசுடையதாகும்.  கடந்த சில ஆண்டு காலமாக, நாடாளுமன்ற நடவடிக்கைகளை தடை செய்வது என்பது படிப்படியாக ஒரு வழக்கமாகவே ஆகிவிட்டது; என்றாலும் இது ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல.
ஆனால்,இந்தியஜனநாயகவரலாற்றில்முதன் முறையாகஆளுங்கட்சிஉறுப்பினர்களால்அவை நடவடிக்கைகள் தடைபட்டுப் போனது. அவைத்தலை வரிடம் முழக்கங்கள் எழுதிய அட்டைகளைக் காட்டுவதன் மூலமும், எதிர்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத்தைப் பேசவிடாமலும்,  மாநிலங்களவையின் நடவடிக்கைகளுக்கு பா.ஜ.க. உறுப்பினர்கள் இடையூறு விளைவிக்கத் தொடங்கிவிட்டனர். பா.ஜ.க. மூத்த உறுப்பினரும், அமைச்சருமான ஒருவர் எதிர்க்கட்சித் தலைவரை தேசத்துரோகி என்று முத்திரை குத்தியது  படுகேவலமான செயலாகும்.
தனது எதிரியாக மோடி பார்க்கும் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவைப் பற்றிய கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஒரு நிகழ்ச்சி, நாடாளுமன்ற ஜனநாயகம்பற்றி நமது மூதாதையர்கள் என்ன நினைத்தார்கள், எவ் வாறு நடந்து கொண்டார்கள் என்பதை எடுத்துக் காட்டும்.ஜனசங்கக்கட்சியின்தோற்றுநரான சியாம் பிரசாத் முகர்ஜி 1952 மக்களவைத் தேர்தலில் தேர்ந் தெடுக்கப்பட்ட பாரதிய ஜனசங் கட்சியின் மூன்று உறுப்பினர்களில் ஒருவராவார். ஒவ்வொரு கட்சியிலும் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் அவர்கள் பேசுவதற்கான நேரம் நாடாளுமன்ற விதிகளின்படி ஒதுக்கப்படும். ஜனசங்கம் கட்சிக்கு இவ்வாறு ஒதுக்கப்படும் நேரம் மிகமிகக் குறைவானதாக இருந்தது. என்றாலும் அனைத்து முக்கிய விவாதங்களிலும்  கலந்து கொண்ட முகர்ஜி பல நேரங்களில் ஒதுக்கப்பட்ட நேரத்தையும் கடந்து பேசியுள்ளார். ஒரு முறை அவர் இவ்வாறு பேசும்போது ஒரு காங்கிரஸ் உறுப்பினர் எழுந்து அதற்கு ஆட்சேபம் தெரிவித்தார். அப்போது அவையில் இருந்த நேரு, ‘‘நீங்கள் பேசும்போது அவையினர் மட்டுமே கவனிக் கின்றனர்; ஆனால், டாக்டர் முகர்ஜி பேசும்போது ஒட்டு மொத்த இந்தியாவே கவனிக்கிறது. எனவே  அவர் தொடர்ந்து பேசட்டும்’’ என்று கூறினார்.
அத்தகைய உணர்வுதான் அக்காலத்தில் நிலவியது. தலைவர்கள் ஒருவரிடம் ஒருவர் வைத்திருந்த மரியாதையை அது காட்டுகிறது. தனது அரசியல் முன்னோர்களிடமிருந்து மோடி இந்த உணர்வைக் கற்றுக் கொண்டு, அதனைத் தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு போதிக்க வேண்டும்.
‘‘ஜனநாயகத்தின் கோயிலான நாடாளுமன்றத்திற்கு அவரால் அளிக்கப்பட இயன்ற மாபெரும் மரியாதை அதுதான்.’’
நன்றி: ‘டெக்கான் கிரானிகிள்’,  17.01.2017
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...