Tuesday, May 23, 2017

தந்தை பெரியார் சொன்ன மாற்று உணவு முறையே நோய்களைக் குணப்படுத்தும் “பேலியோ’’ உணவுமுறை!

ஆய்வுகள் தொடரப்படவேண்டியதும் அவசியமாகும்


சென்னை, மே 22- மக்களிடையே மிக வேகமாக பரவிவரும் பேலியோ உணவு முறை பற்றிய விளக்கவுரைக்கூட்டம் பெரியார் நூலக வாசகர் வட்டத்தில் நடைபெற்றது. இந்த உணவுமுறையா னது 1930ஆம் ஆண்டுகளிலேயே தந்தை பெரியார் அவர்கள் வேறு முறையில் சொல்லியிருக்கின்றார் என்பது குறிப் பிடத்தக்கது. ஆய்வுகள் தொடரப்பட வேண்டும்.
 
வரலாறு படைக்கும் பெரியார் நூலக வாசகர் வட்டம்!

பெரியார் நூலக வாசகர் வட்டம் 1.1-.1978இல் தொடங்கப்பட்டது. இவ் வமைப்பு 40ஆவது ஆண்டில் அடி யெடுத்து வைத்துள்ளது. இது எந்த சூழ்நிலையிலும் இடைநிற்காமல் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இந்த அமைப்பின் 2238 ஆவது நிகழ்ச் சியாக, இன்று உலகமெங்கும் பரபரப் பாக பேசப்பட்டும், ஏற்றுக்கொள்ளப் பட்டும் வருகிற “பேலியோ’’ உணவு முறை பற்றிய ஒரு கருத்தரங்கம் பெரி யார் திடலில் உள்ள அன்னை மணி யம்மையார் குளுமை அரங்கத்தில், ஏற் பாடு செய்யப்பட்டிருந்தது. வாசகர் வட் டத்தின் பொருளாளர் சேரன் அவர்கள் 18-.5.-2017 அன்று மாலை சரியாக 7 மணிக்குத் தொடங்கி வைத்தார். நிகழ்ச் சிக்கு திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர். கலிபூங்குன்றன் தலை மையேற்று சிறப்பித்தார். சிறப்புரை நிகழ்த்த வருகை தந்திருக்கும் சங்கர்(ஜி) அவர்களை உடுமலை வடிவேல் அறிமுகம் செய்துவைத்துப் பேசினார். பா.மணியம்மை அவர்கள் நன்றியுரை வழங்கினார். சிறப்புரையாளருக்கு துணைத் தலைவர் கவிஞர். கலிபூங் குன்றன் அவர்கள் ஆடைபோர்த்தி இயக்க நூல்களைக் கொடுத்து மரியாதை செய்தார்.

தந்தை பெரியாரின் தொலைநோக்கு!

அறிமுவுரைக்குப்பின்னர் கவிஞர் தலைமையுரையை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், திருச்சி தோழர் வி.சி. வில்வம் அவர்கள் இந்த உணவுமுறை யைப் பற்றி சிலமாதங்களுக்கு முன்னர் தனது கவனத்திற்கு கொண்டுவந்தபோது தான் பெரிதாக இதில் ஆர்வம் காட்ட வில்லை என்று குறிப்பிட்டுவிட்டு, காரணம்? அதற்கு ஆதாரம் வேண்டு மல்லவா? என்று அவரே இரட்டைக் கேள்விகளைக் கேட்டு, அதற்கு அவரே பதிலும் சொன்னார். அதாவது, திரா விடர் கழகத்தின் திருவாரூர் தோழர் ஒருவரை சமீபத்தில் தான் ஒரு கழக நிகழ்ச்சியில் சந்தித்ததாகவும், இந்த உணவு முறையைக் கைக்கொண்டு தனது அதிகளவிலான எடையைக் குறைத்துவிட்டதால், அவரே அவரது தம்பியைப்போல இருந்ததை தான் நேரில் கண்டு வியந்து அப்படியே அவ ரிடம் சொன்னதாகவும், மற்றொரு கழ கத் தோழர் சர்க்கரை நோய் காரணமாக தொடர்ந்து இன்சுலின் ஊசி போட்டுக் கொண்டிருந்தவர் இந்த பேலியோ உணவு முறையைப் பின்பற்றியவுடன், ஊசி போடுவதை அறவே நிறுத்திக் கொண்டதையும் குறிப்பிட்டு வியந்தார். அதைவிடவும் அவர் வியப்படைந்த ஒன்றைப் பற்றியும் குறிப்பிட்டார். அதாவது இன்றைக்கு பிரபலமாகியுள்ள இந்த உணவு முறையைப்பற்றி தந்தை பெரியார் 1930 ஆம் ஆண்டுகளிலேயே போகிற போக்கில் குறிப்பிட்டிருப்பது தான் அந்த வியப்புக்குக் காரணம்!

புறக்கணித்தவர்களும் ஏற்கும் மாற்று உணவுமுறை!

தொடர்ந்து சிறப்புப் பேச்சாளர் சங்கர் (எ) சங்கர்ஜி, இந்த உணவுமுறை பற்றிய வரலாற்றை அமெரிக்காவில் வசிக்கும் நியாண்டர் செல்வனில் தொடங்கி சுருக்கமாக எடுத்துரைத்தார். 
பிறகு இன்றைய நிலையில் எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராமல் ஆண்டு முழுவதும், 24 மணி நேரமும் தங்கள் பணிநேரம்போக இந்த உணவு முறை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற் படுத்தி வருவதாகவும், அதனால் இன்று சுமார் 4 லட்சம் பேருக்கு மேல் இந்த உணவுமுறைக்கு மாறியுள்ளதா கவும், அதற்குரிய பலன்களைப் பெற் றுள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்த உணவுமுறைக்கு முதலில் இரத்தபரி சோதனை செய்து அதன் அடிப்படையில்தான் உணவு பரிந்துரைக்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டார். மனித இனம் வரலாற்றில் மாமிசம் சாப்பிட்டது வரையில் மனிதன் இன்றைக்கிருப்பது போன்ற நோய்கள் இல்லாமல்தான் வாழ்ந்திருக்கிறான். இந்த தானிய உணவுகளுக்கு மாறியபிறகுதான் நோய்கள் அதிகரித்தன என்பதைப்பற்றி விளக்கினார்.
 தொடக்கத்தில் கவிஞர். கலிபூங் குன்றன் அவர்கள் வியந்ததைப்போலவே நாங்களும் இதுகுறித்து நிறைய வியந்திருக்கிறோம். ஆனால் இன்று எங்களுக்கு இது சாதாரணமாக ஆகி விட்டது. இதனால் பலனடைந்தவர்கள் பலரும் நாள்தோறும் இதுகுறித்து முக நூலில் பதிவிட்டு வருவதாகவும் அதை அனைவரும் பார்க்கலாம் என்றும் சொல்லிவிட்டு, முக்கியமாக ஒன்றைக் குறிப்பிடவேண்டும் என்று பெண்க ளுக்கு இருக்கும் ஏராளமன நோய்க ளுக்கு இது அருமருந்தாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டு அதைப்பற்றிய விளக்கங்களை அரங்கத்தினர்முன் எடுத்துவைத்தார். அனைத்திற்கும் மக்கள் கைதட்டி வரவேற்புத் தெரிவித்தனர்.
 இதற்காக தொடக்கத்தில் தாங்கள் ஏராளமான விமர்சனங்களுக்கு ஆளான தாகவும், அப்படி தங்களை விமர்சனம் செய்தவர்களே இன்று தங்கள் குழுவில் இணைந்து பயன்பெற்று இதைப்பற்றி பிரச்சாரம் செய்துவருவதாகவும் குறிப் பிட்டார். இதுவரையில் பின்பற்றி வந் துள்ள உணவுமுறையால்தான் மனித னுக்கு பலவிதமான நோய்கள் வருவா தாகவும், பகுத்தறிவுப்படி மனிதன் வாழ்வாதாகயிருந்தால் நம் உடலுக்கு எது சரியான உணவு என்பதை ஆய்வு செய்து உண்ணவேண்டும். அதுதான் இந்த பேலியோ உணவுமுறை என்று எளிமையாக விளக்கினார். 
இது தொடர் பான கூடுதல் தகவல்களைப் பெறுவற்கு முகநூலில் தங்கள் குழுவின் முகவரி யைக் குறிப்பிட்டார். அதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்றோர் கேட்ட கேள்விகளுக்கு உரிய பதில்களை அளித் தார். விற்பனை செய்வதற்காகவே கொண்டுவரப்பட்டிருந்த புத்தகங்களை விருப்பத்துடன் மக்கள் ஏராளமாக வாங்கிச்சென்றனர்.

இந்துத்துவத்திற்கு எதிரான உணவுமுறை!

இறுதியாக பா.மணியம்மை தனது நன்றியுரையில், “மாட்டுக்கறியைச் சாப் பிட்டால் இந்து மதத்திற்கு விரோத மென்று காட்டுமிராண்டிகள் மாதிரி மதவாதிகள் மக்களைக் கொல்லும் இந்த காலகட்டத்தில் மாட்டுக்கறியை மாத்திரமல்ல, எல்லாவகையான கறியையும் சாப்பிடச் சொல்லும் இந்த உணவுமுறை மிகவும் சிறப்பானது.
’’ என்று கூறினார். நிகழ்ச்சியில் கழகத்தின் வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் குமாரதேவன், பெரியார் களம் தலைவர் இறைவி, பண்பொளி, கண்ணப்பன், திவாரி, பெரியார் பிஞ்சு நனிபூட்கை, கோவி.கோபால், பூவை செல்வி, திருக்குறள் இளங்கோவன், பொறியாளர் பத்மநாபன், தொழிலாளர் அணி மாநிலச் செயலாளர் செல்வராஜ், பெரியார் மாணாக்கன், தொண்டறம் ஆகியோரோடு ஏராளமான வாசகர் வட்டத் தோழர்கள் மற்றும் பொதுமக் களும் அரங்கு நிறையும் அளவுக்குக் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...