Wednesday, May 24, 2017

தமிழர்களே! தமிழர்களே! கட்சியால் - ஜாதியால் - மதங்களால் வேறுபட்டு நிற்காதீர்கள்!


தமிழக மக்களின் - மண்ணின் உரிமைகளைக் காப்பாற்றுவதற்காக ஒன்றுபடுங்கள்!
திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
திருத்துறைப்பூண்டி, மே 23- தமிழர்களே, தமிழர்களே! கட்சியால் பிரிந்து நிற்காதீர்கள் - ஜாதிகளால் பிரிந்து நிற்காதீர்கர்ள் -  மதங்களால் வேறுபட்டு நிற்காதீர்கள் - இந்த மக்கள் உரிமைகளைக் காப்பாற்றுவதற்காக - இந்த மண்ணின் உரி மைகளைக் காப்பாற்றுவதற்காக ஒன்றுபடுங்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
13.5.2017 அன்று  திருத்துறைப்பூண்டி தெற்கு வீதியில் நடைபெற்ற தந்தை பெரியாரின் 138 ஆம் ஆண்டு பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
நேற்றும் இன்றும் பெரியாரியல் பயிற்சி பட்டறைகளில் இளைஞர்கள், மாணவ சமுதாயத்தின் ஏறத்தாழ 120 பேருக்கு மேற்பட்டு கலந்துகொண்டு, அந்த நிகழ்வும், அதற்கு முத் தாய்ப்பாக, திராவிடர் கழகத்தின் கொள்கை விளக்கப் பிரச் சாரப் பொதுக்கூட்டமாகவும் இங்கே சிறப்பாக ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது. உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன் பான வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.
அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள், எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வை சொல்லியதுபோல
இருப்பது குறுகிய நேரம்தான் - இருக்கின்ற பிரச்சினை களோ ஒரு நாள் அல்ல பல நாள் பேசினாலும், மாளாத அளவிற்கு இருக்கக்கூடிய பிரச்சினை தமிழ்நாட்டில். அதுவும் மணிக்கு மணி, நிமிடத்திற்கு நிமிடம் மத்திய அரசு கொடுக் கின்ற பல்வேறு அவதாரங்கள் - இவைகளையெல்லாம் வைத்து விளக்கவேண்டும். புரியாதவர்களுக்குப் புரிய வைக்கவேண்டும். அவர்கள் தருகின்ற மயக்க பிஸ்கட்டு களையெல்லாம், இனிப்பாக இருக்கிறது என்று நீங்கள் உண்டு விட்டு, பிறகு உங்கள் பொருளை, உரிமையை இழக்காதீர்கள் என்று சொல்லவேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. ஆகவேதான், இந்தக் கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய் திருக்கின்ற நண்பர்கள் நான் நிறைய பேசவேண்டும் என்று நினைத்தாலும், அதற்கு வாய்ப்பு கிடையாது. என்றாலும், குறையில்லை -அந்தக் குறையைத் தீர்ப்பதற்கு என்ன வழி என்று சொன்னால், அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள், எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வை சொல்லியதுபோல, இதுபோன்ற பிரச்சினைகளுக்கும் தீர்வை வைத்திருக்கிறார். அதுதான் புத்தகங்களை வெளியிடுவது.
என்னுடைய உரை 50 நிமிடங்கள் இருக்கும் என்று சொன்னால், அந்த நேரத்திற்குள், எல்லா கருத்துகளையும் நீங்கள் விளங்கிக் கொள்ள முடியாது என்பதற்காகத்தான், முக்கியமான பிரச்சினைகள் அத்தனையும், கொள்கை விளக்கமாக புத்தகங்களை அச்சடித்துக் கொண்டு வந்திருக் கின்றோம். அவைகளை தோழர்கள் உங்களிடம் கொண்டு வருவார்கள். நீங்கள் அவற்றை வாங்கவேண்டும், படிக்க வேண்டும், சிந்திக்கவேண்டும். பிறருக்கும் அளிக்கவேண்டும்.
நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கின்ற பல்வேறு பிரச்சினைகளில் ஒன்று, நம்முடைய பிள்ளைகள், கிராமத்தில் இருக்கின்ற பிள்ளைகள் எல்லாம் டாக்டர்களாக வந்து மகிழ்ந்த காலம் - எங்கே ‘அந்தக் காலமாக’ மாறிவிடுமோ என்கிற அளவிலே, இன்றைக்கு மிகப்பெரிய அளவிற்குக் கேள்விக்குறி எழுந்திருக்கிறது.
பச்சைத் தமிழர் காமராசர் கேட்ட அறிவார்ந்த கேள்விகள்!
பச்சைத் தமிழர் காமராசர் கல்வி வள்ளல் என்று தந்தை பெரியார் அவர்களால் போற்றப்பட்ட, பாதுகாக்கப்பட்ட, ஆதரவளிக்கப்பட்ட காமராசர் அவர்கள், ஒரு காலத்தில் தெளிவாக ஒரு கேள்வி கேட்டார்,
தகுதி, திறமை என்று பேசிக் கொண்டிருக்கிறீர்களே - டாக்டர்களுக்குத் தகுதி வேண்டும்; என்ஜினியர்களுக்குத் தகுதி வேண்டும் என்றெல்லாம் சொல்லி, எங்களுடைய இனம் படிக்காமல், ஒடுக்கப்பட்டவர்கள் படிக்காமல், முன் னேற விடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறீர்களே என்று கேட்டுவிட்டு,
அவருக்கே உரிய பாணியில் பளிச்சென்று கேட்டார், ‘‘நான் பறையனை டாக்டராக்கினேன்; அவன் ஊசி போட்டு எவன் செத்துப் போனான்’’ என்று கேட்டார்.
‘‘பள்ளனை என்ஜினியராக்கினேன், அவன் பாலம் கட்டி எந்தப் பாலம் இடிந்துவிட்டது’’ என்று கேட்டார்.
உன்னுடைய தகுதியும் தெரியும், உனக்கு சொல்லிக் கொடுத்தவன் தகுதியும் தெரியும் என்று காமராசர் அவர்கள் அன்றைக்குச் சொன்னார்.
இன்றைக்கு அத்தகைய உணர்வுகள் மேலோங்கிக் காட்டியிருக்கின்றன.
இப்பொழுது மறுபடியும் அந்தத் தகுதி, திறமை என்ற பெயராலே - நாம் போராடி நம்முடைய நீதிக் கட்சி - திராவிடர் இயக்கம்- நூறாண்டு காலம் - இதில் 50 ஆண்டுகாலம் திராவிடர் ஆட்சி- இன்றைக்குப் பார்த்துக் கொண்டிருக்கின்ற ஆட்சி.
நாம் பிறப்பிற்கு முன்பு உருவான ஆட்சி - நீதிக்கட்சி என்று சொல்லக்கூடிய திராவிடர் இயக்க ஆட்சி. அந்த ஆட்சிதான் ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்கெல்லாம் தெருவில் நடக்க உரிமை கொடுத்த கட்சி. இல்லையென்று யாரும் சொல்லிவிட முடியாது.
ஆறறிவு படைத்த
மனிதன் நடக்கக்கூடாதா?
வைக்கம் தெருக்களில் நாய் போகலாம்; பன்றி போகலாம்; கழுதை போகலாம்; மற்ற பிராணிகள் போகலாம் - ஆறறிவு படைத்த மனிதன் நடக்கக்கூடாது. காரணம், மகாதேவர் கோவில் அங்கே இருக்கிறது என்று சொல்லி,
எங்கள் சமுதாயத்தை இழிவுபடுத்தினான், மனித குலத்தில் ஒரு பிரிவை உருவாக்கி - அதற்காகப் போராட அய்யா அவர்கள் தமிழ்நாட்டிலிருந்து போனார்.
அதற்காகப் போராடியவர்களை சிறையில் அடைத்து விட்டார்கள். அப்பொழுது திருவிதாங்கூர் ராஜ்ஜியம் நடை பெற்றுக் கொண்டிருந்தது.
அங்கே இருக்கிறவர்கள் சிறைச்சாலையில் இருந்து, பெரியாருக்குக் கடிதம் எழுதினார்கள் - நீங்கள்தான் இந்தப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கவேண்டும் என்று. பெரியார் போராடுகிறார் - பெரியார் திரைப்படத்தைப் பார்த் தீர்களேயானால், உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.
அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டதினால், தந்தை பெரியார் அவர்கள் ‘‘வைக்கம் வீரர்’’ என்று அழைக்கப்பட்டார்.
தாத்தா இரட்டைமலை சீனிவாசன்
அதேநேரத்தில், 1924 ஆம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சி இருக்கிறது - பனகல் அரசர் முதலமைச்சராக இருக்கிறார். தாத்தா இரட்டைமலை சீனிவாசன் என்று இன்றைக்குச் சொல்லுகிறார்களே, அந்த தாத்தா இரட்டைமலை சீனிவாசன் சட்டமன்றத்தில் இருந்தபொழுது, அவரை முன்மொழியச் சொல்லி, ‘‘ஆதிதிராவிடர்கள் எல்லா இடங்களிலும், எல்லா கடைகளிலும், எல்லா குளங்களிலும் தண்ணீர் எடுக்க, பயன்படுத்த, நடக்க உரிமை உள்ள மனிதர்கள். அவர்களை யாராவது தடுத்தால், சட்டப்படி அவர்களைத் தண்டிப்போம் - அவர்களை சிறையில் பிடித்துப் போடுவோம்’’ என்று அரசாணை போட்ட ஆணை என்னுடைய கையில் இதோ இருக்கிறது.
திராவிடர் இயக்கம் கொடுத்த கொடை - பெரியார் அளித்த ‘வரம்’
திராவிடர் இயக்கம் என்ன செய்தது என்று சிலர் புரியாமல் இன்றைக்குக் கேட்கிறார்கள்.
ஏனென்றால், இன்றைக்கு இவன் வேட்டிக் கட்டிக் கொண் டிருக்கிறான். இவன் அம்மணமாக இருந்தபோது, திராவிடர் இயக்கம் என்ன செய்தது என்று தெரியாது அவனுக்கு. இன்றைக்கு நாம் தோளில் துண்டு போட்டிருக்கிறோம் என்று சொன்னால், திராவிடர் இயக்கம் கொடுத்த கொடை - பெரியார் அளித்த ‘வரம்’ - ‘வரம்’ என்பதில் எங்களுக்கு நம்பிக்கையில்லை. அவன் எந்தப் பொருளிலோ சொல்லு கிறானோ, அந்தப் பொருளிலேயே சொல்லுகிறேன்.
முழங்காலுக்குக் கீழே வேட்டி கட்ட முடியுமா? தெருவில் நடக்க முடியுமா? செருப்பு அணிந்துகொண்டு நடக்க முடி யுமா? என்பதையெல்லாம் நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.
இந்தத் திருத்துறைப்பூண்டி எனக்குப் புதிதல்ல. மாவட்டத் தலைவர் முருகய்யன் உரையாற்றும்பொழுது சொன்னார், நான் 12, 13 வயதிலே இந்தப் பகுதிக்கு வந்தேன் என்று சொன்னார்.
‘‘கருப்புச் சட்டை மாநாடு’’
இன்றைக்கு வருகிறபொழுது, பயிற்சியை முடித்துவிட்டு, தங்குகின்ற இடத்திற்கு அழைத்து வந்தபோது பார்த்தேன். மாநாடு நடந்த திரையரங்கம் - இன்றைக்கு செயல்படவில்லை என்று நினைக்கிறேன். அந்தத் திரையரங்கத்தில்தான் ‘‘கருப்புச் சட்டை மாநாடு’’ நடைபெற்றது. வாசன் தியேட்டர் என்று சொல்கிறார்கள்.
நண்பர்களே, இந்த இயக்கம் பதவிக்காக வந்த இயக்க மல்ல. நீங்கள் நன்றாக நினைத்துப் பார்க்கவேண்டும். இந்த சமுதாயத்தின் உதவிக்காகப் பிறந்த இயக்கம் என்பதை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
கருப்புச்சட்டை மாநாடு அறிவித்தவுடன், நாங்கள் எல்லாம் இங்கே வந்திருந்தோம். கலைஞர்தான் மாநாட்டுத் திறப்பாளர். திருவாரூரில் இருக்கிறார் கலைஞர். 95 வயது நிறைந்திருக்கின்ற தி.மு.க. தலைவர், அன்றைக்கு இளைஞர். திராவிடர் மாணவர் கழகத்தை நடத்திக் கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில், அந்த அறிவிப்பு வந்த நிலையில், கருப்புச் சட்டைப் படை மாநாடு என்று அறிவிக்கப்பட்ட நேரத்தில், அவருக்கு உடலெல்லாம் கொப்பளங்கள் - அம்மை வார்த்திருக்கிறது.
அம்மை நோயோடு வந்து மாநாட்டில் பங்கேற்ற கலைஞர்
வீட்டிலே இருக்கிறார். அப்படி இருந்த நேரத்தில்கூட, ஒரு நீண்ட கருப்பு சேர்வாணியைப் போட்டுக் கொண்டு, ரயிலில் பயணம் செய்து - மருத்துவர்களுடைய கூற்றையும் மறுத்துவிட்டு, நேரிடையாக வந்து திறப்பு விழாவில் கலந்து கொண்டார் - அந்த அம்மை நோயோடு!
அவர் அய்ந்து முறை முதலமைச்சராக இருந்தார் - சட்டமன்ற தேர்தலில் ஒருமுறை தோல்வியடைந்தது இல்லை என்பதெல்லாம் அவருடைய தனி ஆற்றல்- சிறப்பு.
எல்லாவற்றையும்விட, அவருக்குப் பெருமையளிப்பது இந்தக் கொள்கை வாழ்வு.
இங்கே உரையாற்றிய முருகய்யன் பல தகவல்களை சொன்னார். புஞ்சை சங்கேந்தி - முக்கூட்டில் நாங்கள் கூட்டத்தில் உரையாற்றிவிட்டு, இரவு 2 மணிக்குப் புறப்பட்டு, முளைகட்டிய - திறந்தவெளி கட்டை வண்டியில் பயணம் செய்து, மூன்று மணி, நான்கு மணிக்கு ஹாஜா பீர் வீடு - அது ரயிலடிக்குப் பக்கத்தில் இருக்கக்கூடிய வீடு. அவர்கள் கதவை தட்டினால், திறப்பார்களோ இல்லையோ என்று, திண்ணையிலேயே படுத்துவிட்டோம். பொழுது விடிந்ததும் அவர்கள் அறிந்துகொண்டார்கள் நாங்கள் திண்ணையில் படுத்திருக்கின்றோம் என்று. அப்படி வளர்ந்த இயக்கம் இந்த இயக்கம். யாருக்காக? உங்களுக்காக, உங்களுடைய பிள்ளை களுக்காக. உங்களுடைய பிள்ளைகளின் உரிமைக்காக என் பதை மறந்துவிடாதீர்கள்.
எனவே, இது ஒன்றும் திடீரென்று சத்யசாய்பாபா ஏமாற்றி யது போல கையைத் தூக்கியதால் பொத்தென விழுந்த மாலையில்லை. இட ஒதுக்கீட்டிற்காக ‘‘எத்தனை தோழர்கள் ரத்தம் சொறிந்தனரோ உங்கள் வேரினிலே’’ என்று சித்திரைச் சோலைகளைப் பார்த்து கவிஞன் பாடினானே, அதைப்போல, இந்த இயக்கம் உழைத்து வந்த இயக்கம் இது.
எங்கே சென்றாலும் பழைய நண்பர்களை நினைவுகூர்வேன்!
நான் எந்த ஊருக்குப் போனாலும், நம்முடைய பழைய தோழர்கள், ஹாஜா பீரைச் சொன்னதைப்போலவே, புலாம் காரன் என்கிற ஒரு நண்பர், அதுபோலவே, அய்யா பாராங் குசம், அவர் புதிய கல்விக் கொள்கைக்காக அந்தப் படையிலேயே வந்தவர். கடைசிவரையில் விடுதலை விற்பனை யாளராக  இருந்து, விடுதலையைப் பரப்புவது தன்னுடைய தொண்டுகளில் ஒன்று என்று கருதியவர்.
எங்களை வரவேற்ற இடம்
பார்பர் ஷாப்தான்!
அதுபோலவே, ரயிலடிக்குப் பக்கத்தில் நான் நண்பர் களிடம், பொன்முடி மாவட்டச் செயலாளர் போன்றவர்களிடம் கேட்டேன், அவரும்கூட, அய்யா காந்தீசுவரனைக் கேட்டால் தான் தெரியும்; எனக்குத் தெரியாது என்றார். வயதான பெரியவர், கருப்புச் சட்டை அணிந்திருப்பார் - சாம்பசிவம் என்று அவருடைய பெயர். ஒரு பெட்டிக்கடை வைத் திருப்பார்.
எங்களைப் போன்றவர்கள் இங்கே வந்தால், உபசரிப்ப தற்கும், வரவேற்பதற்கும் பெரிய பெரிய மிட்டா மிராசுகளோ அல்லது ஜமீன்தார்களோ வரவில்லை. நாங்கள் பல நேரங் களில் தங்கிய இடம், வரவேற்ற இடம் பார்பர் ஷாப். முடிதிருத் துகின்ற இடம். அவர்கள்தான் எங்களுக்குச் சொந்தக்காரர்கள்.
சேரிகள் என்று மற்றவர்கள் ஒதுக்குவார்கள். அவைதான் எங்களுகெல்லாம் பூங்காக்கள், விருந்தினர் இல்லங்கள். காரணம், இந்த இயக்கம் ஜாதியை ஒழிக்கின்ற இயக்கம். பேச்சில் அல்ல - நடைமுறையில். அதன் காரணமாகத்தான் பெரியார் கேட்டார்,
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அய்.ஏ.எஸ். அதிகாரிகள், அய்.பி.எஸ். அதிகாரிகள் சென்னையில் சேர்ந்து  ஒரு பெரிய வரவேற்பு கொடுக்கிறார்கள். சென்னை ஏ.வி.எம். ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில்.
பெரியாருக்குப் பாராட்டுக் கூட்டம் நடத்திய அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். அதிகாரிகள்!
‘‘அய்யா நீங்கள் இல்லையானால், நாங்கள் எல்லாம் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்.களாக வந்திருக்க முடியாது. உங்கள் உழைப்பினால்தான் இது நடந்தது’’ என்று பெரியார் அவர்களைப் பாராட்டுகிறார்கள்.
மற்றவர்களாக இருந்தால் என்னென்னவோ சொல்லியிருப்பார்கள்.
ஆனால், அந்தத்
தொண்டு செய்து பழுத்த பழம்
தூயதாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்
அவர்தாம் பெரியார் பார்
என்று சொன்னார்களே, அந்தத் தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்,
ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் நீதிபதியாக ஏன் வரவில்லை?
‘‘நீங்கள் எல்லாம் என்னை பாராட்டினீர்கள். அதிலெல் லாம் எனக்குப் பெரிய மகிழ்ச்சி இல்லை. என்னை வருத்து கின்ற ஒரு துன்பம் இருக்கிறது. என்ன அந்தத் துன்பம் என்று சொன்னால், நூறாண்டுகால உயர்நீதிமன்ற வரலாற்றில், இதுவரை ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் நீதி பதியாக ஏன் வரவில்லை; உங்களவர்கள் வழக்குரைஞர்களாக இல்லை - ஆகவே, அவர்கள் நீதிபதிகளாக வரவில்லை என்று சாக்கு சொன்னீர்கள். இப்பொழுது எங்களவர்கள் வழக்குரைஞர்களாக வந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட வர்கள் ஏன் நீதிபதியாக வரவில்லை என்று கேட்டுவிட்டு, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி செய்கின்ற இந்தக் காலத்தில் அது வராமல் - செய்யப்படாமல் - வேறு எந்தக் காலத்தில் செய்ய முடியும். ஆகவே, இதனை நான் முதல் பிரச்சினையாக கையிலெடுப்பேன் என்றார்.
அந்நிகழ்ச்சி முடிந்து நாங்கள் திரும்பும்பொழுது, வேனில் என்னிடம் அய்யா சொன்னார். ‘விடுதலை’யில், இதனை தலையங்கமாக எழுதுங்கள். முதலமைச்சர் உடனே கவனிப் பார். முதலமைச்சருடைய கவனத்திற்குச் செல்லும் என்றார்.
கலைஞரைப்போல ஒரு மாபெரும் முதலமைச்சரை கண்டுபிடிக்க முடியாது!
அக்காலத்தில் முதலமைச்சராக கலைஞர் அவர்கள் இருந்தபொழுது, அவர் போல் செயலாற்றிய ஒரு மாபெரும் முதலமைச்சரை கண்டுபிடிக்க முடியாது. அவருடைய முடிவுகள் எல்லாம் பளிச்சென்று இருக்கும்.
அந்த முடிவுகளைப்பற்றிக்கூட, இவர் ஒரு அவசர முடிவுக்காரர் என்று சொன்னார்கள். அதற்கு ஓங்கி மண்டை யில் அடித்தார். 60 ஆண்டுகால சட்டமன்ற வரலாற்றைப் பெற்ற கலைஞர் அவர்களிடம் கேட்டார்கள், ஆங்கிலத்தில் கேள்வி கேட்டார்கள்,
சீஷீu ஜிணீளீவீஸீரீ ணீக்ஷீமீ யீணீstஹ் பீமீநீவீsவீஷீஸீs
நீங்கள் அவசர முடிவுகள் செய்கின்றீர்கள் என்று கேட்ட பொழுது சொன்னார்,
கலைஞர் அவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. படித்தவர்தான். ஆனால், அனுபவத்தில் பெரியார் பள்ளிக்கூடத்தில் படித்த, குருகுலத்தில் படித்தவர். பொதுவாழ்க்கையில் இருந்தவர்.
அவர் உடனே சொன்னார்,
மி ணீனீ ஸீஷீt tணீளீவீஸீரீ யீணீstஹ் பீமீநீவீsவீஷீஸீ; கீமீ ஷீuக்ஷீ நிஷீஸ்மீக்ஷீஸீனீமீஸீt tணீளீவீஸீரீ ஹீuவீநீளீ பீமீநீவீsவீஷீஸீ
யீணீstஹ் பீமீநீவீsவீஷீஸீs என்பதற்கும் ஹீuவீநீளீ பீமீநீவீsவீஷீஸீ வித்தியாசம் இருக்கிறது. அவசர முடிவுகள் என்பது வேறு; விரைந்த முடிவுகள் என்பது வேறு.
அவசர முடிவுகள் தெளிவில்லாதது; விரைந்த முடிவுகள் தவக்கமில்லாதது. இதைத்தான் புரிந்துகொள்ளவேண்டும்.
‘விடுதலை’யில் எழுதப்பட்ட தலையங்கத்தைப் பார்த்த அடுத்த நிமிடம், சட்ட அமைச்சராக இருந்த மாதவனை அழைத்து கருத்து கேட்டார். அன்றைக்குத் தலைமை நீதிபதியாக இருந்தவர் ஜஸ்டீஸ் வீராசாமி அவர்களிடமும் கருத்து கேட்டார்.
டில்லிக்கு சலாம் போடுகின்ற முதலமைச்சராக கலைஞர் இருந்ததில்லை
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஜஸ்டீஸ் வரதராசன் அவர்கள் கடலூர் மாவட்ட நீதிபதியாக இருந்தவர். பட்டியலில் 12 ஆவது இடத்தில் இருக்கிறார். அவர் ஜோலார் பேட்டையைச் சேர்ந்தவர். இவரைப்பற்றி பெரியாருக்குத் தெரியாது. பெரியாரைப்பற்றியும் அவருக்குத் தெரியாது.
அப்படிப்பட்டவரை தேடிக் கண்டுபிடித்து, அவருடைய பெயரை டில்லிக்குப் பரிந்துரை செய்தார்.
டில்லிக்கு சலாம் போடுகின்ற முதலமைச்சராக இருந்த தில்லை; டில்லியை தன் பக்கம் ஆளுமையைக் கொண்ட முதலமைச்சராகத்தான் அண்ணாவும் சரி, கலைஞரும் சரி, ஏன்? எவ்வளவோ மாறுபட்டிருந்தாலும்கூட அண்மையில் மறைந்த ஜெயலலிதா அவர்களும் சரி. அந்த அளவிற்கு இருக்கக்கூடியவர்கள். ஏனென்றால், உண்மையைப் பேசுவ தற்கு எங்களுக்குத் தயக்கமில்லை.
உயர்நீதிமன்றத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த முதல் நீதிபதி
இப்பொழுதுபோல, போட்டிப் போட்டுக்கொண்டு யார் முந்தி என்று சரணாகதி படலத்தில், யார் அதிகமாக காலில் விழுவது? யார் நீண்ட நேரம் காலில் விழுவது? யார் காலை கெட்டியாகப் பிடித்துக் கொள்வது? என்பது அல்ல அன்றைக்கு.
ஜஸ்டீஸ் வரதராசன் அவர்கள்தான் உயர்நீதிமன்றத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த முதல் நீதிபதியாவார்.
திராவிடத்தால் யாரும்
வீழ்ந்தது கிடையாது
திராவிடர் இயக்கம் என்ன செய்தது? என்று புரியாமல் கேட்கிறார்கள்.
திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று அறியாமல் பேசு கிறார்கள்.
திராவிடத்தால் யாரும் வீழ்ந்தது கிடையாது - திராவிடத் தால் எழுந்தோம் என்பதுதான் மிக முக்கியமானது. வீழ்ந்த வர்கள் எல்லாம் டாஸ்மாக்கினால் விழுந்திருப்பானே தவிர, திராவிடத்தால் வீழ்ந்தவர்கள் கிடையாது. இதனை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
அப்படிப்பட்ட ஒரு எழுச்சி பெற்ற இயக்கம் - அவ்வளவு அடித்தளம் போட்டு வைத்ததெல்லாம் இன்றைக்கு நாசம் செய்யவேண்டும் என்பதற்காக - திட்டமிட்டு இங்கே சொல் லியதுபோல, ஆர்.எஸ்.எஸ். என்கிற அமைப்பு எது?
மத்திய அரசாங்கத்தில் இன்றைக்குப் பிற்படுத்தப்பட்ட வர்கள் அய்.ஏ.எஸ்., அதிகாரிகளாக, அய்.பி.எஸ். அதிகாரி களாக அதிகாரப்பூர்வமாக வரக்கூடிய வாய்ப்பு எப்படி வந்தது? எத்தனை போராட்டங்களை அதற்காக நடத்தியிருக் கிறோம் என்பதைப்பற்றி கவிஞர் அவர்கள் இங்கே சொன் னாரே!
இதையெல்லாம் சமூகநீதி -அந்த சமூகநீதிக்கு இப்பொழுது ஆபத்து. அதனுடைய ஒரு பகுதிதான் ‘நீட்’ என்று சொல்லக்கூடிய நுழைவுத் தேர்வு.
குறைந்த விலைக்கு விற்றுக் கொள்கிறீர்களே....
இங்கே உரையாற்றும்பொழுது நண்பர்கள் சொன்னார்கள், விற்றுக்கொள்வதைப்பற்றிக்கூட கவலையில்லை என்று.
தமிழன்கள் ரொம்ப சுலபமாக தங்களை விற்றுக் கொள்வார்கள் என்று.
புரட்சிக்கவிஞர் அவர்கள்,
உன்னை விற்றுக் கொள்ளாதே! என்று ஒரு கவிதையையே எழுதியிருக்கிறார்.
நீங்கள் விற்றுக்கொள்வதுபற்றிகூட எங்களுக்குக் கவலை யில்லை. குறைந்த விலைக்கு விற்றுக் கொள்கிறீர்களே என் பதுதான் எங்களுடைய கவலை. அதிக விலைக்காவது உங் களை விற்றுக் கொள்ளக்கூடாதா? என்பார்.
சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்
அதிகாரம் என்று சொன்னால், வெறும் அதிகார மட்டு மல்ல - ஒரு வடநாட்டு வி.பி.சிங். - இந்த இயக்கம் பெரியாரைப் பார்த்திராத ஒருவருக்கு - பெரியாருக்குப் பின்னால்,  அவருக் குப் புரிய வைத்தோம். சமூகநீதிக் காவலராக உயர்ந்தார். தமிழ்நாடுதான் என்னுடைய இரண்டாவது மாநிலம் - பிறப்பு மாநிலம். அடுத்த முறை நான் தமிழ்நாட்டில் பிறக்க விரும்பு கிறேன் என்று சொன்ன பெருமை சமூகநீதி காவலர் வி.பி.சிங் அவர்களுக்கு உண்டு. அவர்தான் மண்டல் கமிசனை அமல்படுத்தினார். அதற்காக 10 மாதங்கள்கூட அவருடைய ஆட்சியை நிலைக்கவிடாமல் கவிழ்த்தார்கள். அப்படிப்பட்ட ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் இன்றைக்கு மீண்டும் தமிழ்நாட்டில் காலூன்றி விடுவோம் என்கிறார்கள்.
அப்படியென்றால், அவர்களுக்கு கருட ஆழ்வார் கிடைத் திருக்கிறார்கள்.  தமிழ்நாட்டில் நாங்கள் காலூன்றுவோம் என்று செய்தியாளர்களிடம் பா.ஜ.க.வினர் சொல்கிறார்கள். இதை யார் சொல்லவேண்டும்? கால் இருக்கிறவர்கள் அல்லவா சொல்லவேண்டும். மிஸ்டு கால் கொடுக்கிறவர்கள் சொல்லலாமா? அதனாலேயே நாங்கள் அலட்சியமாகவும் இருக்கமாட்டோம்.
ஏனென்றால், இருட்டு, இருட்டில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். வெளிச்சம் இருந்தால் பளிச்சென்று தெரியும். அந்த இருட்டில், வெளிச்சத்தைக் காட்டுகின்ற ஒன்றே ஒன்று - பெரியார் தந்த அறிவுச்சுடர் சுயமரியாதை இயக்கமாகும். அதனால்தான் இந்தப் பணியை நாங்கள் செய்து கொண்டிருக்கின்றோம்.
இதுவரையில் எந்தக் கட்சி என்று கேட்டார்கள்? இப்பொழுது எந்த அணி? என்று கேட்கிறார்கள்
எங்களுக்கென்ன? நாங்கள் என்ன எம்.எல்.ஏ., ஆக வேண்டும் என்று நினைக்கின்றோமோ? அதிலும் இப் பொழுது எம்.எல்.ஏ.வாக இருக்கின்றவர்களின் கதியையெல் லாம் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றோமே? மன்னிக்க வேண்டும் எம்.எல்.ஏ. அவர்கள். எந்த ஊரில் இருக்கிறார்கள் என்றே அவர்களுக்கே தெரியவில்லை. எந்தக் கட்சியில் இருக்கிறார் என்றே அவருக்கே தெரியவில்லை. இதுவரையில் எந்தக் கட்சி என்று கேட்டார்கள்? இப்பொழுது எந்த அணி? என்று கேட்கிறார்கள்.
அப்படியிருக்கின்ற சூழ்நிலையில், இன்றைக்கு அரசியல் தனம் கொச்சைத்தனம், பச்சையாக, கொச்சையாக நடக்கக் கூடிய அளவிற்கு இருக்கிறது. நாங்கள் அரசியலில் நிற்காத வர்கள் என்பதால், எங்களுக்குப் பெருமை.
அடுத்த தலைவரை தெளிவாக உருவாக்கவேண்டும்
நாங்கள் அடுத்த தேர்தலைப்பற்றி கவலைப்படுவது என்பது இருக்கிறதே - நமக்கு மாறான ஒரு ஆட்சி வரக் கூடாது- இந்தக் கொள்கையை செய்யக் கூடிய ஆட்சியை உங்களுக்கு அடையாளம் காட்டுவோமே தவிர, நாங்கள் அந்தப் பதவிக்குப் போகக்கூடியவர்கள் அல்ல - நீங்கள் இதனை நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும். அடுத்த தலை வரை தெளிவாக உருவாக்கவேண்டும் - அதுதான் எங்க ளுக்கு இருக்கின்ற கவலையாகும்.
‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்கள் எவ்வளவு அவமானப் பட்டு இருக்கிறார்கள். இதுவரையில், அகில இந்திய தேர்வான அய்.ஏ.எஸ். தேர்வில்கூட, ரவிக்கையை அவிழ்க்க சொல்லியிருக்கிறார்களா? எவ்வளவு கேவலம் இது? மோடி அரசினுடைய சாதனையா இது? உள்ளாடையை அகற்று என்று சொல்கிறார்களே, இது நமக்கு  அவமானமில்லையா? இப்பொழுதுதான் பெரியாருடைய அவசியம் - மானம், மானம் என்று ஏன் சொன்னார்? நிறைய பேர் மானம் என்றால், மேலே பார்த்துக் கொண்டிருந்தார்கள். இப்பொழுதுதான் அவன் பார்க்கவேண்டிய இடத்தில் பார்க்கிறான்.
சுரா பானம் அருந்தியவர்கள் சுரர்கள்; அருந்தாதவர்கள் அசுரர்கள்!
நமக்குக் கட்சியில்லை, ஜாதியில்லை, மதமில்லை. இரண்டே அணிதான் இப்பொழுது. அந்தக் காலத்தில் தேவ தாசுரப் போராட்டம் என்றார்கள். அசுரன் என்றால், நம்மாள்; சுரா பானத்தை அருந்தியவர்கள் சுரர்கள், குடிகாரர்கள். அருந்தாதவர்கள் அசுரர்கள், குடிக்காதவர்கள்.
இதை தலைகீழாக ஆக்கிவிட்டார்களே, அசுரர்கள் என்றால், கேவலமானவர்கள் என்று நம்ப வைத்துவிட்டானே! இல்லாத கடவுளை நம்ப வைத்திருக்கிறார்கள் பாருங்கள். எல்லாம் பிள்ளை விளையாட்டு என்றார்கள். அந்தக் கடவுளைக் காட்டித்தானே ஜாதியைக் காப்பாற்றுகிறார்கள்.
ஆகவே, நண்பர்களே இந்த இயக்கம் அறிவு கொளுத்து கிற இயக்கம் - இந்த இயக்கம் மானத்தைத் துறந்த, மானத்தை மறந்த - அதனை மக்களுக்குத் தெளிவாக சொல்லுகிற ஒரு இயக்கமாகும்.
ஆக, எங்கள் பணி மிக நீண்ட பணி. எவ்வளவு காலத்திற்கு நோய்கள் இருக்கிறதோ -அவ்வளவு காலத்திற்கு மருத்து வர்கள் தேவை.
கருப்புச் சட்டைக்காரன்
காவலுக்குக் கெட்டிக்காரன்
எவ்வளவு காலத்திற்கு திருடர்கள் இருப்பார்களோ, கொள்ளையடிப்பவர்கள் இருக்கிறார்களோ - அவ்வளவு காலத்திற்குக் காவல்துறை தேவை. கருப்புச் சட்டைக்காரன் காவலுக்குக் கெட்டிக்காரன். அதுபோலத்தான் இந்த இயக்கம், மிக முக்கியமான இயக்கமாகும்.
திருவாரூரில் நாங்கள் முதலில் தீர்மானம் போட்டோம் - தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவித்து, வறட்சிக்குரிய நிதியைப் பெறவேண்டும். விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் - அவர்களின் தற்கொலைகள் பெருகிக் கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் எலிக்கறி சாப்பிட்டார்கள். இப்பொழுது விவசாயிகளின் தற்கொலைகள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன.
41 நாள்களாக டில்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகள்!
கடன் வாங்கி விவசாயம் செய்திருக்கின்றோமே, அந்தக் கடனை திருப்பிச் செலுத்த முடியாதே! - எல்லாம் வீணாயிற்றே! பருவ மழை பொய்த்துவிட்டதே - காவிரி தண்ணீர் இல்லையே என்று நினைத்துக் கொண்டிருக்கின்ற விவசாயினுடைய வேதனை - மானம்கருதி, தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளைப்பற்றி கவலைப்படாமல், அந்த விவசாயிகளையெல்லாம் கவனியுங்கள் என்று ஒரு அய்யாக் கண்ணு போன்றவர்கள், எத்தனை வகையான போராட்டங் களை நடத்த முடியுமோ, அத்தனைப் போராட்டங்களையும் டில்லியில் 41 நாள்களாக நடத்தினார்கள்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக இருக்கக்கூடிய ஒருவர், அந்தப் போராட்டக்காரர்களைச் சந்தித்து ஆறுதல் சொல்லியிருக்கவேண்டாமா? மனிதநேயம் இருந்தால் - அரசியலை விட்டு விடுங்கள் - நான் விவசாயிகளினுடைய வாழ்வை, புணருத்துராணம் செய்து, இரண்டு மடங்கு, இரு நூறு மடங்கு உயர்த்துவேன் என்றுதானே சொல்லிவிட்டு அந்தப் பதவிக்கு வந்தார்.
ஏமாந்த காலத்தில் ஏற்றங்கொண்டோர்
புலி வேஷம் போட்டு ஆடுகிறான்
பொதுமக்களுக்கு புல்லளவேனும்
மதிப்பேதும் தருகின்றானா?
என்று புரட்சிக்கவிஞர் அவர்கள் கேட்டாரே, அதுபோன்ற நிலைதானே!
நம்முடைய இளைஞர்களுக்கு, வாட்ஸ்அப் இளைஞர்க ளுக்குப் புரியவேண்டாமா?
ஆளுக்கு 15 இலட்சம் ரூபாய் வங்கிக் கணக்கில் வந்து சேரும் என்றார்கள்!
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஆளுக்கு 15 இலட்சம் ரூபாய் வங்கிக் கணக்கில் வந்து சேரும். வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள அந்தக் கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வந்து, அந்தப் பணத்தின்மூலம் இதனைச் செய் வோம் என்று சொன்னாரே - அதனைச் செய்தாரா? நெருக்கிக் கேட்டவுடன் ‘நாங்கள் எப்பொழுது அப்படிச் சொன்னோம்‘?’ என்று அப்பட்டமாகப் பொய் சொல்லுகிறார்கள். பொய் சொல்லுவதில் பி.ஜே.பி., சங் பரிவார்களை அடித்துக் கொள்ள உலகில் வேறு யாரும் இருக்க முடியாது.
கடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளரான நரேந்திர தாமோதர தாஸ் மோடி உத்தரப்பிரதேச மாநிலம் ஜக்தால்பூரில் நடை பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் (7.11.2013) என்ன பேசினார்?
“தீனதயாள் உபாத்தியாயா, வாஜ்பாய் போன்ற தலைவர் கள் தேசத்தை சீர்திருத்த பிறந்தவர்கள். இவர்கள் விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். இவர்கள் பரம்பரைப் பணக்காரர்கள் அல்ல; இவர்களுக்கு என்று அலகாபாத் போன்ற நகரங்களில் ஆடம்பர அரண்மனை போன்ற மாளிகை இல்லை.
நாட்டின் 80 விழுக்காடு மக்கள் விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் புரிபவர்கள். பஞ்சாப், அரியானா, உ.பி., பீகார் போன்ற மாநிலங்கள் முழுக்க முழுக்க விவசா யத்தை நம்பியே உள்ளன. ஆனால், இந்த விவசாயிகளின் உழைப்பை நீண்ட காலமாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு வீணாக்கி விட்டது. இங்கு என்ன வளம் இல்லை; நமது வளங்களை எல்லாம் காங்கிரசார் இத்தனை ஆண்டுகளாக கொள்ளையடித்து குபேரனாகி விட்டார்கள்.
இவர்கள் கொள்ளையடித்த பணத்தை எல்லாம், கருப்புப் பணமாக வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ளார்கள். இவர்கள் கொள்ளை யடித்து வெளிநாட்டில் பதுக்கி வைத்த கருப்புப் பணத்தின் மதிப்பு மிகவும் அதிகம். நான் ஆட்சிக்கு வந்தால் 100 நாள்களில் இந்த கருப்புப் பணத்தை மீட்டுவிடுவேன். அப்படி மீட்ட பணத்தை இந்த நாட்டின் ஒவ்வொரு ஏழையின் வங்கி கணக் கிலும் ரூ.15 லட்சம் போடுவேன்; வெளிநாட்டில் உள்ள கருப்புப் பணத்தின் அளவு அதிகமாக உள்ளது.
இந்தக் கருப்புப் பணத்தை மீட்டாலே இந்தியாவை தங்கக் கிளியாக மாற்றி விடலாம். அதன் பிறகு இந்தியா உலகின் பொருளாதார வல்லரசாக மாறிவிடும்.
காங்கிரசாரின் ஊழல்பட்டியல் மிகவும் நீளமாக உள்ளது. 2-ஜியிலிருந்து, ஆதர்ஸ் ஊழல், போபர்ஸ் பீரங்கி ஊழல், பங்கு வர்த்தக ஊழல், மாட்டுத் தீவனத்தில் ஊழல், ஸ்டாம்ப் பேப்பரில்கூட ஊழல் புரிந்துள்ளனர். இப்படி ஊழல் புரிந்து கொள்ளை யடித்த பணத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? இந்திய மக்கள் தொகையைவிட லட்சம் மடங்கு அதிகம். இதையெல்லாம் மீட்டுக் கொண்டு வரவேண்டுமென்றால், நீங்கள் எனக்கு வாக்களியுங்கள். எனக்கென்று மகன், மகள், மருமகன் இல்லை. வெளிநாட்டுக்குச் சென்று சொத்துகளை பதுக்கவேண்டிய அவசியமில்லை, நான் உங்கள் உடன் பிறந்தவன், உங்களுடனே இருப்பவன்.’’
இது யூ-டூயூப்பிலும் ஒலிக்கிறது.
15 லட்சம் ரூபாயை ஒவ்வொருவருக்கும் தருவோம் என்று மோடி சொன்னதற்கு ஆதாரம் இப்படி இருக்கும் பொழுது ‘‘அப்படிக் கூறவில்லை’’ என்று சொல்லுவது அண்டப் புளுகு அல்லவா? இப்பொழுது என்ன நிலவரம் தெரியுமா? 15 லட்சம் ரூபாய் பணம் கொடுப்பேன் என்று சொன்னவர்கள் - இப்போது வங்கிகளில் நாம் போடும் பணத்தை எடுத்தால் பணம் கட்டவேண்டும் என்று சொல்கிறார்கள்.
மயக்க பிஸ்கெட்டுகளை சாப்பிட்டுவிட்டு, இருந்ததையும் பறிகொடுத்து விட்டீர்கள்!
இதுதான் அவர்கள் செய்த புரட்சி. மயக்க பிஸ்கெட்டுகளை சாப்பிட்டுவிட்டு, இருந்ததையும் பறிகொடுத்து விட்டீர்கள் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டாமா? மீண்டும் இன் னொரு முறை ஏமாறப் போகிறீர்களா?
தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் அற்புதமான ஒரு கருத்தை சொல்வார்.
தமிழனைப்பற்றி எனக்கு என்ன கவலையென்றால், அவன் கீழே விழுவதைப்பற்றிகூட எனக்குக் கவலையில்லை. நேற்று விழுந்த இடத்திலேயே இன்றைக்கும் விழு கிறானே, அதுதான் கவலை.
ஏனென்றால், இவன் ஆண்டுக்கு ஆண்டு சாமிக்குக் கல்யாணம் செய்கிறவன்.
பெரியாரிடம் சிலர் மணவிழா அழைப்பிதழைக் கொண்டு போனால், அவர் உடனே கேட்பார், யாருக்குத் திருமணம் என்று கேட்பார்.
எனக்குத்தான் திருமணம் என்று அவர் சொல்வார்,
ஏங்க, உங்களுக்குத்தான் திருமணமாகி நீண்ட நாள்களாகி விட்டதே என்பார்.
டைவர்சா அல்லது வேறு ஏதாவது சங்கதியா என்று அருகிலிருப்பவர்கள் கேட்பார்கள்.
சாதாரண ஆளுக்கு, இந்தக் கேள்வியைப் பகுத்தறிவைப் பயன்படுத்துகிறவன், கடவுளுக்கு! அழகர் ஆற்றில் இறங்குகிறார் - மீனாட்சிக்கும் - சுந்தரேசருக்கும் வருஷ வருஷ கல்யாணம் என்று பெரிதாகப் போடுகிறார்கள்.
நம்முடைய பத்திரிகையாளர்கள் கொஞ்சம்கூட கவலைப்படாமல், மீனாட்சிக்கு திருக்கல்யாணம் என்று போடுகிறார்கள். பெண் மீனாட்சிக்கு ஒரு கல்யாணம்தான். ஆனால், கடவுள் மீனாட்சிக்கு வருஷா வருஷம் கல்யாணம்.
போன வருஷம் செய்தீர்களே கல்யாணம், அது என்ன ஆயிற்று? என்று கேட்டார் பெரியார்!
பெரியார்தான் கேட்டார், ஏண்டா, போன வருஷம் செய்தீர்களே கல்யாணம், அது என்ன ஆயிற்று? என்று.
எல்லாம் பிள்ளை விளையாட்டு என்றாரே வடலூரார் - அதுபோன்று, அழகர் ஆற்றில் இறங்குகிறார் என்றால், 5 லட்சம்பேர் அங்கே சேருகிறார்கள் - பச்சைப் பட்டுடுத்தி, குதிரையில் அவர் வருகிறார் என்கிறார்கள். அப்படி அவர் வருகையில், அவர் இறங்குவதற்குத் தண்ணீர் இல்லை. கடவுளின் சக்தியைப் பாருங்கள்!
விவசாயம் செய்வதற்குத்தான் தண்ணீர் இல்லை. அழகர் ஆற்றில் இறங்குவதற்காகவாவது வைகை ஆற்றில் தண்ணீர் வரவேண்டாமா? தண்ணீர் இல்லை; இருக்கின்ற தண்ணீர் ஆவியாக விடக்கூடாது என்று ஒரு வழியை கண்டுபிடித்தார் அமைச்சர் - அடுத்த நோபல் பரிசு அவருக்குத்தான் - அதிலொன்றும் சந்தேகமில்லை. கோவை ஜி.டி.நாயுடுவுக்கு உதிக்காத சிந்தனை இதெல்லாம். தண்ணீரை தெர்மா கோல் போட்டு மூடுங்கள் என்றார் - எந்தத் தெர்மா கோல் வியாபாரி லாபம் அடைந்தாரோ தெரியவில்லை.
இவ்வளவு கோமாளி கூத்து நடைபெறுகிறது. ஆனால், இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், அழகர் வருகிறார் - சரி, அவர் தங்கையின் கல்யாணத்திற்குப் போனாரா என்றால், அதுவும் இல்லை. பாதியிலேயே கோபத்தோடு திரும்பி போய்விட்டார்.
பக்தி வந்தால் புத்தி போய்விடும்;
புத்தி வந்தால் பக்தி போய்விடும்!
நான் இந்தத் திருமணத்திற்கு வந்தேன் - நடுவழியில் மண்டபத்தில் தங்கினேன் - வேற வேலை செய்துவிட்டேன் - அதனால் அசந்து தூங்கிவிட்டேன். அதனால் என்னால் சரியான நேரத்திற்கு வர முடியவில்லை. எனக்காகக் காத்திருக் காமல், திருமணம் நடந்துவிட்டது என்றவுடன், திரும்பினேன் என்று கதை சொல்கிறார்கள். இந்தக் கதையை சின்னப் பசங்களிடம் சொல்லலாம்.
போன வருஷம்தான் லேட்டா வந்தாரே, இந்த வருஷ மாவது டைமுக்கு வரவேண்டாமா? அவர்.
பக்தி வந்தால் புத்தி போய்விடும்
புத்தி வந்தால் பக்தி போய்விடும் என்று பெரியார் சொன்னாரே இல்லையா!
200 ஆண்டுக்கு மேலாக அழகர் லேட்டாத்தான் திருமணத்திற்கு வருகிறார்
ஒரு அலுவலகத்தில் பணி செய்கின்றவர், அரை மணிநேரம் தாமதமாகச் சென்றால், அதிகாரி கேட்பார், ‘‘ஏன் தாமதம்’’ என்று. இன்றைக்கு உங்களுக்கு வார்னிங்.
அடுத்த நாளும் அவர் தாமதமாக வந்தால், அரை நாள் சம்பளம் பிடிப்பு. அடுத்த நாளும் தாமதமாக வந்தால், உனக்கு 15 நாள் சம்பளம் பிடிப்பு. அதற்கடுத்த நாளும் தாமதமாக வந்தால், வேலைக்கே நீ வேண்டாம் என்றுதானே சாதாரண மான பகுத்தறிவு உள்ள மனிதன் செய்வான்?
200 ஆண்டுக்கு மேலாக அழகர் லேட்டாத்தான் திருமணத்திற்கு வருகிறார் - அப்படியே திரும்பிப் போகிறார் என்று புளுகுகிறார்கள்.
இப்படி நம்முடைய மக்களைத் தயார் செய்தால், அவன் எப்படி சிந்திப்பான்? இவன் சிந்திக்கக்கூடாது - அவன் தெளிவாக இருக்கக்கூடாது என்று மயக்க மருந்தை  கொடுத்து நம்மை ஏமாற்றுகிறார்கள்.
‘கேட்டது ரொட்டி, கிடைத்தது கல்’
தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவித்து, 40 ஆயிரம் கோடி ரூபாய் கேட்கிறார்கள். மத்தியில் இருந்து அதிகாரிகள் வந்து வறட்சிப் பகுதிகளைப் பார்க்கிறார்கள். வாடிய பயிர் களை எல்லாம் விவசாயிகள் அவர்களிடம் காட்டுகிறார்கள் - இந்தக் காட்சிகளையெல்லாம் தொலைக்காட்சியில் நீங்கள் பார்த்திருக்கலாம். அப்படி பார்த்து சென்ற அதிகாரிகள், மத்திய அரசிடம் அறிக்கை கொடுக்கிறார்கள். தமிழக அரசு, வறட்சி நிவாரணத்திற்காக 40 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டால், ‘கேட்டது ரொட்டி, கிடைத்தது கல்’ என்று ஒரு பழமொழி சொல்வார்கள். அதுபோன்று, இரண்டாயிரம் கோடி ரூபாயைக் கொடுக்கிறார்கள்.
ஒற்றை ஆட்சிதான் என்று
சொல்லக்கூடிய ஆபத்து
மாநில உரிமைகள் பறிபோய், ஜி.எஸ்.டி. வரி என்று வரும்பொழுது, மாநிலத்திற்கு வரக்கூடிய அந்த வருமானம் - இந்தியா முழுவதும் ஒரே வரி - எல்லாவற்றிற்கும் ஒரே வரி- இந்தியாவை ஒற்றை நாடாக்கவேண்டும் - கூட்டாட்சித் தத்துவத்திற்கு விடை கொடுக்கவேண்டும். ஒற்றை ஆட்சி தான் என்று சொல்லக்கூடிய ஆபத்து - அரசியல் சட்டத்தின் மீது பிராமணம் எடுத்துக்கொண்டே, அதனை தகர்க்கின்ற ஒரு ஆபத்து.
நீட்டுக்காக நாம் சட்டம் போட்டோம் என்றால், அது அரசியல் சட்டத்தின்கீழ் அது நமக்கு இருக்கின்ற உரிமை - அந்த உரிமைப்படி, தமிழக சட்டமன்றத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசிடம் கொடுத்தார்கள்.
ஜல்லிக்கட்டு பிரச்சினையிலும் அதுபோன்ற நிலைதானே ஏற்பட்டது. அதற்கு மட்டும் வேகமாக செயல்பட்டவர்கள் -  ‘நீட்’ தீர்மானத்திற்கு மட்டும் ஏன் முட்டுக்கட்டை போட்டார்கள்?கட்சியைப் பிரித்தார்கள் - ஒன்றாக இருந்தவர்களை இரண்டாக்கினார்கள். அதற்கு அதனைப் பயன்படுத்தினார் கள்.
தீர்ப்புக்கு மத்திய அரசு கட்டுப்பட்டதா?
கருநாடக மாநில அரசு கட்டுப்பட்டதா?
வறட்சிக்கு போதிய நிவாரணம் கிடையாது. அதோடு காவிரி நதிநீர் ஆணையம் - அதற்காக உச்சநீதிமன்றம் எத்தனையோ முறை தீர்ப்பு கொடுத்துவிட்டது.
‘நீட்’ பிரச்சினையில் சொல்கிறார், உச்சநீதிமன்றமே சொல்லிவிட்டது - அதனால் நாம் நீட்டை தடுக்க முடியாது என்று புரியாமல் சொல்கிறார்கள்.
சரி, உச்சநீதிமன்றம் சொல்லிவிட்டது என்று சொல்கிறீர் களே - காவிரி நதிநீர் ஆணையம் அமைக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுத்ததே - அதற்கு மத்திய அரசு கட்டுப்பட்டதா? கருநாடக மாநில அரசு கட்டுப்பட்டதா?
வெளிப்படையாகவே சொன்னார்களே, கட்டுப்படமாட் டோம் என்று. குறைந்த பட்சமாவது தண்ணீர் கொடுங்கள் என்று உச்சநீதிமன்றம் சொன்னாலும், ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்கமாட்டோம் என்று சொன்னார்கள்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஒருமுறை அல்ல - பலமுறை கூட்டி - கருநாடகத்தில் உள்ள அத்துணை கட்சிக் காரர்களும் - முன்னாள் முதலமைச்சர் - இந்நாள் முதலமைச் சர் - வருங்கால முதலமைச்சர் எல்லோரும் சேர்ந்து - கரு நாடகம்தான் முன்னாள் முதலமைச்சர்கள் அதிகம் இருக் கின்ற மாநிலம் - அப்படிப்பட்ட அந்த மாநிலத்தில், அத்தனை பேரும் ஒன்று சேர்ந்து தண்ணீர்தர முடியாது என்கிறார்கள்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பின் ஒரு பகுதியில், அதிகாரிகள் குழு அமைக்கவேண்டும் - அந்தக் குழு காவிரியில் எவ்வளவு தண்ணீர் இருக்கிறது என்று பார்த்து, அதன்படி பிரித்துக் கொடுக்கவேண்டும் என்று சொன்னார்கள்.
அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று தெளிவாக கருநாடகத்துக்காரர்கள் வெளிப்படையாகவே உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு நாங்கள் கீழ்ப்படிய மாட்டோம் என்கிறார்கள். அவர்கள்மீது நீங்கள் எடுத்த நடவடிக்கை என்ன?
எல்லோருக்கும் முதுகெலும்பை
அளித்தார் தந்தை பெரியார்!
தமிழனை தோப்புக்கரணம் போடு என்று சொன்னால், எவ்வளவு என்று எண்ணுங்கள் என்று தோப்புக்கரணம் போடத் தொடங்குவதா? வெட்கமாக இல்லையா உங்களுக்கு.
பெரியார் செய்த மிகப்பெரிய தொண்டு என்ன? எல் லோருக்கும் முதுகெலும்பை அளித்தார் தந்தை பெரியார்.
பெரியார் காலத்திற்கு முன், முதுகெலும்பு என்ற ஒன்று இருக்கிறது என்றே தெரியாமல் இருந்தார்கள். பெரியார்தான் சொன்னார், நிமிர்ந்து நில்! என்றார்.
இவர்கள்தான் ஹெலிகாப்டர் மேலே வருவதற்கு முன்பே, கீழே விழுந்தவர்கள் ஆயிற்றே! இன்னமும் நிமிர்ந்து நிற்கமாட்டேன் என்கிறார்களே! அது எவ்வளவு பெரிய கொடுமை! ஆகவே, நண்பர்களே! நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். தமிழகத்திற்குத் தண்ணீர் கொடுக்கமாட்டோம்; காவிரி நதிநீர் ஆணையத்தை நாங்கள் செயல்பட விடமாட் டோம் என்கிறார்கள்.
எவ்வளவு ரூபாய் செய்தாலும் கங்கையை தூய்மைப்படுத்த முடியாது
ஒரு பக்கத்தில் வறட்சி; இன்னொரு பக்கத்தில் கங்கா ஜலம் என்கிறார்கள். கங்கை புனித நீர் என்கிறார்கள். பாவத் தையெல்லாம் கங்கையில் போய் கழுவி விடுங்கள் என் கிறார்கள். கங்கையைத் தூய்மைப்படுத்த 2000 கோடி ரூபாய் முதல் கட்டம் என்கிறார்கள்.  2000 கோடி ரூபாய் அல்ல - 20 ஆயிரம் கோடி ரூபாய் - 2 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்தாலும் கங்கையை தூய்மைப்படுத்த முடியாது என்று நிபுணர்கள் அறிக்கை கொடுத்திருக்கிறார்கள்.
அந்தக் கங்கை ஜலத்தை குடிக்காதீர்கள் என்று சுகாதாரத் துறை சொல்கிறது. அப்பேர்ப்பட்ட கங்கா ஜலம், புனித கங்கை இவர்களுக்கு. அதுதான் நம்முடைய பிரதமருடைய தொகுதி யில் மிக முக்கியம்.
ஆனால், இங்கே தமிழ்நாட்டில், மிகப்பெரிய அளவிற்கு காவிரி நதிநீர் ஆணையம் என்பது விவசாயிகளுக்குப் பயன்படக்கூடியது மட்டுமல்ல நண்பர்களே! மிகக் கொடுமை என்னவென்றால், 2002 ஆம் ஆண்டில், அதாவது 15 ஆண்டு களுக்கு முன், தஞ்சை, திருவாரூர், நாகை போன்ற மாவட்டங் களில் 3 லட்சத்து 69 லட்சம் ஹெக்டர் ஏக்கரில் சாகுபடி மேற் கொள்ளப்பட்டு, கிட்டத்தட்ட, 10 லட்சம் டன்னும்,
2003 ஆம் ஆண்டில், 3.56 லட்சம் ஹெக்டேர் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு, 13 லட்சம் டன்னும்,
2006 இல் அதிக பட்சமாக 5.2 லட்சம் ஹெக்டேர் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு, மேற்கொள்ளப்பட்ட 31.2 லட்சம் டன் நெல்லும் உற்பத்தி செய்யப்பட்ட மாவட்டங்கள் நம்முடைய மாவட்டங்கள்.
ஆனால், அதற்குப் பின்னர் என்ன நடந்தது, டெல்டா மாவட்டங்களில் குறுவை மற்றும் சம்பா சாகுபடி பரப்பளவு குறையத் தொடங்கியது. காரணம் என்னவென்றால், தமிழகத்திற்குத் தண்ணீர் தரமாட்டேன் என்கிறார்கள்.
ஜூன் 6 ஆம் தேதியே மேட்டூர் தண்ணீர், 2011, 2012 ஆம் ஆண்டுகளில் திறக்கப்பட்ட ஒரு காலகட்டம் உண்டு.
அது படிப்படியாக வந்து - இன்றைக்கு அறவே நிறுத்தப் பட்டிருக்கிறது.
மத்திய அரசு ஒன்றும் செய்யவில்லை.
மேட்டூர் மற்ற பகுதியிலிருந்து மின்சாரம் வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது பாருங்கள் - அதில் மேகதாதுவில் ஒரு அணையை கட்டுவேன் என்று கருநாடகத்துக்காரர்கள் சொல்கிறார்கள். மேட்டூர் அணைக்குப் பக்கத்திலேயே ஒரு அணையை கட்டி, அந்த அணையின்மூலமாக மிகப்பெரிய ஒரு தடுப்பை உறுதி செய்யக்கூடிய அளவிற்கு அவர்கள் வந்திருக்கிறார்கள்.
மேகதாது அணையில், 400 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் உள்ளது என்று அவர்கள் சொல்லி வேகமாக அவர்கள் கட்டிக்கொண்டே போகிறார்கள், மத்திய அரசு ஒன்றும் செய்யவில்லை.
93 டி.எம்.சி. கொள்ளளவு உள்ள மேட்டூர் அணையில் செயல்படுத்தப்படும் இரு மின்திட்டங்களும், 250 மெகாவாட் மின்சாரம் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. ஆனால், கருநாடகத் தில் அவன் ஏற்பாடு செய்யப்பட்டு, அடுத்தபடியாக நடக்கப் போகிற, மேகதாது என்கிற அந்த அணையில், 400 மெகாவாட் மின்சாரம் - மின் உற்பத்தி நிலையம் அமைக்கப் பட்டுள்ளது.
ஏற்கெனவே காவிரி மேலாண்மை விஷயத்தில், கருநாடக அரசுக்கு சாதகமாக நடந்துவரும் மத்திய அரசு, மேகதாது அணை விவகாரத்தில் மட்டும் எதிர்ப்பாக நடக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுங்கள் என்று தமிழக அரசை எத்தனையோ முறை கேட்டாயிற்று. குறைந்த பட்சம் சட்டமன்றத்தில் உள்ள கட்சிகளையாவது - ஆளுங்கட்சியான அ.தி.மு.க., எதிர்க்கட்சியான தி.மு.க., காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி இருக்கிறது - எல்லோரையும் ஒன்றாக அழைத்து - தமிழ்நாடு ஒன்றாக இருக்கிறது என்று கொண்டு போய் நிறுத்தினால்தானே அவர்களுக்கு யோசனை வரும்.
தமிழ்நாட்டினுடைய உரிமைகளை நீங்கள் விட்டுக் கொடுக்காதீர்கள்!
தமிழ்நாட்டை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் - இங்கே கேள்வி கேட்பார் கிடையாது என்று நாதியற்ற ஒரு இடம் போல் இன்றைக்கு ஆக்கி வைத்திருக்கிறார்கள் என்று சொன்னால் - தமிழக அரசே தயவு செய்து நீங்கள் இந்தக் கொடுமைக்கு ஆளாகாதீர்கள். உங்களுக்கு ஆயிரம் கனங் கள் (சுமைகள்) இருக்கலாம் - அதற்காக தமிழ் நாட்டினுடைய உரிமைகளை நீங்கள் விட்டுக் கொடுக்காதீர்கள்.
அரசாங்கத்தை நம்பி பயனில்லை - மக்களைத்தான் நம்பியாக வேண்டும். அதனால்தான், மெரீனா, நெடுவாசல் போன்றவைகள்.
மெரீனாவில் கூடியவர்கள் எல்லாம் யார் என்பதற்குப் பதில் சொல்வதற்குப் பதில், ஆர்.எஸ்.எஸ்.காரன் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? இவர்கள் எல்லாம் தேச விரோதிகள் - இவர்கள் எல்லாம் பாகிஸ்தானின் ஏஜெண்டுகள் என்றார்கள்.
தேசத்திற்கும், இவர்களுக்கும் என்ன சம்பந்தம்? நூற்றுக்கு 3 பேராக இருக்கின்ற, ஆடு, மாடுகளை ஓட்டி வந்த கூட்டம் - மிகத் தெளிவாக கேட்டாரே, கருநாடகத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய காங்கிரஸ் தலைவர் கேட்டாரே, நீங்கள் ஆடு, மாடுகளை ஓட்டிக் கொண்டு வந்தவர்கள்தானே - உங்களுக்கும், இந்த நாட்டுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டார்.
97 சதவிகிதம் நம்முடைய மக்கள். அவர்களை ஜாதியால் பிரித்தான்; மதங்களால் பிரித்தான்; இப்பொழுது மதவெறியை  ஊட்டி, சிறுபான்மை - பெரும்பான்மை என்று சொல்லி, சிறுபான்மையினருக்கு சலுகையா? என்கிறார்கள்.
ஒரு ஜனநாயகம் வாழவேண்டுமானால், பெரும்பான்மை யோர் ஆளவேண்டும் என்பது எவ்வளவு நியாயமோ? அதுபோல, சிறுபான்மையோர் வாழவேண்டும் என்பது மிக முக்கியம்.
நீங்கள் எல்லாம் மாட்டுக்குப் பிறந்தவர்களா என்றார் விவேகானந்தர்
உண்ணுவதற்கு உரிமையில்லை - எதை சாப்பிடுவது என்பதை அவர்கள் முடிவு செய்கிறார்கள்.
எந்தக் கறியை சாப்பிடுவது - மாட்டுக் கறியா? ஆட்டுக்கறியா? கோழிக்கறியா?
பசு மாட்டிற்கு ஆதார் எடுக்கிறார்கள் - விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ்  சரியாக இல்லை -  பசுமாட்டை - கோமாதா - குலமாதா என்கிறார்கள்.
நீங்கள் எல்லாம் மாட்டுக்குப் பிறந்தவர்களா என்று கேட்டார் விவேகானந்தர்.
சுயமரியாதை பேரொளி வந்தால்தான்...
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்! எனவேதான் நண்பர்களே! எல்லா துறைகளிலும் ஒரு இருள்சூழ்ந்த சூழல் இருக்கிறது என்றால், இந்தப் பகுத்தறிவு ஒளி, தன்மானப் பேரொளி வந்தால், சுயமரியாதை பேரொளி வந்தால்தான் எழுச்சிப் பெற முடியும்!
எனவே, தமிழர்களே, தமிழர்களே!
கட்சியால் பிரிந்து நிற்காதீர்கள் -
ஜாதிகளால் பிரிந்து நிற்காதீர்கள் -
மதங்களால் வேறுபட்டு நிற்காதீர்கள் -
இந்த மக்கள் உரிமைகளைக் காப்பாற்றுவதற்காக - இந்த மண்ணின் உரிமைகளைக் காப்பாற்றுவதற்காக ஒன்றுபடுங்கள்!
மக்களை மதம் பிரிக்கும் - ஜாதி பிரிக்கும் - பெரியார் அனைவரையும் இணைப்பார், இணைப்பார், இணைப்பார்!
அதனைப் புரிந்துகொள்ளுங்கள் என்று கேட்டு, சிறப்பாக இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்த தோழர்களுக்கு நன்றியும், பாராட்டையும் தெரிவித்து என்னுரையை முடிக்கிறேன்.
நன்றி, வணக்கம்!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

--------------------------
நுழைவுத் தேர்வை எதிர்த்து...!
இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான தேர்வு என்று சொல்லுகிறார்களா? நாங்கள் ஒரு கேள்வி கேட்கிறோம் - நாணயமாக இருந்தால் அதற்கு அவர்கள் பதில் சொல்லட்டும்.
இந்தியா முழுவதும் மருத்துவக் கல்லூரியில் நுழைய வேண்டும் என்றால், ஏற்கெனவே எம்.ஜி.ஆர். அவர்கள் கொண்டு வந்த நுழைவுத் தேர்வை, திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் இணைந்து எதிர்த்துப் போராடினோம். 21 ஆண்டுகளாக இடையறாது போராடினோம். அதற்குப் பிறகுதான், கலைஞர் அவர்கள் சட்டம் இயற்றினார்.
‘விடுதலை’யில் நாங்கள் எழுதினோம் - நிபுணர் குழு அமைத்தால்தான் சரியாக இருக்கும் என்று. ஒரு நிபுணர் தலைமையில் குழு அமைத்து, அறிக்கை கொடுத்தார்கள், நுழைவுத் தேர்வு தேவையில்லை என்று.
அந்த சட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்திற்குச் சென்றார்கள். கலைஞர் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சட்டம் செல்லும் என்று நீதிமன்றம் சொன்னது.
மருத்துவக் கல்லூரிக்கு நுழைவுத் தேர்வு இல்லா ததால், நம்முடைய பிள்ளைகள், தாழ்த்தப்பட்ட, பிற் படுத்தப்பட்ட பிள்ளைகள் டாக்டர்களாக வந்தார்கள். தாழ்த்தப்பட்ட மக்களில்கூட அருந்ததியர்கள் என்று சொல்லக்கூடிய அடித்தளத்தில் இருக்கின்றவர்களுக் குத் தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று குரல் கொடுத் தது திராவிட இயக்கம். நாங்கள் எடுத்த முயற்சிகள் - இடதுசாரிகள் நண்பர்களும் ஒத்துழைத்தார்கள்.  அது பாராட்டவேண்டிய விஷயம்.
இன்றைக்கு இட ஒதுக்கீடே கூடாது என்று சொல்லி, எப்படியாவது பி.ஜே.பி. ரயிலில் ஏறவேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறாரே, ஒரு டாக்டர் - அவரே டாக்டராவதற்கு இந்த இயக்கம்தான் காரணம்.
--------------------------
இந்தியா முழுவதும் ஒரே கல்விக் கொள்கை இருக்கிறதா?
இட ஒதுக்கீட்டிற்காகப் போராடுகிறோமே, எங்களு டைய பிள்ளைகளுக்காகவா நாங்கள் போராடுகிறோம்.
முதலில் இந்தியா முழுவதும் ஒரே கல்விக் கொள்கை இருக்கிறதா? கல்வித் திட்டம் இருக்கிறதா?
சி.பி.எஸ்.இ. பாடத் திட்டம் வேறு - நாம் போராடிய தினால், கலைஞர் அவர்கள் ஆட்சியில் இருந்ததினால், சமச்சீர் கல்வி என்று வந்ததினால், இதற்கு முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு, இன்றைக்குப் பிளஸ் 2 தேர்வில் 92 சதவிகிதம் தேர்ச்சி வந்திருக்கிறது என்றால், அதற்குக் காரணம், திராவிடர் ஆட்சி - சமச்சீர் கல்வி என்ற புதிய கல்விக் கொள்கையை உருவாக்கியதுதான்.
சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின் அடிப்படையில் நீங்கள் நீட் தேர்வு நடத்துகிறீர்கள். சி.பி.எஸ்.இ. தமிழ் நாட்டில் 10 சதவிகிதம்தான் இருக்கிறது; 90 சதவிகிதம் சி.பி.எஸ்.இ அல்லாத பள்ளிக்கூடங்கள்.
உனக்கு அறிவுநாணயம் இருந்தால், அந்தப் பாடத் திட்டத்திற்கு வேறு திட்டம்; இந்தப் பாடத்திட்டத்திற்கு வேறு திட் டம் என்று இருக்கவேண்டும் அல்லவா!
அதேநேரத்தில், நம்முடைய பிள்ளைகளை ஏமாற்றுவ தற்கு, பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப்பில் மூழ்கியிருக்கிறார் களே நம்முடைய இளைஞர்கள், மோடி வந்தால் வளர்ச்சி! வளர்ச்சி என்றார்கள். யாருக்கு வளர்ச்சி, மேற்படியானுக்கு வளர்ச்சி. நமக்கா வளர்ச்சி? நன்றாக நீங்கள் யோசித்துப் பார்க்கவேண்டும். வடநாட்டுக்காரனுக்கு வளர்ச்சி.
நம்முடைய உரிமைகளைத் தடுக்கின்றவர்களுக்குப், பறிக்கின்றவர்களுக்கு மிகப்பெரிய வளர்ச்சி. நாம் காலம் காலமாக பாதுகாத்துக் கொண்டிருந்த - சமு தாயத்தை மாற்று கின்ற ஒரு இயக்கம்.
எப்படி சிந்திப்பான்? இவன் சிந்திக்கக்கூடாது - அவன் தெளிவாக இருக்கக்கூடாது என்று மயக்க மருந்தை  கொடுத்து நம்மை ஏமாற்றுகிறார்கள்.


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...